Lekha Books

A+ A A-

நீ எங்கே? என் அன்பே ! - Page 6

“ப்ரொட்யூசர் செம பார்ட்டியாச்சே கன் பேமெண்ட். விட்ற முடியுமா? லோ பட்ஜெட் கம்பெனிக்கு குடுத்த கால்ஷீட்டை இந்தப் பெரிய கம்பெனிக்குக் குடுத்திருப்பாரு.”

“அதை விடு. வேற என்ன மேட்டர்?”

“நடிகை சூர்ய பிரபாவுக்கு கல்யாணமாம். இனிமே நடிக்க மாட்டாங்களாம்.”

“இடுப்புல டயர் மாதிரி சதை போட்டாச்சு. அக்கா, அண்ணி காரக்டர் பண்ற வயசாச்சு. இனிமே என்ன கல்யாணந்தான்.”

“இதில வேற பந்தா, இனிமே நடிக்க மாட்டேன்னு. இவங்களை யாரு நடிக்கக் கூப்பிடறாங்களாம்.”

“ஹா ஹா ஹா” ராகம் போட்டு சிரித்தான் ராம்குமார்.

“கூப்பிடறாங்களோ இல்லையோ, இந்த லேடி ஆர்ட்டிஸ்டுகளுக்கு அப்படி ஒரு பந்தா டைலாக் வுட்டே ஆகணும். சரி, இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?”

“எட்டு மணிக்கு நேரா விஜயா கார்டன்ஸ் போறோம். அதுக்கப்புறம் ஆர்.கே.ஸ்டியோவில நைட் ஷிப்ட். ஃபைட் சீன் பண்ணணும்.”

“ஓ.கே. கிளம்பலாமா? மணி எட்டாகப் போகுதே?”

“அ... வந்து... ராம் ஒரு விஷயம். விஜயா கார்டன்ல லஞ்ச் ப்ரேக்ல மல்லிகா பத்திரிகைக்கு ஒரு பேட்டி...”

“வாட்? லஞ்ச் ப்ரேக்ல பேட்டி, ரிலாக்ஸ் மூடே இருக்காதே அருண்?”

“ப்ளீஸ், ராம், ப்ராமிஸ் பண்ணிட்டேன். அந்த ரிப்போர்ட்டர் பொண்ணுகிட்ட.”

“ஓகே, இப்ப புரியுது. ரிப்போர்ட்டர் ஒரு பொண்ணுல்ல. உடனே ஓக்கே சொல்லி இருப்ப. ஒரு புடவை, சூடிதார் வுட்றமாட்டியே.”

“பார்ட்டி இப்ப ஃபீல்டுல இருக்கறவங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுடும் பாஸ். டக்கர் ஃபிகர்.”

ராம்குமாருக்கு பால்யத்திலிருந்தே நெருங்கிய நண்பனான அருண், ராம்குமாரின் திரை உலக வாழ்க்கையிலும் நண்பனாகவும், காரியதரிசியாகவும் இருந்தான். நட்புறவு மாறாத உணர்வில் செல்லமாக ராம் என்றும், பாஸ் என்றும் அழைப்பான். பல வருட நட்பை நினைத்து பெருமைப்பட்டான் ராம்குமார்.

“என்ன பாஸ், யோசிக்கறீங்க? ஒரு பத்து நிமிஷந்தான் பாஸ்.”

“சரி, சரி. ஒழிஞ்சுப் போ.”

“தாங்க்யூ ராம்.”

“அருண், நீ இன்னிக்கு ஷுட்டிங்குக்கு என் கூட வரலை.”

“பாஸ்” அருண் அலறினான்.

“ஏன் இப்படி அலர்ற? அம்மாவுக்கு ஜெனரல் ஹெல்த் செக்-அப் பண்ணனும். டாக்டர் ராவ்கிட்ட கூட்டிட்டுப் போய் செக் பண்ணிட்டு, வீட்டில கொண்டு வந்து விட்டுட்டு விஜயா கார்டன்ஸ் வந்துடு.”

“அப்பாடா.”

“லஞ்ச் ப்ரேக்லதான் அந்த ரிப்போர்ட்டர் பொண்ணு வருவா? ஹாஸ்பிடல் போயிட்டு பதினொரு மணிக்கெல்லாம் கார்டன்ஸ் வந்துடுவ. நிம்மதியா போயிட்டு வா. இப்ப போய் அம்மாவைக் கூப்பிடு. நான் புறப்படணும்.”

அருண், ஹாலைக் கடந்து உள்ளே சென்று ராம்குமாரின் அம்மாவைக் கூட்டி வந்தான்.

“என்னப்பா குமாரு, புறப்பட்டுட்டியா?”

“ஆமாம்மா. நீங்க அருண் கூட டாக்டர் ராவ் கிளினிக் போயிட்டு வந்துடுங்க. நான் ஷுட்டிங் புறப்படறேன்.” அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு போர்டிகோவில் நின்றிருந்த பென்ஸ் காரில் ஏறினான் ராம்குமார். பங்களாவின் பெரிய கதவின் அருகே ஒரு இளம் பெண், காவல்காரனுடன் கையை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். காவல்காரன் அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.

“காரை நிறுத்து.” ராம்குமார் சொன்னபடி காரை நிறுத்தினான்.

“வாட்ச்மேன், யார் இது? என்ன கலாட்டா?”

“சார், இந்தப் பொண்ணு உங்களைப் பார்க்காம போக மாட்டேன்னு...” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனைத் தள்ளிக் கொண்டு காருக்குள் எட்டிப் பார்த்தாள் அந்தப் பெண்.

“ராம்குமார் சார், என் பேர் ஷீலா. சார், எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை சார். எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக் குடுங்க சார். ப்ளீஸ்.”

“எனக்கு இப்போ ஷூட்டிங்குக்கு லேட் ஆகுது. பொதுவா மார்னிங் ஏழு மணிக்கு முன்னால நான் விஸிட்டர்ஸைப் பார்க்கறதுண்டு. அந்த டைம்ல வந்து பாரு. டிரைவர் காரை எடு” அவளுடைய பதிலைக் கூட எதிர்பாராமல் கார் விரைந்தது.

சிவந்த நிறம். நல்ல உயரத்துடன் சினிமா நடிகைகளுக்கு வேண்டிய சகல அம்சங்களுடன் இருந்த அவளுக்கு ஏனோ திரைப்பட உலகம் தன் கதவுகளை இன்னமும் திறக்கவில்லை. ராம்குமாருடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு, தன் வாழ்நாளில் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தி, விரைவில் திரை உலகில் மின்னும் தாரகையாவோம் என்ற நம்பிக்கை உணர்வு தந்த நிறைவோடு பஸ் ஏறினாள் ஷீலா.

படப்பிடிப்பின் இடைவேளை, பால் கலக்காத டீயை குடித்துக் கொண்டிருந்தான் ராம்குமார்.

“மீட் மை பாஸ், ஆக்ஷன் கிங் மிஸ்டர் ராம்குமார்.” அருகில் நின்று கொண்டிருந்த அழகிய இளம் பெண்ணிடம் அறிமுகப்படுத்திய அருணை ஓரக்கண்ணால் பார்த்தான் ராம்குமார். அருண் அசடு வழிந்தான்.

“பாஸ், நான் சொல்லலை? மல்லிகா பத்திரிகை ரிப்போர்ட்டர்? அது இவங்கதான்.”

“ஹலோ சார். நான் மஞ்சுளா” ரிப்போர்ட்டர் மஞ்சுளா, எலுமிச்சம்பழ நிறத்தில், பெரிய கண்களுடன், ஏக அழகாய் இருந்தாள்.

“பேட்டியை ஆரம்பிக்கலாமா சாரி?”

“ஓ. ஆரம்பிக்கலாமே.”

குறிப்பு எழுதும் நோட்டை எடுத்தவின் சூடிதாரின் டாப்ஸில் செருகி இருந்த பேனாவை மஞ்சுளா எடுத்தபோது, அருணின் பார்வை தப்பான இடத்திற்குப் போனது. இதனை கவனித்த ராம்குமார் முறைத்ததும், பார்வையை நேராக்கினான்.

“உங்களுக்கு ஆக்ஷன் ஹீரோங்கற இமேஜ் உருவாகி இருக்கு. இதைப் பத்தி சொல்லுங்களேன்.”

“ஆக்ஷன் ஆக்ஷன்னு சொல்லிக்கிட்டிருந்தா மேலே மேலே முன்னேற முடியாது. நான் காரெக்டர் செய்தாலும் ரசிகர்கள் அதிலும் சண்டைக் காட்சிகளை எதிர்பார்க்கறாங்க. ஆனால் சண்டை இல்லாத கேரக்டர் ரோல் பண்ணவும் தயக்கமாத்தான் இருக்கு. இமேஜ் ஆயிடுச்சே! இருந்தாலும் ஆக்ஷன் ஹீரோங்கற இமேஜை உடைச்சுட்டு காரெக்டர் ரோல் பண்ணனும்னு ரொம்ப ஆசையாத்தான் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாத்தான் இது முடியும்னு நினைக்கிறேன்.”

“ஒரு நடிகரோட, அல்லது நடிகையோட திறமை டைரக்டராலதான் உருவாக்கப்படுதா?”

“நமக்குள்ளே இருக்கற ஆற்றலை வெளிக் கொண்டு வர்றவர் டைரக்டர்தான். அவர் எனக்கு இப்படித்தான் வேணும், இன்னும் பெர்ஃபெக்டா வேணும்னு கேட்டு, திறமைகளை வெளிப்படுத்த வைக்கிறார். ஒரு டைரக்டர் களிமண்ணைப் பிள்ளையாராகவும் ஆக்கலாம். குரங்காகவும் ஆக்கலாம். உருவாக்கற காரக்டரும், நடிகரோட திறமையும் சிறப்பா அமையறது நிச்சயமா டைரக்டராலதான்.”

“சார், சமீபத்துல ஷூட்டிங்குக்காக அமெரிக்கா போனீங்க. அதைப் பத்தி கொஞ்சம் சொல்றீங்களா?”

“அமெரிக்கா போன அனுபவத்தைப் பத்தி கொஞ்சமென்ன? நெறயவே சொல்லலாம். ரொம்பப் பணக்கார நாடு அது. ஏராளமான வருமானம்; தாராளமான வசதிகள்.”

“உங்க மனசை ரொம்பவும் கவர்ந்தது எது?”

“அங்க என்னை பிரமிக்க வச்சது ஹாலிவுட் ஸ்டுடியோஸ். ரொம்பப் பிரமாதம். எல்லா செட்டும் ரொம்ப நெச்சுரலா இருக்கு. உலகத்துலயே பெரிய ஸ்டுடியோ ஹாலிவுட்ல இருக்கற யுனிவர்ஸல் ஸ்டுடியோதான்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தேநீர்

தேநீர்

November 14, 2012

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel