Category: சிறுகதைகள் Written by சுரா
நன்றி கெட்ட செயல்
(பஞ்சாபி கதை)
அஜீத் கவுர்
தமிழில்: சுரா
அவர்கள் எங்களுடைய பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்.
திரு. கோயல் மிகப் பெரிய கான்ட்ராக்டர். டில்லியில் ஏதாவது இடத்தில் அவருடைய கான்ட்ராக்டில் கட்டிடங்கள் உயர்ந்து கொண்டிருக்கும். மூத்த மகளின் திருமணம் முடிந்து விட்டது. அவளுடைய கணவனின் வீட்டில் இருப்பவர்களுக்கு பதர்பூரிலோ சூரஜ்கண்டிலோ சுரங்கங்கள் இருந்தன, மென்மையான மண். அந்தச் சுரங்கங்களின் கான்ட்ராக்டை மண்ணின் விலைக்கு வாங்கியிருப்பார்கள்.
Category: சிறுகதைகள் Written by சுரா
ஒரு சிறிய குறும்புத்தனம்
(ரஷ்ய கதை)
ஆன்டன் செக்காவ்
தமிழில்: சுரா
குளிர் காலத்தின் பிரகாசமான ஒரு மாலை வேளை. காலடிகளில் பனி, மரத்துப் போகச் செய்யும் அளவிற்கு குளிர். பெரிய ஒரு மலையின் மேலே என்னுடைய கையில், தன் கையைக் கோர்த்தவாறு நின்று கொண்டிருந்த நாதெங்காவின் நெற்றியில் விழுந்து கிடந்த தலைமுடிகளிலும், மேலுதடில் இருந்த சிறு சிறு ரோமங்களிலும் பனியின் பிரகாசம்... எங்களுடைய காலடிகளுக்குக் கீழே கீழ் நோக்கி நீண்டு கிடக்கும் மலைச் சரிவின் பிரகாசத்தில் சூரியன் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. எங்களைத் தவிர, மலையின் மேலே துணியால் மூடப்பட்ட ஒரு சறுக்கல் வண்டி மட்டும்...
Category: சிறுகதைகள் Written by சுரா
முழுமையற்ற சிலை
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா
சவுக்கார் கோவிந்தரேயின் மாளிகையிலிருந்து சாயங்காலம் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன் மாலி, சங்கரபாபாவிடம் கூறினான்:
‘பாபா, உங்களை நாளைக்கு காலையில் எஜமானன் பார்க்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.’
நரைத்த தாடி மண்ணில் படுகிற அளவிற்கு குனிந்து அமர்ந்து, மினியுடன் ‘யானை’ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த பாபா அதை கேட்டாரா என்பதென்னவோ சந்தேகம்தான்.
Category: சிறுகதைகள் Written by சுரா
சாயங்கால வெளிச்சம்
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா
அந்த வீடு ஆட்கள் வசிக்காததைப் போல இருந்தது. அங்கிருந்த சமையலறையிலிருந்து புகை வரவில்லை. கதவுகளும் சாளரங்களும் எப்போதும் அடைந்தே கிடந்தன. போர்ட்டிக்கோவின் இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்திருந்த உயரமான போகன்வில்லியா செடிகள் தவிர, வாசலிலும் சுற்றியிருந்த இடங்களிலும் காடு வளர்ந்திருந்தது.
Category: சிறுகதைகள் Written by சுரா
ஓநாய்
எம். முகுந்தன்
தமிழில்: சுரா
மனம் முற்றிலும் நல்ல நிலைமையில் இல்லை. கவலை, விரக்தி, குழப்பம் நிறைந்த தன்மை, களைப்பு... வீட்டில் இருக்கும்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும். அதனால் ஒழுங்காக அலுவலகத்திற்குச் செல்கிறேன். பதினைந்து, முப்பது நிமிடங்களுக்கு முன்பே போய் விடுகிறேன். நேரத்தைப் பார்ப்பதில்லை. அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, பணிகளைச் செய்வதில்லை.