Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

மணலும் நுரையும் - Page 7

manalum nuraiyum

வேகம்

நாம் எல்லோரும் நம்முடைய இதய ஆசைகளின்

உச்சியில் ஏறுகின்றவர்கள் ஆயிற்றே!

உடன் வரும் பயணி உங்களின் கோணியையும்

பணப்பையையும் திருடியதால்

முதலில் சொன்னது அவனை மேலும் அதிகமாகப்

பருமனாக்க.

இரண்டாவது சொன்னது அவனுக்கு மேலும் மேலும்

அதிகச் சுமையாக மாறும்.

அந்தச் சமயத்தில்

நீங்கள் அவன் மீது பரிவு கொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு உள்ள அவனுடைய மலைப்பயணம்

அவனுடைய உடலுக்கு மிகவும் துன்பம்

தரக்கூடியதாக இருக்கும்.

சுமை அவனுடைய பாதையை நீளமாக்கும்.

அவன் நடுங்கிக்கொண்டே அழுவதைப் பார்க்கும்போது

நீங்கள் அவன் ஒரு அடி ஏற உதவ வேண்டும்.

அது உங்களுடைய கால்களின் வேகத்தை அதிகரிக்கும்.

 

*****


தேர்தல்

ஒரு கவிதை எழுதக்கூடிய ஆற்றலும்

ஒரு எழுதப்படாத கவிதையில் இருக்கும் ஆனந்தமும்

இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற

பிரச்சினை உண்டாகும்போது

நான் ஆனந்தத்தையே தேர்ந்தெடுப்பேன்.

காரணம்- எழுதப்படாத கவிதைதானே அழகு!

ஆனால், நீங்களும் என் பக்கத்து வீட்டினரும்

எப்போதும் சொல்வதுண்டே!

நான் தேர்ந்தெடுக்கும் திறமையே இல்லாதவன் என்று.

அதனால்தான் நான் கவிதைகளை அதிகமாக

எழுதிக்கொண்டிருக்கிறேன்.

 

*****


கனிவு

இருப்பதைக் கொண்டு திருப்திப்படுவதைப் பற்றி

நாம் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம்.

எனினும் இதையெல்லாம் இயற்கை

பின்பற்றியிருந்தால்

ஒரு நதிகூட கடலில் போய்ச் சேராது.

ஒரு பனிக்காலமும் வசந்த காலமாக மாறி

நறுமணத்தைப் பரவவிட்டுக் கொண்டிருக்காது.

செலவைக் குறைப்பது குறித்து

நாம் எப்போதும் புலம்பிக்கொண்டேயிருக்கிறோம்.

எனினும் இதையெல்லாம் இயற்கை

பின்பற்றியிருந்தால்

நம்முள் எத்தனைபேர் காற்றைச் சுவாசிக்க முடியும்?

 

*****


மணலும் நுரையும்

மணலுக்கும் நுரைக்கும் நடுவில்

நான் எப்போதும் இந்தக் கரையில் உலாவுவேன்.

என் கால் சுவடுகள்

அலைகள் பட்டு அழிந்துபோகும்.

காற்று வந்து நுரையை அடித்து இல்லாமல் செய்யும்.

எனினும் எப்போதும்

கடலும் கரையும் இருக்கும்

என்றென்றைக்கும்.

 

*****

 

கவனம்

அந்த மனிதரின் உண்மைத்தன்மை உங்களுக்கு

அவர் எதைத் திறந்து காட்டுகிறார் என்பதில் அல்ல.

அதற்கு மாறாக அவர் உங்களுக்கு

எதைத் திறந்து காட்டாமல் இருக்கிறார்

என்பதில்தான்.

அதனால்

நீங்கள் அந்த மனிதரைப் புரிந்துகொள்ள

வேண்டுமென்றால்

அவர் என்ன கூறுகிறார் என்பதில் அல்ல

எதைக் கூறாமல் இருக்கிறார் என்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version