Lekha Books

A+ A A-

உள்ளம் கொள்ளை போகுதே... - Page 15

ullam kollai poguthae

தெளிவு பெற்ற வினய்யின் பேச்சைக் கேட்ட புவனா, குறுக்கிட்டாள்.

"இப்ப இதைப் பத்தி பேச உங்களை ஏன் இவ்வளவு அவசரமா கூப்பிட்டோம்னு தெரியுமா? ப்ரியாவுக்கு அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க..." என்று ஆரம்பித்து இன்னும் மூன்று நாட்களில் அவளுக்கு திருமணத்தேதி குறித்திருப்பது பற்றியது வரை கூறி முடித்தாள்.

"நாளைக்கு அவங்கம்மா இன்விடேஷன் குடுக்க காலேஜுக்கு வர்றாங்களாம். அப்ப, தீடீர்னு இந்த விஷயம் தெரிஞ்சு, நீங்க தற்கொலை ஏதாவது பண்ணிப்பீங்களோன்னு ப்ரியா பயந்து நடுங்கிட்டா. அழுது அழுது அவ குரல் கூட கமறிப் போச்சு." கார்த்திகா பேசியதும் மறுபடி புவனா ஆரம்பித்தாள்.

"கார்த்திகாதான் இந்த ஐடியா குடுத்தா. எதையும் மனம் விட்டு பேசிட்டா பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்னு அவ சொன்னது சரியாயிடுச்சு. நீங்களும் புரிஞ்சுக்கிட்டீங்க. தாங்க்ஸ் வினய்." புவனா, வினய்யின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

"ப்ரியா, அவங்க வீட்ல பார்த்த பையனை விரும்பறா. ஆனா உங்களோட குறுக்கீடு அவளைப் பாடா படுத்திடுச்சு. எப்படியோ, உங்களுக்குப் புரிய வச்சுட்டோம். இதில இன்னொரு விஷயம் என்னன்னா... ப்ரியாவோட பேரண்ட்ஸையோ, சித்தார்த்தோட பேரண்ட்ஸையோ இந்த விஷயத்துல இழுக்கக் கூடாதுன்னு திட்டம் போட்டோம். பாவம். நாம நல்லா படிச்சு முன்னேறி நல்லபடியா ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கணும்னு ஆசைப்படற நம்பளோட பெத்தவங்களுக்குத் தேவையில்லாத டென்ஷன் குடுக்கறது நன்றி இல்லாத செயல். நாமளே இப்ப பேசி சரி பண்ணிட்டோம். இல்லைன்னா இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையா உருவாகும்..."

"கார்த்திகா, புவனா நீங்க ரெண்டு பேரும் என்னை மனுஷனா மதிச்சு நிதானமாவும், தன்மையாவும் பேசி, நிலைமையைப் புரிய வச்சீங்க. நீங்க கோபமாவோ, மிரட்டலாவோ பேசி இருந்தா நானும் என் ஈகோவை விட்டுக் குடுக்காம முரட்டுத்தனமா பேசி இருப்பேன். எதிர் மறையா செயல்பட்டிருப்பேன். ஓப்பனா பேசி ப்ரியாவுக்கு பெரிய பிரச்சனையானவனா இருந்த என்னை அவளுக்கு ஒரு உண்மையான ப்ரெண்டா உணர வச்சுட்டீங்க. நான்தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும்."

"முதல்ல ப்ரியாகிட்ட இங்க நடந்ததையெல்லாம் சொல்லி அவ மனசுல உள்ள பாரத்தை இறக்கி வைக்கணும். 'கல்யாணப் பொண்ணா லட்சணமா குஷியா இருடி’ன்னு சொல்லணும்." கூறிய கார்த்திகா தன் மொபைலில் ப்ரியாவைக் கூப்பிட்டு, நடந்ததை சந்தோஷமாக விவரித்தாள்.

பலநூறு முறை தாங்க்ஸ் சொன்னாள் ப்ரியா.

"கார்த்திகா... புவனா... இங்கயே ப்ரியாவுக்கு கல்யாண பரிசு வாங்கிடலாமே" வினய் கூறினான்.

"ம்கூம். நாங்க ஆறு பேரும் எங்களோட மூணு 'பெப்’ல வந்துதான் கிப்ட் வாங்குவோம்."

"நீங்க வர்றப்ப, நானும் ஜாய்ன் பண்ணிக்கலாமா?"

"ஓ... தாராளமா..."

"ஒன் மோர் கோல்ட் காபி குடிச்சுட்டு ஜில்லுன்னு போலாமே" புவனா கூற மூவரும் சந்தோஷமாக காபி சாப்பிட உட்கார்ந்தனர்.

வினய்யின் மனதிலிருந்த அறியாமை எனும் மேக மூட்டம் விலகியது. மகிழ்ச்சிகரமான நிமிடங்கள் துவங்கியது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

பைத்தியம்

March 8, 2012,

விடுதலை விரும்பாத கைதி!

March 21, 2013,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

படகு

படகு

June 6, 2012

கடல்

கடல்

September 24, 2012

எலியாஸ்

எலியாஸ்

February 7, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel