Category: பொது Written by chitralekha
மனிதராய் பிறப்பது மிக அருமையான வரம் என்று கூறப்படுவதுண்டு. மனிதனால் மட்டுமே தன் மனதில் நினைப்பதை வாய்விட்டு சொல்ல முடியும். வாய்விட்டு சிரிக்க முடியும். ஆனாலும் சிரிப்பு என்பதையே மறந்து விட்ட மனிதர்களும் உண்டு என்பது வேறு விஷயம்.
Category: பொது Written by chitralekha
பெண் மென்மையானவள். அவள் தன் அன்பை மிக மென்மையான வழிகளில் வெளிப்படுத்துவாள். சாந்தமாகப் பேசுபவள் பெண். எந்த விஷயத்தையும் எடுத்த எடுப்பிலேயே கண்டிப்பாக பேசாமல், தன்மையாகப் பேசும் பழக்கமும், இயல்பும் உடையவள் பெண். இந்தக் காரணங்களால் அவள் வலிமை யற்றவள், பலம் குறைந்தவள் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த மதிப்பீடு சரியல்ல. தனக்கு ஒரு பிரச்சனை, கஷ்டம், தேவை என்று வரும்போது அவற்றை எதிர்கொள்வதற்கு அவள் விஸ்வரூபம் எடுக்கிறாள். விண்ணை எட்டும் வெற்றியையும் அடைகிறாள்.
Category: பொது Written by chitralekha
அம்மா என்றால் அன்பு. அம்மா என்றால் தெய்வம். அம்மா என்றால் பாசம். அம்மா என்றால் தியாகம். அம்மா எனும் வார்த்தைக்கு இந்த உலகமே மயங்கும். உலகமே மயங்கும் தாய்மையின் உலகம்? மிகவும் சின்ன உலகம். தாயின் இதயத்தில் அவளது பிள்ளைகளும், அவர்களின் நலன் மட்டுமே அடங்கியுள்ள சின்னஞ்சிறு உலகம். ஆனால் அதற்குள் தோணும் அன்பு வெள்ளமோ... வானத்தைப் போன்று பரந்து விரிந்தது. அம்மாவின் அன்பு, ஆர்ப்பரிக்கும் கடலைப்போல அல்லாமல், அமைதியான நதியைப் போன்றது.