Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை - Page 17

neela-thaamarai

குஞ்ஞிமாளு:    (மெதுவாக கண்களை மூடியவாறு பிரார்த்திக்கிறாள்) காப்பாத்தணும்! காப்பாத்தணும்!

அவளுக்கு முன்னால் தடியை ஊன்றியவாறு ஆலமரத்திற்குக் கீழே இருக்கும் வயதான பெரியவர் நின்றிருக்கிறார்.

கிழவர்:    பாகவதரோட கண்கள் மட்டும் சாகவே இல்ல. என்னைப் பார்த்ததும், அந்தக் கண்கள் என்னை யார்னு அடையாளம் கண்டுபிடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். சரி... கல்யாண வேலையை விட்டுட்டு இங்க வந்து நிக்கிறியே, குழந்தை?

குஞ்ஞிமாளு:    சமையலுக்கு ஆளுங்க இருக்காங்க.

கிழவர்:    அடக்கி வைக்க முடியாதப்போ கொஞ்சம் சத்தம் போட்டு அழலாம். அது ஒரு வகையில மனசுக்கு நிம்மதியா இருக்கும்!

அவளின் முகத்தைப் பார்க்காமல் அவர் தடியை ஊன்றியவாறு நடந்து போகிறார்.

வீட்டின் வாசலிலும், உள்ளேயும் திருமண விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமகனும், மணமகளும் இருக்கிறார்கள். குட்டிசங்கர மேனனின் தர்மசங்கடமான நிலை.

சமையலறையில் விருந்து சாமான்கள். எல்லாம் பரிமாறப்பட்ட ஒரு இலையைத் தூக்கிப் பிடித்தவாறு குஞ்ஞிமாளு வெளியே செல்கிறாள்.

ஆலமரத்துக்குக் கீழே அமர்ந்திருக்கும் கிழவரின் முன்னால் அந்த இலையை அவள் வைக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    நான் பாத்திரத்துல பாயாசம் கொண்டு வர்றேன். முதல்ல சாப்பாட்டைச் சாப்பிடுங்க.

கிழவர் ஆர்வத்துடன் உண்ண ஆரம்பிக்கிறார். எங்கேயோ பார்த்தவாறு கவலையுடன் நின்றிருக்கும் அவளை திடீரென்று அவர் பார்க்கிறார். சோற்று உருண்டையை உருட்டிக் கொண்டிருந்த அவரின் கைகள் நிற்கின்றன. தாடை எலும்பின் அசைவும் நிற்கிறது. ஒரு ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரம் திடீரென தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு விட்டதைப்போல, அவர் எந்தவித அசைவும் இல்லாமல் அமர்ந்திருக்கிறார். பசியே இல்லாமற் போனதுபோல் உணர்கிறார் அவர். குஞ்ஞிமாளு திரும்பியபோது, அதை கவனிக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    என்ன சாப்பிடல?

கிழவர்:    என்னோட பசி செத்துப் போச்சு, மகளே. போதும்.

அவர் இலையை எடுக்கிறார். பிறகு அதைத் தூக்கி விட்டெறிகிறார். அதற்காகக் காத்திருக்கும் தெரு நாய்கள் சண்டை போட்டு அதைத் தின்கின்றன.

53

ரவு நேரம்.

சமையலறையை நோக்கி இரவில் படுக்கப்போகும் ஆடைகளுடன் (பகலில் அணிந்திருந்த நகைகளும், சூடியிருந்த மலர்களும் அப்படியே இருக்கின்றன. புடவை மட்டும் சாதாரண புடவையாக மாறியிருக்கிறது) ரத்னம் வருகிறாள்.

அவள் கூஜாவில் சீரகத் தண்ணீரை ஊற்றிக் கொண்டு போக முயலும்போது, சிரித்தவாறு குஞ்ஞிமாளுவிடம்:

“எவ்வளவு காலமா இங்க வேலை பாக்குறே?”

குஞ்ஞிமாளு:    கொஞ்ச நாட்களாத்தான். மேலே போறதா இருந்தா பச்சைத் தண்ணி கொண்டு போங்க. சீரகத் தண்ணி அவர் குடிக்க மாட்டாரு.

அந்தப் புதிய தகவலைக் கேட்டு ரத்னம் சீரகத் தண்ணீரைப் பாத்திரத்தில் திரும்பவும் ஊற்றுகிறாள். குஞ்ஞிமாளு கூஜாவில் தண்ணீரை நிரப்பித் தருகிறாள்.

ரத்னம்:    வாசல்ல கூட்டம் குறைஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்.

குஞ்ஞிமாளு:    படுக்குறப்போ தெற்குப் பக்கம் இருக்குற ஜன்னலை அடைச்சிடுங்க. பூனை அது வழியாதான் எப்பவும் உள்ளே வரும்.

ரத்னம் ஆர்வம் மேலோங்க இந்த கிராமத்துப் பெண்ணைப் பார்க்கிறாள்.

குஞ்ஞிமாளு:    பாத்திரத்தோட படி ஏறுறப்போ, பார்த்து போகணும். மூணாவது படி இலேசா அசையம்.

ரத்னம் வியப்புடன் அவளைப் பார்க்கிறாள். பின்னர் திரும்பிப் பார்த்தாவறு-

ரத்னம்:    குஞ்ஞிமாளு, நீ கோயில் குளத்துலயா குளிப்பே?

குஞ்ஞிமாளு:    ஆமா...

ரத்னம்:    பணம் வச்சா பூ மலரும். மலர்ந்தால் நினைச்சது நடக்கும்னு சொல்றாங்களே! உண்மையா?

குஞ்ஞிமாளு:    நீ ஏன் அதைச் சோதிச்சுப் பார்க்கல, குஞ்ஞிமாளு?

குஞ்ஞிமாளு வேதனையுடன் புன்னகைக்கிறாள்.

இரவு நேரம்.

ராக ஆலாபனை கேட்கிறது.

நிசப்தமான வீடு.

குஞ்ஞிமாளு தொழுவத்தில் பசுவைப் பார்த்துவிட்டு வெளியே வந்து நின்று கொண்டிருக்கிறாள். வாழைத் தோப்பைத் தாண்டி முருங்கை மரம். அவள் கையில் விளக்கு இருக்கிறது. இப்போதும் ராக ஆலாபனை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அவள் படுக்கிறாள். இருந்தாலும் கண்களை மூடவில்லை. எங்கேயோ இருந்து வரும் ராக ஆலாபனை இன்னும் நிற்கவில்லை. அவள் திடீரென்று என்னவோ நினைத்து, எழுந்து உட்காருகிறாள். அப்போது ராக ஆலாபனை நிற்கிறது.

கலக்கத்துடன் குஞ்ஞிமாளு:

“அம்மா, உறங்கிட்டீங்களா?”

அம்மாவின் பதில் குரல்:   இல்ல.... என்ன விஷயம்?

குஞ்ஞிமாளு:    பாகவதர் பேச முடியாத நிலையில இருக்காருன்னு கேள்விப்பட்டேன். பிறகு... இப்போ யாரு அங்கேயிருந்து பாடுறது?

அம்மா:    நான் கேட்கல. உனக்கு அப்படி தோணியிருக்கும்.

அவள் படுக்கிறாள். அப்போது பாட்டு கேட்கவில்லை. இருட்டில் கண்களைத் திறந்தவாறு அவள் படுத்திருக்கிறாள். அவளின் முகம் தெளிவற்றதாகிறது.

54

மையலறைப் பகுதியில் மேஜை மேல் ரத்னம் பலகாரங்களை வைக்கிறாள். குஞ்ஞிமாளு கொண்டுவந்து தரும் பொருட்களை அவள் வாங்கி வைக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    கூப்பிட்டபிறகு வந்தாபோதும். ஒரே நிமிஷம்... மிளகாய் துவையல் இன்னும் தயாராகல.

ரத்னம்:    சட்னி இருக்குறது போதாதா? துவையல் வேற வேணுமா?

குஞ்ஞிமாளு:    கட்டாயம் வேணும்னு சொல்லுவாரு.

ரத்னம்:    (சிரித்தவாறு) எனக்குத் தெரிஞ்சதை விட தாஸ் அத்தானுக்கு எதெது பிடிக்கும், எதெது பிடிக்காதுன்னு குஞ்ஞிமாளு, நீதான் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கே. (திறந்த மனதுடன்) சரி... துவையல் அரை. குஞ்ஞிமாளு, இந்த மாதிரி நிறைய விஷயங்களை உன்கிட்ட இருந்து நான் தெரிஞ்சிக்க வேண்டியதிருக்கு.

55

கல்.

அம்மாவின் காலில் மருந்து தடவிக் கொண்டிருக்கிறாள் ரத்னம். வெளியே ரத்னத்தின் புடவையையும் மற்ற துணிகளையும் கொண்டு வரும் குஞ்ஞிமாளுவிடம்-

அம்மா:    ரத்னம்தான் இருக்காளே! நீ வேணும்னா இன்னைக்கு வீட்டுக்குப் போயிட்டு வா.

ரத்னம்:    சாயங்காலம் வந்திடணும். தாஸ் அத்தான் போகப்போறாரு. நீ கட்டாயம் என் கூட துணைக்குப் படுத்துக்கிறதுக்கு வேணும்.

குஞ்ஞிமாளு:    நான் வீட்டுக்குப் போகல.

அம்மா:    பாட்டிக்கு உடம்புக்கு ஆகாமத்தானே இருக்கு! போயி பார்த்துட்டு வா.

குஞ்ஞிமாளு ஒன்றும் பேசாமல் மவுனமாக இருக்கிறாள்.

ரத்னம்:    போயி பார்த்துட்டு வா, குஞ்ஞிமாளு.

குஞ்ஞிமாளு உள்ளே போகிறாள்.

அம்மா:    இவளோட மாமா மகன் ஒருத்தன் இருக்கான். இவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு வந்தான். இவளுக்கு அவனைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல போல இருக்கு.

ரத்னம்:    ஏனாம்?

அம்மா:    இவளுக்கு விருப்பமில்லைன்றப்போ, நாம இவளைக் கட்டாயப்படுத்தினா நல்லாவா இருக்கும்?

ரத்னம்:    தாஸ் அத்தான் என்ன சொல்றாரு?

அம்மா:    அவன் என்ன சொல்வான்? அவனைப் பொறுத்தவரை புத்தகத்தையும், எழுதுறதையும் தவிர அவனுக்கு வேற எதைப்பற்றி தெரியும்? பாவம்...

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version