Category: சிறுகதைகள் Written by சுரா
நினைவுச் சின்னம்
எஸ். கெ. பொற்றெக்காட்
தமிழில்: சுரா
சுதர்ம்மாஜி புகழ் பெற்ற ஒரு கவிஞராக இருந்தார். உணர்ச்சிகள் நிறைந்த ஏராளமான ஒளிரும் படைப்புகளால் அவர் இலக்கிய ஆலயத்தைப் பிரகாசமாக ஆக்கினார். அவருடைய பேனா நெருப்பென கனன்றது. அந்த கவிதைகள் உயர்ந்த சிந்தனைகள், சர்வதேச கொள்கைகள் ஆகியவற்றை ஆழமாகக் கொண்டிருக்கும் நெருப்பு குண்டமாக இருந்தன.
Category: சிறுகதைகள் Written by சுரா
பப்பு குருடனான கதை
எம். முகுந்தன்
தமிழில்: சுரா
சிலர் பிறக்கும்போதே குருடர்களாக ஆவார்கள். சிலர் கண்ணில் வசூரி வந்து குருடர்களாக ஆகிறார்கள். சிலர் திமிர் பிடித்து குருடர்களாக ஆகிறார்கள்.
பப்புவிற்கு திமிர் பிடிக்கவில்லை. கண்ணில் வசூரி வரவில்லை. பிறந்த போது கண்ணுக்கு பார்க்கும் சக்தி இருந்தது.
எனினும், பப்பு குருடனாக ஆகி விட்டான்.
Category: சிறுகதைகள் Written by சுரா
ந்யூ இயர்
(பஞ்சாபி கதை)
-அஜித் கவுர்
தமிழில்: சுரா
டைப் ரைட்டருடன் போராடிக் கொண்டிருந்த கபூரை அமைச்சரின் பணியாட்கள் குழுவில் நியமித்தவுடன், ஒரே இரவில் கபூர் 'கபூர் ஸாஹப்' ஆகி விட்டான்.
அமைச்சரின் பெர்சனல் அசிஸ்டெண்ட்! கபூர் ஸாஹப்!
ஒரே நாளில் தான் பெரிய ஆளாக ஆகி விட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது.
Category: சிறுகதைகள் Written by சுரா
வாழ்க்கைப் போட்டி
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா
மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு அவன் இறுதி மூச்சை விட்டான். மூத்த பெண்ணுக்கு திருமண வயது வந்து விட்டது. அவளை ஒருவனுடன் சேர்த்து வைத்திருந்தால், ஒரு ஆணின் துணை கிடைத்திருக்கும். வாழ்வதற்கான வழியும் இல்லை. இருபது செண்ட் கொண்ட ஒரு நிலமும், ஒரு சிறிய வீடும்தான் மொத்த சொத்தே.
Category: சிறுகதைகள் Written by சுரா
நம்முடைய காலகட்டத்தில்
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா
ராமகிருஷ்ணன் ட்ரவுசரின் பாக்கெட்களில் கைகளை வைத்தவாறு நடைபாதையின் வழியாக மெதுவாக நடந்தான். அவனுடைய மனதில் சுகமான ஒரு குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ஒரு சஹாரா பாலைவனமாக இதுவரை இருந்தது வாழ்க்கை. ஆசைகள் உதிர்ந்து விழுவதும், கனவுகள் வாடுவதும் மட்டுமே எப்போதும் நடந்திருக்கின்றன. இப்போது முதல் தடவையாக சில தளிர்கள் தலையை நீட்டுகின்றன. அதை நினைத்தபோது ராமகிருஷ்ணனுக்கு பெருமையும், சந்தோஷமும் உண்டாயின. அவனுடைய வறண்டுபோய் காணப்பட்ட உதடுகளில் கள்ளங்கபடமற்ற ஒரு புன்சிரிப்பு பரவவும் செய்தது. மிகவும் தாமதமாக நடந்தாலும் அவனும் ஒரு மனிதனாக ஆகப் போகிறான்.