Logo

சிவப்பு தீபங்கள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6413
sivappu-deepangal

ந்தப் பழைய கதைதான்... தாய் தன் உறவினர் வீட்டு விருந்திற்குப் போயிருந்த சமயத்தில் வயதுக்குவராத மகளை வளர்ப்புத் தந்தை பலாத்காரம் செய்த கதை. துருப்பிடித்த ஆணியைப் போல தேய்ந்துபோன, வெற்றிலைக் காவி பிடித்த இரண்டு பற்களை வெளியில் காட்டியபடி ஆயி என்று வீட்டிலுள்ளவர்கள் அன்புடன் அழைக்கும் அந்தத் தடிமனான பெண் தரையில் உட்கார்ந்தவாறு சுவரில் சாய்ந்து கொண்டு உரத்த குரலில் சிரித்தாள்.

“அனுசூயா, உன்னோட கோவிந்தனைப் போல ஒரு திருட்டு பயகிட்ட இருந்து வேற என்ன நீ எதிர்பார்க்க முடியும்? பன்னிரண்டு வயதுள்ள மகளை விற்பதற்காக அங்கு கொண்டு வந்திருந்த மெலிந்து போய்க் காணப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்த்து ஆயி கேட்டாள் : “சரி... போனது போகட்டும். அழகான உன்னோட இந்த மகளைப் பற்றி இனிமேல் நீ கவலையே படவேண்டாம். இங்கே இவ நல்லா சந்தோஷமா இருப்பா. கொஞ்ச நாட்கள் கழிச்சு உனக்கே இவளை அடையாளம் தெரியாது. இவளுக்கு முதல்ல தேவை நல்ல உணவு. என்கிட்ட இருக்குற பொம்பளை பசங்களைப் பாரு. அவங்க யாராவது எந்தக் குறையுடனாவது இருக்குறது மாதிரி உனக்குத் தெரியுதா, அனுசூயா? காலையில அவங்களுக்கு முட்டையும் புரோட்டாவும் நான் தர்றேன்.”

அந்தச் சிறிய பெண் சுற்றிலும் பார்த்தாள். இங்குமங்குமாய் தரையில் ஆறேழு இளம் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டனர்.  கையில் ஆரஞ்சு நிலத்தில் வளையல்கள் அணிந்திருந்த சற்று மெலிந்து போய்க் காணப்பட்ட ஒரு இளம் பெண் மறைந்து நின்றுகொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அவளுக்குப் பதினைந்து வயதிற்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ‘இவள்தான் அனேகமாக என் தோழியா ஆகப் போறவளா இருக்கும்!’ என்று அந்தச் சிறிய பெண் அப்போது நினைத்துக் கொண்டாள்.

“ருக்மிணி, இங்கே வா...” தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய பருமனான மார்பகத்தோடு சேர்த்து அந்தச் சிறிய பெண்ணை ஆயி வாஞ்சையுடன் இறுக அணைத்துக் கொண்டாள்.

“பாவம் உன் அம்மா... அவளைப் போகச் சொல்லு. உன் அம்மா ரொம்பதூரம் போக வேண்டியதிருக்கு. இப்பவே நேரம் அதிகமாயிடுச்சு...”

அப்போது தபால்காரன் திரும்பிப் போய்க் கொண்டிருந்தான்.

“எனக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கா?”- ஆயி கேட்டாள். சைக்கிளின் வேகத்தைச் சற்று குறைத்த தபால்காரன் அந்தப் பெண்ணைப் பார்த்தவாறு புன்னகை செய்தான்.

“பத்து வருடங்களுக்கு முன்னாடி வீட்டைவிட்டு ஓடிப் போன காசுக்குப் பிரயோஜனமில்லாத என் தங்கமகன் என்னைக்காவது ஒருநாள் எனக்கு ஒரு கடிதம் எழுத மாட்டானான்னு நான் காத்திருக்கேன்” என்றாள் ஆயி.

“கடிதம் வராம இருக்காது”- புடவைத் தலைப்பை எடுத்துத் தன்னுடைய சிவந்த மூக்கைத் துடைத்தவாறு ருக்மிணியின் தாய் ஆயிக்கு ஆறுதல் சொன்னாள். “உங்க மனசு ரொம்பவும் சுத்தமானது. ரொம்ப நாளு கடவுள் உங்களைக் கவலையில இருக்கவிட மாட்டாரு.”

உயிர்ப்பற்ற கண்களால் ருக்மிணி தன் தாயைப் பார்த்தாள். வீட்டைவிட்டு பிரிந்திருப்பதில் அவளுக்குச் சிறிதுகூட வருத்தமில்லை. அவளுடைய தந்தை காணாமல் போன பிறகு வீட்டிற்குள் வந்த வளர்ப்புத் தந்தை ஒரு மிருகமாக இருந்தான். எல்லா நாட்களிலும் இரவில் அவன் அவளுடைய தாயைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். வீட்டில் அவள் மட்டும் தனியாக இருக்கும்பொழுது, அவன் அப்பொழுதுதான் மொட்டாக வந்து கொண்டிருந்த அவளுடைய பிஞ்சு மார்பகங்களை கையால் தடவி வேதனைப்படுத்திக் கொண்டிருந்தான். கடைசியில் கடந்த வாரம் அவன் அவளுக்குள் பலவந்தமாக நுழைந்தான். தரை முழுவதும் அவளுடைய ரத்தம் பரவிக்கிடந்தது.

“உனக்கு நான் கல்யாணம் பண்ணி வச்ச அந்த நல்ல புருஷனை நீ துரத்திவிட்டிருக்கக் கூடாது, அனுசூயா...”- ஆயி சொன்னாள்.

“அவன் ஒவ்வொரு நாளும் தவறாம வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தான்ல? சொல்லப்போனா, அவன் ஒரு குடிகாரன் கூட இல்ல. ஆனா? மணவாழ்க்கை நடந்துக்கிட்டு இருக்குறப்போ நீ கொஞ்சம் கம்மியான வயசு உள்ள ஒருத்தன்மேல ஆசை வைக்க ஆரம்பிச்சுட்டே. இப்போ உனக்குத் திருப்திதானா?”

“ஆயி, இப்படி சொல்லிச் சொல்லி என் மனசை நோகடிக்காதீங்க”-அனுசூயா ஆயியைப் பார்த்துக் கெஞ்சினாள். “நான் பாவம் செஞ்சவ. என் பொண்ணையாவது காப்பாத்துங்க. அவள் எந்தப் பாவமும் செய்யாத அப்பிராணி.”

அழுக்குப் படிந்த ரூபாய் நோட்டுகளை தாளில் சுற்றி அனுசூயாவின் இடுப்பில் சொருகினாள் ஆயி.

“உங்கக்கிட்ட இருந்து நான் பணமே வாங்கமாட்டேன். ஆயி”-இடறிய குரலில் அவள் சொன்னாள்: “வீட்டுல முழு பட்டினி. குழந்தைக்கு ஒரு தேநீர் மட்டும்தான் இன்னைக்குக் கொடுத்தேன். மத்தியானம் ஒரு பழம். அவ்வளவுதான்...”

அவள் அங்கிருந்து புறப்பட்டாள். பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து செல்லும் தன் தாயை வாசலில் இருந்த கம்பிகளைப் பிடித்தவாறு நின்றுகொண்டு ருக்மிணி பார்த்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய தாய் ஒரு பச்சைப் புள்ளியாக தூரத்திலிருந்த மற்ற நிறங்களுடன் கலந்து மறைந்தபோது அவள் திரும்பி தன்னுடைய புதிய தாயைப் பார்த்தாள். இடது உள்ளங்கையில் புகையிலையையும் சுண்ணாம்பையும் வைத்து நக்கிக் கொண்டிருந்தாள் ஆயி. உள்ளேயிருந்து வந்த மெலிந்து காணப்பட்ட இளம்பெண் கண்களைச் சிமிட்டியவாறு ருக்மிணியைப் பார்த்துச் சிரித்தாள். நீலநிறத்தில் பாவாடையும் லேசாகக் கிழிந்திருந்த வெள்ளை ரவிக்கையும் அவள் அணிந்திருந்தாள். அவளுடைய கையில் வளையல்கள் நிறைந்து காணப்பட்டன. “உனக்கு இதுல ஏதாவது வேணுமா?” அந்த இளம் பெண் கேட்டாள். “நைலான் வளையல் ப்ளாஸ்டிக் இல்ல... போனமாதம் பொருட்காட்சியில ஆயி எனக்கு வாங்கித் தந்தது இது.”

“இங்கே உள்ள விஷயங்களை நீ ருக்மிணிக்குச் சொல்லித் தரணும்” - ஆயி சீதாவைப் பார்த்துச் சொன்னாள்: “சீதா, உன்னை விட ரெண்டு வயது இளையவ ருக்மிணி.”

ருக்மிணியின் கையைப் பிடித்துக் கொண்டு சீதா சொன்னாள்: “வேணும்னா உனக்கு என்னோட வளையல்களைத் தர்றேன்” அவள் கைகளைச் சீதா பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ அவள் சிரித்தவாறு ஆச்சரியம் தொனிக்கும் குரலில் சொன்னாள்: “ஓ... வயசுக்கு மீறிய வளர்ச்சி தெரியுது உன் உடம்புல” சீதாவின் மெலிந்து போன கைகளைப் போலல்லாமல் சதைப்பிடிப்புள்ள கைகளை கொண்டிருந்தாள் ருக்மிணி. சீதா சொன்னதைக் கேட்டு ருக்மிணிக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் சொன்னாள் : “என் கறுப்பு நிறத்துக்கு ஆரஞ்சு நிறத்துல இருக்குற வளையல்கள் பொருத்தமா இருக்காது.” அதைக் கேட்டு ஆயி “நீ ஒண்ணும் கறுப்பு இல்லயே! வெயில்ல நடந்துதானே நீ பள்ளிக் கூடம் போற? அதனாலதான் உன் தோல்ல இப்படியொரு கறுமை தெரியுது மகளே, ஒரே மாசத்துல உன் நிறம் எப்படி மாறுது பாரு...” என்றாள்.


தரையில் சுருண்டு படுத்திருந்த ஒரு கறுத்த இளம்பெண் துள்ளி எழுந்து ருக்மிணியை வெறித்துப் பார்த்தாள். “கறுப்பா இருந்தா என்ன தப்பு?” ஆயியைப் பார்த்து அவள் கேட்டாள்: “நான் கறுப்பு தானே! இங்கே வர்றவங்களெல்லாம் என்னைத்தானே வேணும்ன்றாங்க?”

ஆவி மணம் வந்துகொண்டிருந்த ஒரு இருண்ட இடைவெளி வழியாக ருக்மிணியை சீதா கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனாள். அங்கிருந்து அவளை ஒரு பெரிய ஹாலுக்கு அழைத்துச் சொன்றாள். அந்த ஹாலில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் சில இளம் பெண்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் படுத்திருந்த ஒரு இளம் பெண்ணின் இறக்கம் குறைவான பாவாடை ஒழுங்கில்லாமல் இருந்தது. அவளின் பின்பகுதி நிர்வாணமாக வெளியே தெரிந்தது. அதைப் பார்த்த ருக்மிணி ஒருவகை வெறுப்புடன் வேறுபக்கம் பார்த்தாள். “கொஞ்சம்கூட வெட்கம் இல்லாதவ” என்று கூறியவாறு சீதா ஒரு டவலை எடுத்து அந்தப் பெண்ணின் தொடை மீது போட்டாள். “இவ பேரு ராதா. ரொம்ப முன்கோபம் உள்ளவ. இவகூட ரொம்பவும் கவனமா பழகணும்.”

ஹாலில் ஒரு மூலையில் இருந்த பாயைச் சுருட்டிக் காட்டியவாறு சீதா சொன்னாள் : “அங்கேதான் நான் பகல் நேரத்துல படுத்து உறங்குவேன். நீ கூட என் கூட அந்தப் பாயில் படுக்கலாம்.”

“நான் பகல் நேரத்துல உறங்க மாட்டேன்.” என்றாள் ருக்மிணி.

அதைக் கேட்டு உரத்த குரலில் சிரித்த சீதா திடீரென்று தன்னுடைய அடிவயிற்றைக் கையால் இறுகப் பிடித்துக் கொண்டாள். அப்படி பிடிக்கவில்லையென்றால் எங்கே வயிறு வெடித்துவிடுமோ என்று அவள் பயப்படுவதைப் போல் இருந்தது. “நீ ஒரு சரியான குழந்தைதான்...” - சீதா சொன்னாள் : உனக்கு எதுவுமே தெரியல. நீ ஒரு அப்பிராணி. இங்கே ராத்திரி நேரத்துல நாம தூங்க முடியும்னு நீ நினைக்கிறியா? இங்கே வர்றவங்களை சந்தோஷப்படுத்துறதுல இல்ல நாம எல்லாரும் தீவிரமா மூழ்கியிருப்போம்.”

“ராத்திரி நேரத்துல ஆளுங்க வருவாங்களா என்ன?” ருக்மிணி ஆச்சரியத்துடன் கேட்டாள் : “அப்படி வர்றவங்க யாரு?”

அதைக் கேட்டு சீதாவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவள் சத்தம் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் சிரித்தபடி, “ராத்திரி நேரத்துல வர்ற ஆம்பளைங்க வேலை செய்யிறது இங்கேதான்” என்று சொன்னாள்.

“என்ன வேலை?”- ருக்மிணி ஆர்வத்துடன் கேட்டாள். அவள் தன்னுடைய வளர்ப்புத் தந்தையைப் பற்றி அப்போது நினைக்கத் தொடங்கிவிட்டாள். தரையில் படுத்திருக்கும்பொழுது அந்த மனிதன் தன் மீது வந்து படர்ந்தபோது எனக்கு உண்டான வேதனையை அப்போது நினைத்துப் பார்த்தாள். “ரொம்ப சீக்கிரமாவே உனக்கு எல்லா விஷயங்களும் புரியும்”- சீதா சொன்னாள் : “அவங்க எல்லாரையும் நீ அனுசரிச்சு நடக்கணும். இல்லாட்டி ஆயி உன்னைப் பட்டினி போட்டுக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க. அவங்க எப்படியெல்லாம் ஆசைப்படுறாங்களோ, அதுக்கேத்த மாதிரியெல்லாம் நீ நடக்கணும். சொல்லப் போனா ஆம்பளைங்க நாய்ங்கன்றதுதான் சரி...”

அவர்கள் அந்த இடைவெளியை எந்தவித ஓசையும் உண்டாக்காமல் மெதுவாகக் கடந்தபோது ஒரு அறைக்குள்ளிருந்து கிளம்பி வந்த மெல்லிய குரலொன்று “யார் வெளியே?” என்று விசாரித்தது. “நான்தான்... சீதா”- அந்த ஒல்லியான பெண் சொன்னாள்.

“சத்தம் எதுவும் உண்டாக்காதே...” உள்ளேயிருந்து அந்த மெல்லிய குரல் திட்டியது.

“இந்த வீட்டுல எல்லாருக்கும் பிரியமான மீராத்தாயிதான் அது” - சீதா ருக்மிணியிடம் மெதுவான குரலில் சொன்னாள்: “அவளுக்கு மட்டும்தான் தனியா இந்த அறையை ஆயி ஒதுக்கித் தந்திருக்காங்க. அவ பார்க்க ரொம்பவும் அழகா இருப்பா. மெட்ரிகுலேஷன் வரை படிச்சிருக்கா. மத்தவங்க எல்லாருமே படிக்காதவங்க. நீ எதுவரை படிச்சிருக்கே ருக்மிணி”

“நான் ஆறாவது வகுப்பு படிச்சுக்கிட்டு இருக்கேன்”ருக்மிணி பதில் சொன்னாள்.

“ஒரு விதத்துல பார்க்கப்போனா அது நல்ல விஷயம்தான்.”-சீதா தொடர்ந்து சொன்னாள் : “கொஞ்சமாவது உனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியும், இல்லையா?”

“ஆங்கிலமா? தெரியாது ஆங்கிலம் ரொம்பவும் கஷ்டமான மொழி. இந்த வருடம்தான் நாங்க ஆங்கிலம் படிக்க ஆரம்பிச்சிருக்கோம். எனக்கு மராத்தியும் இந்தியும் நல்லா வாசிக்கத் தெரியும்.”

“அப்படின்னா இங்கே வந்த ஒரு ஆள் எனக்கு ஒருமுறை படிக்குறதுக்காக கொண்டு வந்து தந்த ஒரு புத்தகத்தை நீ எனக்குப் படிச்சு புரிய வைக்கணும். அந்தப் புத்தகம் முழுவதும் ஆண்கள், பெண்களோட அசிங்கமான நிர்வாணப் படங்கள்தான். நிறைய படிச்ச ஆள்னு நான் அந்த மனிதனைப் பற்றி மனசுல நினைச்சுக்கிட்டு இருக்குறப்போ அந்த மனிதன் எனக்குப் பரிசா அந்தப் புத்தகத்தைத் தந்தான்”- அதைச் சொன்ன சீதா மீண்டும் சிரித்தாள்.

“சிரிக்கிறப்போ நீ வயிற்றை அழுத்திப் பிடிக்குறியே, எதுக்காக?” -ருக்மிணி கேட்டாள்.

“சிரிக்கிறப்போ வயிற்றுக்குள்ளே ஏதோ ஒண்ணு இழுத்துப்பிடிக்கிறதைப் போல எனக்குத் தோணும்”-சீதா சொன்னாள்: “மொத்தத்துல என்னால எதுவுமே செய்ய முடியல. பசிகூட எடுக்க மாட்டேங்குது.”

முன்னறையிலிருந்து அப்போது கோபமாக ஒரு குரல் திடீரென்று கேட்டது: “எந்தக் காலத்துலயும் அப்படியொரு விஷயம் நடக்காது லட்சுமி” அந்தக் குரல் தொடர்ந்தது. “உன் பொண்ணுகளுக்கு எதிரா எந்தக் காலத்துலயும் ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன். எனக்கு நீ என்னோட தங்கச்சி மாதிரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உன் பொண்ணுகளுக்கு எதிரா நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? உன் வீடு எப்பவும் எந்த அளவுக்கு அடக்கமா இருக்கும்ன்ற விஷயம்தான் எல்லாருக்கும் நல்லா தெரியும்ல? உன் பொண்ணுங்க எல்லாருமே நல்ல சுத்தத்தோட இருக்குறதாகவும் நல்ல உடலழகோட இருக்குறதாகவும் இப்போ சினிமாவுல பிரபலமா இருக்குற ஒரு கதாநாயகியைப் போல உன்னோட மீரா இருக்குறதாகவும் இன்ஸ்பெக்டர் ஐயா கூட என்கிட்ட சொன்னாரு. அந்தக் கதாநாயகியோட பேரை நான் மறக்துட்டேன். அவ பேரு கொஞ்சம் நீளமா நாகரீகமா இருக்கும்.”

அயி தடிமனான கால்களை விரித்து வைத்துக் கொண்டு சுவர்மீது சாய்ந்தவாறு உட்கார்ந்துகொண்டு புகையிலையை வாய்க்குள் மென்றவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். திடீரென்று அவள் கேட்டாள் : “சரி... சிந்துத்தாயி, இன்ஸ்பெக்டர் ஐயாவை நீ எங்கே பார்த்தே?”

ஆயியின் வெற்றிலைப் பெட்டியிலிருந்து சிறிது புகையிலையை வெளியே எடுத்தவாறு அந்தக் கேள்வியையே காதில் வாங்காத மாதிரி சிந்துத்தாயி இருந்தாள். ஆயி மீண்டும் தன் கேள்வியைக் கேட்டாள். அந்தக் கேள்விக்குப் பின்னால் மறைந்திருந்த ஆபத்து என்னவென்பதை சிந்துத்தாயி நன்று அறிவாள்.

“நேற்று கவுசல்யாவோட வீட்டுல.”


“நன்றி கெட்டவன்”- ஆயி உரத்த குரலில் சொன்னாள்: “நான் அந்த ஆளுக்கு விலை மதிப்புள்ள பொருட்களைப் பரிசா கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் தவறாம கொடுக்கிற மாமூல் ஐம்பது ரூபா போக, என் எல்லா பெண்ணுகளையும் அந்த ஆள்கிட்ட படுக்க விட்டிருக்கேன். இவ்வளவு காரியங்களை அந்த ஆளுக்கு நான் செஞ்ச பிறகும், அவன் என்னோட எதிரியோட வீட்டுக்கு சுகம்தேடிப் போறான்னா, அவனுக்கு எப்படி அதுக்கு மனசு வந்துச்சு? என் பொண்ணுகள்கிட்ட என்ன குறைபாடு இருக்கு? கவுசல்யாவோட பொண்ணுங்க என் பொண்ணுகளைவிட சுத்தமானவங்களா என்ன? பிணங்கள்! வெறும் அஞ்சு ரூபாய்க்கு போறவளுக!”

“சரி தங்கச்சி... கொஞ்சம் அமைதியா இரு...”- சிந்துத்தாயி ஆறுதல் சொல்கிற குரலில் சொன்னாள் : “பெண்ணுங்ககிட்ட போயி போயி இப்போ ஒரே வெறுப்பாயிடுச்சுன்னும் பிஞ்சா இருக்குற சிறு பொண்ணுங்க மேலதான் இப்போ எனக்கு விருப்பம் இருக்குன்னும் இன்ஸ்பெக்டர் ஐயா என்கிட்ட சொன்னாரு.”

“ஏன் இங்கே சின்ன பொண்ணுங்க இல்லியா?”- ஆயி கேட்டாள். “சீதா இல்லியா? அழகான அவ தோல் வெள்ளை நிறத்துலதானே இருக்கு? அவ உடம்பு யாரையும் இழுக்குற மாதிரி இல்லியா?”

“சீதா யார்கிட்டயும் சொன்னபடி நடக்குறது இல்ல போல இருக்கு...” - அந்தக்கிழவி சொன்னாள்.

“நான் இன்னைக்கு வாங்கியிருக்குற சின்னப் பொண்ணை நீங்க பார்த்தீங்களா?” - ஆயி கேட்டாள் : “ருக்மிணி... இங்கே வா, சிந்துத்தாயி உன்னைக் கொஞ்சம் பார்க்கட்டும்...”

ருக்மிணியை முன்னறையை நோக்கி சீதா பிடித்துத் தள்ளி விட்டாள். அந்தக் கிழவி அந்தச் சிறு பெண்ணின் தொடைப் பகுதியை மெதுவாகக் கிள்ளிவிட்டு அவளின் பின் பகுதியை லேசாகத் தடவினாள். “பரவாயில்ல... உண்மையிலேயே இவ நல்ல அழகிதான்” சிந்துத்தாயி கேட்டாள் : “எவ்வளவு ரூபா கொடுத்து இவளை நீ வாங்கினே?” இவளுக்காக நீ நல்ல ஒரு தொகைக் கொடுத்திருக்கணுமே!”

கிழவியின் காதில் ஆயி மெதுவான குரலில் என்னவோ சொன்னாள்.

“ஓ... இவ அனுசூயாவோட மகளா, அதுதான் இவளுக்கு இப்படியொரு அழகான, கவர்ச்சியான கால்கள் இருக்கு...”

“இப்படியொரு அழகு தேவதை என் வீட்டுல இருக்கான்னு இன்ஸ்பெக்டர் ஐயாகிட்ட சொல்லுவீங்களா, சிந்துத்தாயி?”- ஆயி கேட்டாள்.

“இன்னைக்கு சாயங்காலம் நான் போய் கட்டாயம் இந்த விஷயத்தைச் சொல்றேன்” என்றாள் சிந்துத்தாயி. பித்தளைப் பெட்டியிலிருந்து சிறிது வெற்றிலையை எடுத்து அவள் வெளியே புறப்பட ஆரம்பித்தாள். அழுக்குப் படிந்த கூர்மையான நகங்கள் உள்ள சுருங்கிப் போய்க் காணப்பட்ட அவளுடைய கைகளை ருக்மிணி பார்த்தாள். “அந்தக் கிழவி என்னைத் தொட்டப்போ ஒரு மரங்கொத்திப் பறவை என் தோலை தன்னோட கூர்மையான அலகால் கொத்துறது மாதிரி இருந்துச்சு. ச்சே... என்ன அவலட்சணமான பொம்பளை அது!” - ருக்மிணி சீதாவிடம் தனியாக இருக்கும்போது சொன்னாள்.

“ம்... அந்தக் கிழவி பயங்கரமா பொய் சொல்லும். எனக்கு அந்தக் கிழவியைக் கண்டாலே பிடிக்காது...” என்றாள் சீதா.

2

தெரு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தாலும் வானம் நீலநிறத்தில்தான் காட்சியளித்தது. அப்போதுதான் “மீரா... மீரா...” என்று அன்புடன் அழைத்தவாறு மீராத்தாயின் வாடிக்கையாளனான கல்லூரி மாணவன் மெதுவாக ஆடியவாறு அங்கு வந்தான். கடுகு எண்ணெய் தேய்த்து கால்களைத் தடவி விட்டுக் கொண்டிருந்த ஆயி அவன் அழைப்பதைக் கேட்டாள். அவளின் புருவம் சற்று மேல்நோக்கி உயர்ந்தது.

“அந்த வாயாடிப் பயதான்...” - கால்களை நீவிவிட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் ஆயி சொன்னாள்.

“இந்த முறையும் அவன் பணம் தரலைன்னா போலீஸ்கிட்ட சொல்லி அவனை நான் அடிச்சு விரட்டப்போறேன்”- என்றவள் கேட்டாள்: “ராதா, அவன் எப்பவாவது உன்கிட்ட வந்திருக்கானா?”

“ஊஹும்... அந்த பையனுக்கு எப்பவும் மீரா இருந்தாபோதும். மீராவோட புருஷன் மாதிரியே அவன் எப்பவும் நடப்பான். ராத்திரி ரொம்ப நேரம் வரை அவன் அவகிட்ட பேசிக்கிட்டே இருக்கான். சில நேரங்கள்ல அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதும் உண்டு” ராதா பதில் சொன்னாள்.

“ராத்திரி ரொம்ப நேரம் வரையா?”- ஆயி ஆச்சரியத்துடன் கேட்டாள். “அவ்வளவு நேரம் இருக்குறதுக்கு அவன் பணம் தர்றானா என்ன?”

“அதைப் பற்றி எனக்குத் தெரியாது”- ராதா ஒருவித வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்: “எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். அவதானே உங்களோட செல்ல மகள்! இந்த வீட்டுல மீராவைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூட சொல்லக்கூடாது. இப்போவெல்லாம் சொல்லப் போனா அவளுக்குப் பயங்கர ஆணவம் வர ஆரம்பிச்சிடுச்சு. தலைவலி இருக்கிறதா சொல்லிக்கிட்டு இன்ஸ்பெக்டர் ஐயாவோட இருக்க முடியாதுன்னு நேற்று சொல்லிட்டா. நம்ம தொழிலுக்குத் தேவையான நடத்தை அவகிட்ட இல்ல. அவளுக்கு அந்த கல்லூரி மாணவன் மட்டும் போதும்ன்ற நினைப்பு. தேவடியாள்கள் அப்படி இருக்க முடியுமா?”

“ராதா, தேவையில்லாம நீ வாய்க்கு வந்தபடி பேசாத” - ஆயி அவளைப் பார்த்து கண்டிப்பான குரலில் சொன்னாள்.

“தேவடியான்னு சொன்னா உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதே” - ராதா மெதுவான குரலில் முணுமுணுத்தாள். “ஆயி, நாம எல்லாருமே தேவடியாள்கள்தான்ற விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும். உண்மையை எந்தவித தயக்கமும் இல்லாம வெளிப்படையா சொல்லி ஒத்துக்கணும்ன்ற கொள்கையைக் கொண்டவ நான்.”

“சரி... நீ காலை ஒழுங்கா பிடிச்சு விடு” - ஆயி சொன்னாள்.

மீராவின் அறைக்குள்ளிருந்து ஒரு ஆண்குரல் கேட்டது. அதோடு சேர்ந்து மீராவின் சிரிப்புச் சத்தமும். அதைக்கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள் ஆயி.

“அவன் அப்படி என்ன அவள்கிட்ட சொல்றான்?”- ஆயி கேட்டாள்.

“அவளுக்கு அவன் அரசியல் பாடல் சொல்லித் தர்றான்”-ராதா பதில் சொன்னாள்.

“அவன் என்ன பொட்டையா?”

“எனக்குத் தெரியாது. எங்களை அவன் தொடுறதே இல்ல. அவன் போற ஒவ்வொரு நேரமும் மீராவுக்கு தவறாம தலைவலி வர்றது நிச்சயம்ன்ற ஒரு விஷயம் மட்டும் எனக்குத் தெரியும். அவன் வந்துட்டுப் போனபிறகு யார்கூடவும் மீரா படுக்குறது இல்ல. அவன் படுக்கையில உட்கார்ந்து பல வினோதமான பாடல்களை முணுமுணுத்துக்கிட்டு இருப்பான்”- ஆயி எழுந்து மீராவின் அறையை நோக்கி நடந்தாள். கதவு அடைக்கப்பட்டிருந்தது. காதைத் தீட்டி வைத்துக் கொண்டு கேட்டபோது அந்த இளைஞன் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அவனுடைய பேச்சில் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே ஆயி இதற்கு முன்பே கேட்டவையாக இருந்தன. ஒன்றிரண்டு முறை அவன் புரட்சி என்ற வார்த்தையை உச்சரித்தான். ஆயி கதவைத் தட்டினாள்.


“யாரு?”- உள்ளேயிருந்து மீரா கேட்டாள்.

“கதவைத்திற”- ஆயியின் குரல் உயர்ந்தது. மீரா கதவைத் திறந்தாள். அவள் உடுத்தியிருந்த அந்த பட்டுப்புடவை  அவள் உடம்பில் அப்படியே இருந்தது. படுக்கை விரிப்பில் சிறிதுகூட சுருக்கங்கள் விழவில்லை. அவன் அங்கே புகை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது அவளுக்கு புரட்சியைப் பற்றி பாடம் சொல்லித் தர்றதுக்கா என்ன?”

அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான் அந்த இளைஞன். “நான் பணம் கொடுத்திருக்கேன்” என்றான் அவன்.

ஆயி வெறுப்புடன் அவனைப் பார்த்தவாறு கோபமான குரலில் சொன்னாள் : “இது தேவடியாள்க இருக்குற இடம். யோகா கத்துத் தர்ற இடமில்ல. என்ன பண்ணணுமோ அதைப்பண்ணிட்டு சீக்கிரமா கிளம்புறதுக்கு வழியைப் பாரு. வழக்கமான வாடிக்கையாளுங்க வர்ற நேரமாச்சு.”

கதவு மீண்டும் அடைக்கப்பட்டது. முன்னறையை நோக்கிப் போன ஆயி நான்கு பக்கங்களிலும் பார்த்தாள்.  ஜரிகையும், பார்டர்களும் ஜொலித்துக்கொண்டிருந்த  புடவைகளை இளம்பெண்கள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் முகங்களில் சாயம் தேய்த்துக் கொண்டும் தலைமுடியில் பூச்சூடிக் கொண்டும் இருந்தார்கள். தரையில் சாக்பீஸால் வரையப்பட்ட ஒரு பெரிய சதுரத்துக்குள் நின்றவாறு இரண்டு இளம்பெண்கள் ஓட்டுத் துண்டை எறிந்து நொண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“சின்னப்பிள்ளைங்க விளையாட்டை நிறுத்து சீதா. வாடிக்கையாளர்கள் வர்ற நேரமாச்சு”- ஆயி கண்டிப்பான குரலில் சொன்னாள்.

ஆயி அதைச் சொல்லி முடிப்பதற்குள் தடிமனான இன்ஸ்பெக்டர் வாசலைக் கடந்த உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. அவர் ருக்மிணிக்கு நேராக விரலைச் சுட்டிக்காட்டியவாறு ஆயியைப் பார்த்துக் கேட்டார் : “உன்னோட புதிய ஆளா?”

ஆயி அதைக் கேட்டு ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள். “வா” என்று கூறியவாறு அந்தச் சிறுமியை இழுத்துக் கொண்டு அந்த ஆள் உள்ளே நடந்தார். “கூட போ. அவர் நம்ம ஆளுதான்”-ஆயி ருக்மிணியைப் பார்த்துச் சொன்னாள்.

அறைக்குள் இருந்த கட்டில்மீது அந்தச் சிறுமியைத் தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர் அவளின் ஆடையை மேல்நோக்கி உயர்த்தினார். “ஓ... நீ ஜட்டி வேற போட்டிருக்கியா? சரியான ஆளுதான்...”- சிரித்துக் கொண்டே அவர் சொன்னார். அவரின் கைவிரல்கள் அவள் மீது மேல்நோக்கிப் படர்ந்தபோது ருக்மிணி அவரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள். “என்னை ஒண்ணும் செய்யாதீங்க...” - தேம்பியவாறு ருக்மிணி அந்த ஆளைப் பார்த்துக் கெஞ்சினாள். “என்னை விடலைன்னா, உங்கக் கண்ணை நான் நோண்டி எடுத்துருவேன்...”

“நீ என்னடி சொன்னே காட்டுப் பூனை” வேண்டுமென்றே குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு அவர் கேட்டார் : ‘என் கண்ணைத் நோண்டி எடுத்துருவியா? ஏன்டி சின்னப்புள்ள...”

“நான் ஒண்ணும் தேவடியா இல்ல...” -ருக்மிணி அழுதுகொண்டே சொன்னாள். ஆனால், காமவெறி முற்றிப்போய் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் அதைக் கேட்கும் நிலையில் இல்லை.

ஒரு ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெற்றிருக்கும் ஆளைப் போல அவர் அவளை இறுகக் கட்டிப்பிடித்தார். அவருடைய வாயின் இரண்டு பக்கங்களிலும் நுரை தள்ளிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அவர் கட்டிலில் திரும்பிப் படுத்தவாறு சொன்னார் : “உனக்கு நான் ஒரு சிவப்பு நிற ஃப்ராக்கும் லேஸ் வச்ச பாவாடையும் வாங்கித் தர்றேன்.” அடுத்த நிமிடம் அவர் உறங்க ஆரம்பித்தார்.

படுக்கையிலிருந்து வேகமாக எழுந்த ருக்மிணி முன்னறையை நோக்கி ஓடினாள். அவள் தலைமுடி முழுவதும் விரிந்து பரவிக் கிடந்தது. வியர்வைத் துளிகள் நெற்றியில் பொட்டுவிட்டிருந்தன. வந்தவுடன் அவள் சதுரத்துக்குள் நுழைந்து பழைய மாதிரியே நொண்டி விளையாட ஆரம்பித்தாள். சீதா அவளுக்கு உற்சாகம் ஊட்டியவாறு அவள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விளையாட்டில் முழுமையாக மூழ்கிவிட்டிருந்த ருக்மிணி திடீரென்று அதீத மகிழ்ச்சியுடன், “நான் ஜெயிச்சிட்டேனே” என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்த அதே நேரத்தில ஆயியைப் பார்த்துச் சிரித்தவாறு அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர்.

“அவ ஒரு குட்டிப்பூனை. இருந்தாலும் இந்தத் தொழிலைப் பற்றிய எல்லா விஷயங்களும் அவளுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. எனக்கு அவளை ரொம்பவும் பிடிச்சிருக்கு”- இன்ஸ்பெக்டர் ஆயியைப் பார்த்துச் சொன்னார்.

தன்னுடைய நகங்கள் உண்டாக்கின கீறல்களால் சிவந்து  போயிருந்த அந்த மனிதரின் சதைப்பிடிப்பான முகத்தை ருக்மிணி பார்த்தாள். அவர் எதையும் கவனிக்காதது மாதிரி நின்றிருந்தார்.

“மீராவோட அறைக்குள்ள யாரு பேசிக்கிட்டு இருக்கிறது?”- இன்ஸ்பெக்டர் ஆயியைப் பார்த்துக் கேட்டார்.

உண்மையான கவலையுடன் தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டே ஆயி சொன்னாள் : “அவன்தான்... அந்த மாணவன்... அவன் திரும்பவும் அவளுக்கு ரகசியப்பாடம் சொல்லித்தர வந்திருக்கான்!”

“இந்த இடத்தைவிட்டு அவனை விரட்ட என்னால முடியும். ஒருநாள் முன்கூட்டியே என்கிட்ட சொல்லிட்டா போதும். அவனைக் கைது பண்ணி சிறையில அடைக்கக்கூட என்னால முடியும்”- இன்ஸ்பெக்டர் சொன்னார்.

“உங்களால அது முடியும்னு எனக்கும் நல்லா தெரியும்” - ஆயி சொன்னாள் : “மீரா அவனை வெறுக்குறதுவரை நாம பொறுமையா இருப்போம். மீரா எனக்கு மகள் மாதிரி. உயிரைவிட பெரிசா அவளை நான் நினைக்கிறேன். அவ கவலைப்பட்டு நிக்கறதைப் பார்க்குறதுக்கு நான் விரும்பல...”

“நீங்க அவளைக் கெடுத்துட்டீங்க லட்சுமிபாய்...”- இன்ஸ்பெக்டர் சொன்னார். “ஏதோ பெரிய பணக்கார வீட்டைச் சேர்ந்தவ மாதிரிதான் அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும்.”

“யாருக்கும் தெரியும். அவ ஒரு பெரிய பணக்கார வீட்டைச் சேர்ந்தவளா இருக்க மாட்டான்னு”- ஆயி கேட்டாள் : “என் வீட்டு வாசல்ல யாரோ விட்டுட்டுப் போன நிலையிலதான் அவ எனக்குக் கிடைச்சா. என் கையில அவ கிடைக்கிறப்போ ஒரு சில்க் புடவையால சுற்றப்பட்டிருந்தா. எங்களைப் போல உள்ளவங்க கட்டுறதுக்கு நினைச்சுப் பார்க்கக் கூட முடியாத உயர்ந்த தரத்தைச் சேர்ந்த புடவை அது!”

“அவளோட அம்மா யாராவது ஒரு பணக்காரியோட வீட்டுல வேலை செய்த வேலைக்காரியாக்கூட இருக்கலாம். தீபாவளிக்கோ, வேற ஏதாவது பண்டிகைக்கோ அவளோட முதலாளியம்மா அந்தப் புடவையை வாங்கித் தந்திருக்கலாம்ல?” அப்படிக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிய இன்ஸ்பெக்டர் ஆயியின் வெற்றிலைப் பெட்டியைக் கையை நீட்டி எடுத்தார்.

“எது எப்படியோ... ஒரு ஏழை பொண்ணோட மகளைப் போல அவ இல்ல. நான் என் பொண்ணுகளை அழைச்சிக்கிட்டு நகரத்துக்கு பொருட்கள் வாங்க போறப்போ ஏக்கம் நிறைஞ்ச கண்களோட ஆண்கள் அவளையே பார்த்துக்கிட்டு நிக்கிறதை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.


ஊரைவிட்டுப் போன என்னோட மகன் திரும்பி வந்தான்னா, அவளை அவனுக்குத்தான் நான் கட்டாயம் கல்யாணம் பண்ணி வைப்பேன். அவங்க எந்த அளவுக்கு பொருத்தமான தம்பதிகளா இருப்பாங்க தெரியுமா? ரெண்டு பேரும் நல்ல சிவப்பு நிறம். கண்கள்ல நல்ல பிரகாசம்”- ஆயி தன்னை அடக்க முடியாமல் கூறிக் கொண்டிருந்தாள்.

“உன் மகனோட அப்பா ஒரு பிராமணன்தானே?” - இன்ஸ்பெக்டர் கேட்டார். அதற்கு ஆயி பதில் சொல்ல, ஆயியும் இன்ஸ்பெக்டரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டார்கள்.

“சரி... நேரமாயிடுச்சு. நான் புறப்படுறேன்” - இன்ஸ்பெக்டர் சொன்னார்.

“கவுசல்யாவோட இடத்துக்கு நீங்க போயிருந்ததா நான் கேள்விப்பட்டேன். அது உண்மையா? உண்மையைச் சொல்லிட்டுத்தான் நீங்க இங்கேயிருந்து கிளம்பணும்”- ஆயி கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.

“அந்தப் பிசாசு சிந்துத்தாயியை நான் ஜெயிலுக்கு அனுப்பப் போறேன். அந்த வீட்டு வழியா நான் பஸ் ஸ்டாப்புக்குப் போய்க்கிட்டு இருந்ததை சிந்துத்தாயி பார்த்திருப்பா. அதை அப்படியே இங்கே வந்து சொல்லியிருக்கா”- இன்ஸ்பெக்டர் சொன்னார் : “நான் எதுக்கு அங்கே போகணும்? லட்சுமிபாயி?”

அதிகமான அன்பாலும் பதைபதைப்பாலும் ஆயி தன் மூக்கில் வழிந்த நீரைத் துடைத்தாள். அவள் அழுது விடுவாள் போல இருந்தாள். “அவ... அந்த கவுசல்யா ஒண்ணுமே தெரியாத என் பொண்ணுகளைப் பற்றி என்ன மாதிரியெல்லாம் வாய்க்கு வந்தபடி சொல்லிக்கிட்டு இருக்கா தெரியுமா? சிந்துத்தாயி சொல்லித்தான் எனக்கே அந்த விஷயம் தெரியும். என் பொண்ணுக எல்லாருக்கும் நோய் பிடிச்சிருக்குன்னு கவுசல்யா சொல்லியிருக்கா. இப்படியெல்லாம் பொய்களைச் சொல்லிக்கிட்டு இருந்தா நம்ம பிஸினெஸ் பாதிக்குமா இல்லியா? ஒண்ணுமே தெரியாத என்னோட அப்பாவிப் பொண்ணுக பட்டினி கிடந்து சாகறதைத் தவிர வேற வழி...?”

“அழக்கூடாது...”- அந்தப் பெண்ணின் தடிமனான கைகளைத் தடவியவாறு இன்ஸ்பெக்டர் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார் : “உனக்கு இருக்கிற நல்ல பேரை நான் காப்பாத்தறேன். உனக்கும் இந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கும் நான் நண்பன். எந்தச் சமயத்திலேயும் உங்களை நான் கைவிடமாட்டேன்.”

அதைக் கேட்டு ஆயியின் முகம் சிறிது பிரகாசமானது. லேசாச் சிரிக்க அவள் முயற்சித்தாள்.

“கொஞ்சம் வெற்றிலை போடுங்க, இன்ஸ்பெக்டர் ஐயா” - அவள் கெஞ்சினாள்.

இன்ஸ்பெக்டர் அங்கிருந்து கிளம்பியதும், ஆயி பரபரப்பானவளாக மாறிவிட்டாள். கம்பிகள் வழியாகப் பார்த்தவாறு நின்றிருந்த இளம்பெண்களைப் பார்த்து அவள் கோபமான குரலில் திட்டினாள் : “என்னடி ஆச்சு உங்களுக்கு? ஆம்பளைகளை எப்படி இழுக்குறதுன்றதை மறந்துட்டீங்களா? உங்களுக்காக மீனும் முட்டையும் நெய்யும் வாங்கி நான் பணம் செலவழிக்கிறது எல்லாமே வீண். மீராவைத் தவிர, உங்க ஒருத்திக்குக் கூட ஒரு ஆம்பளையை வசீகரிச்சு இங்கே கொண்டு வருவதற்கான திறமை இல்ல... அவளை எடுத்துக்கிட்டா... அவளுக்கு அரசியல் பாடம் சொல்லித்தர்ற பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத ஒருத்தன் கூட அறையைப் பூட்டிக்கிட்டு இருக்கா. எவ்வளவு பெரிய பெரிய ஆளுங்க இந்த வழியா கார்ல போய்க்கிட்டு இருக்காங்க! இந்தப் பக்கம் பார்க்கிறதுக்காக காரை மெதுவா எத்தனை பேர் ஓட்டுறாங்க! அவங்கள்ல யாரையாவது இந்தப் பக்கமா இழுக்குறதுக்கு உங்கள்ல யாராவது ஏதாவது பண்ணியிருக்கீங்களா ஒரு பன்றிக் கூட்டத்தையே நான் தீனி போட்டு இங்கே வளர்த்துக்கிட்டு இருக்கேன். என்னைவிட அந்த கவுசல்யா எவ்வளவோ கொடுத்து வச்சவ. அவ தன்னோட பொண்ணுகளை சாட்டையை வச்சு அடிப்பா. அவளோட வீட்டுக்கு முன்னாடி கார்கள் நிக்கிறதைப் பாருங்க. எட்டுமணி கூட ஆகல. இப்பவே ரெண்டு கார்கள் நின்னுக்கிட்டு இருக்கு. உங்களையெல்லாம் வீட்டைவிட்டு விரட்டிட்டு நான் காசிப் பக்கம் போறதுதான் சரி. எதுவுமே இல்லேன்னாக் கூட மன அமைதியோட சாகவாவது செய்யலாமே!”

சரஸ்வதி என்னும் பெயரைக் கொண்ட கறுப்பு நிறத்திலிருக்கும் இளம்பெண் வாசலைவிட்டு வெளியே வந்து பஸ்ஸில் இருந்தவாறு பார்த்த ஒரு இளைஞனுக்கு தன் பார்வையை அனுப்பி அவனை அழைத்தாள். அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அந்த இளைஞன் சிறிது நேரம் சென்றபிறகு அவளுக்கருகில் வந்து நின்றான். தன் பின்பாகங்கள் குலுங்க, அவள் அந்த இளைஞனை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.

புடவைத் தலைப்பால் தன் கண்களில் வழிந்த மகிழ்ச்சிக் கண்ணீரை ஆயி துடைத்துக் கொண்டாள்.

“என்னால இப்படியெல்லாம் நடக்க முடியாது. இதெல்லாம் கேவலமான நடத்தை”- ராதா தன்னுடைய எதிர்ப்பை இந்த வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினாள். “ரோட்ல நின் தெருவுல அலையிற சாதாரண ஒரு தேவடியா மாதிரி என்னால ஆள் பிடிக்க முடியாது” என்றாள். அப்போது யாரோ ஒரு ஆள் சீதாவைத் தேடி வந்தான். “என்னால இன்னைக்கு முடியாது ஆயி” - அன்று தனக்குக் கட்டாயம் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயியைப் பார்த்துக் கெஞ்சினாள் சீதா.

“அந்த ஆளுகூட போடி, பெண்ணே”- கதவுக்கு அப்பால் சீதாவைப் பிடித்துத் தள்ளி விட்டவாறு ஆயி சொன்னாள்.

“அந்தச் சதுரத்துல இருந்து என்னோட கட்டைகளை எடுத்துக் கூடாது, ருக்மிணி...”- கதவை அடைப்பதற்கு முன்பு சீதா உரத்த குரலில் சொன்னாள் : “விளையாட்டை முடிக்கிறதுக்கு நான் சீக்கிரம் வருவேன்.”

“தமிழனா இருந்தாலும் அந்த ஆளு ஒரு அமைதியான ஆளு”- ஆயி சொன்னாள் : “அங்கே ஒரு பள்ளிக் கூடத்துல அந்த ஆளு வேலை பார்க்கிறாரு. ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் அவர் இங்கே வருவாரு. வர்ற சமயத்துல அவருக்குச் சீதா மட்டும்தான் வேணும். கல்லூரியில படிக்கிற வயசுல அவருக்கு மூணு பொண்ணுக இருக்காங்க. அவரோட பொண்டாட்டி வாதம் வந்து படுத்த படுக்கையா கிடக்குறாங்க. தன்னோட சொந்த வாழ்க்கையைப் பற்றி அவர் என்கிட்ட மனம் திறந்து சொல்லுவாரு. எதையும் மறைச்சு வைக்கிறது இல்ல. மற்றவங்களை மாதிரி எதையும் ஒளிச்சு வைக்கிற ஆளில்ல அவரு...”

வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் அப்போது ஆயியின் காதுகளில் வந்து மோதியது. ஒரு நிமிடம் அவள் காதுகளைத் தீட்டியவாறு உட்கார்ந்திருந்தாள். பிறகு உரத்த குரலில் அவள் கேட்டாள் : “யாரு? நம்ம மீராவா அழறது? அவ அறையில போயி என்ன விஷயம்னு பாரு. ஆம்பளைங்க விசித்திரமான பிறவிங்க. அவங்களோட நடவடிக்கைகளை யாராலும் முன்கூட்டி சொல்லவே முடியாது. நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ ஒரு பணக்கார ஆள் வந்தான்.


அரைமணி நேரம் என்னை அவன் ஒரு வழி பண்ணினான். போறப்போ முப்பது ரூபா தந்தான். அந்தக் காலத்துல முப்பது ரூபான்னு சொன்னா, அது ஒரு பெரிய தொகை. என்னால அழக்கூட முடியல. அப்படிப்பட்ட வினோதமான ஒரு அனுபவம் அது. அதுக்குப் பிறகு அந்த ஆளுக்காக நான் எத்தனையோ தடவை காத்திருந்தேன். ஆனா, அந்த ஆளு வரவே இல்ல...”

“உங்க மகனோட அப்பா எப்படிப்பட்ட ஆளு ஆயி” - ராதா கேட்டாள்.

ஆயி ராதாவின் கன்னத்தைப் பாசத்துடன் தடவினாள்.

“என் மகனோட அப்பாவைப் பற்றி மட்டும் நீ கேட்காதே”- ஆயி சொன்னாள் : “அவர் ஒரு பிராமணர். உன்கிட்ட வர்ற ஆளுங்க மாதிரி இல்ல அவரு. அவர் ஒரு பெரி அறிவாளி. உடம்புல ஆடைகள் அணியிறப்போ அவர் வேத மந்திரங்களைச் சொல்வாரு.”

“நம்ம மீராத்தாயோட ஆளு மாதிரி இருப்பாருபோல இருக்கே அவரு”- ராதா ஒருவித குறும்புத்தனத்துடன் சொன்னாள் : “சில இரவுகள்ல அந்த ஆளு கீதாகோவிந்தம் பாடுவார். அவர் சொல்லித்தர்ற சில பாட்டுகளை மீராத்தாயி பாட முயற்சி பண்றதை நான் கேட்டிருக்கேன்.”

“மீராவோட குரல் ரொம்பவும் இனிமையா இருக்கும்”-ஆயி சொன்னாள் : “அவ மாணிக்கமாச்சே ! பத்தொன்பது வருஷங்களுக்கு முன்னாடி அவளை யார் என் வீட்டு வாசல்ல கொண்டு வந்து போட்டுட்டுப் போனதுன்னு இப்பக்கூட நான் ஆச்சரியத்தோடு நினைச்சுப் பார்க்குறது உண்டு. புருஷன் ஊர்ல இல்லாத நேரத்துல கர்ப்பமாகிப் போன ஏதாவதொரு குடும்பப் பொண்ணுதான் அவளைக் கொண்டு வந்து போட்டிருக்கணும்... “

“ஒரு குழந்தையோட வாழ விருப்பப்படாத ஏதாவதொரு தேவடியாளாக்கூட அது இருக்கலாம்ல..” என்றாள் ராதா.

“உனக்கு மீரா மேல பொறாமை”- ஆயி சொன்னாள்.

சிறிதுகூட திரும்பிப் பார்க்காமல் மீராவின் வழக்கமான வாடிக்கையாளர் அறையைவிட்டு வெளியேறி நடந்துபோனான். எதுவுமே பேசாமல் மௌனமாக அவன் நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆயி. அவனும் அழுதிருக்கிறான். அந்த இளைஞனுக்கு அப்படியென்ன பிரச்சினை? அவனுக்கு மனதில் ஏதாவது கஷ்டமா என்ன அவனைப் பற்றி மீராவிடம் கேட்டால் என்ன என்று அவள் நினைத்தாள். இப்படிப்பட்ட ஒரு மனிதன் இங்கு இனிமேலும் வருவது நல்லது அல்ல. மனைவியிடம் வெறுப்பு கொண்டிருக்கும் வியாபாரிகளையோ, பணக்காரர்களையோ, இடையில் எப்போதாவது உல்லாசமாக இருக்கலாம் என்று வரும் அரசியல்வாதிகளையோ, அல்லது அதே தரத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகளையோதான் மீரா தன் பக்கம் இழுக்க முயற்சிக்க வேண்டும். விலை மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் கிடைக்கும் என்பதற்காக அல்ல. அவர்கள் இங்கு வந்தால், வீட்டிற்கே அது ஒரு புகழைத் தரும் என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

அறையில் அழுது கொண்டிருக்கும் மீராவை அழைத்தாள் ஆயி. மீரா அறையைவிட்டு வெளியே வந்து நிலவைப்போல ஒளிவீசிக் கொண்டிருந்த நியான் விளக்கிற்குக் கீழே நின்றாள். அழுதிருந்த அவள் கண்கள் சிவந்து போய்க் காணப்பட்டன.

“என் மகளே, உன்னை அவன் என்ன செய்தான்?”- ஆயி கேட்டாள்.

“அவர் என்னை ஒண்ணும் செய்யல ஆயி... அவருக்கு எப்பவும் என் மேல பிரியமும் பாசமும்தான்...”

“பிறகு எதுக்கு மகளே நீ அழணும்? உனக்கு வருத்தம் உண்டாகுற அளவுக்கு அவன் ஏதாவது சொல்லிட்டானா?”

மீரா தன் பாதங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.

“உன்னை அவன் திட்டினானா?” மீண்டும் ஆயி கேட்டாள்.

“இல்ல ஆயி...”- மீரா பதில் சொன்னாள் : “என்னைப் பார்க்க வர்றதுக்காக தன்னோட பேனாவை விற்பனை செய்ததா அவர் சொன்னாரு. அவருக்குன்னு சொந்தமா வருமானம் எதுவும் இல்லை. மத்தியானம் சாப்பிடுறதுக்காக வீட்டுல கொடுக்கிற பணத்தையும், பஸ் கட்டணத்துக்குக் கொடுக்கிற பணத்தையும் மிச்சம் பிடிச்சுத்தான் அவர் இங்கே வர்றதே. அவர் என்னைக் காதலிக்கிறாரு...” அதைச் சொன்னபோது மீராவின் கண்களில் நீர் நிறைந்தது.

3

றையின் தரை முழுவதும் சீதா வாந்தி எடுத்தாள். அதைப் பார்த்து அப்போது அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் பயந்து எழுந்து அந்த நிமிடமே அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார். இந்த விஷயத்தில் அவள்மீது ஆயிக்கு பயங்கர கோபம் உண்டானது. அவர் தான் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கினார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். போகிற போக்கில் இந்த வீடு முழுக்க நோய் பீடிக்கப்பட்ட விபச்சாரிகள்தான் இருக்கிறார்கள் என்றொரு கருத்தையும் சொல்லிவிட்டுப் போனதுதான் முக்கியமான விஷயம். தரை முழுக்கப் பரவிக் கிடந்த வாந்திக்கு மத்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த சீதாவை அறைக்குள் நுழைந்த ஆயி பார்த்தாள். வயிறைக் கையால் பிடித்தவாறு நிற்காமல் வந்து கொண்டிருந்த வாந்தியைப் பார்த்துப் பயந்து போய் திகிலடைந்த நிலையில் இருந்தாள் சீதா. பயத்தால் அவள் கண்கள் விரிந்திருந்தன.

ஆயி அவளின் நீளமான தலைமுடியைப் பிடித்து இழுத்து அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். “இந்த வீட்டோட நல்ல பெயர் முழுவதையும் நீ பாழாக்கிட்டே”- ஆயி அவளைப் பார்த்துத் திட்டினாள். “ரோட்ல கூவிக்கூவி பலகாரம் விற்பனை செய்யிற ஆளுகிட்ட அதையும் இதையும் வாங்கித் தின்னுட்டு, இங்கே வர்றவங்க மூஞ்சியில அதை வாந்தி எடுக்குறியா? வண்டிக்காரங்ககிட்ட இருந்து பலகாரங்கள் வாங்கிச் சாப்பிடாதேன்னு எவ்வளவு தடவை நான் சொல்லியிருக்கேன்! நன்றி கெட்ட சவமே! இரு... இரு... மூணு நாட்களுக்கு உன்னைப் பட்டினி போடுறேன்.”

சீதா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“என் தப்பு இல்ல ஆயி”- அவள் தேம்பினாள். “கொஞ்ச நாட்களாகவே எனக்கு முடியல. எதுவும் சாப்பிடக் கூட தோணமாட்டேங்குது. தினமும் சாயங்காலம் ஆயிடுச்சுன்னா வயிறு எரியிற மாதிரி இருக்கு....”

“நீ கொஞ்சம் சோர்ந்து போன மாதிரி இருக்கியே!”- என்று கூறியவாறு ஆயி அவளின் வெள்ளைநிற ப்ளவ்ஸைத் தூக்கிப் பார்த்தாள். அவளின் குருத்து போன்ற மார்பகங்களை ஆராய்ந்தாள். ‘அப்படி இருக்க வாய்ப்பில்லை’ . ஆயி தனக்குள் முணுமுணுத்தாள். “நீ இன்னும் வயசுக்கே வரலியே!”

ஆயி அவளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை தந்தாள். சீதா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். “மூணு நாட்கள் நான் யார்கிட்டேயும் போக வேண்டிய அவசியமில்லே”- சந்தோஷத்துடன் அவள் உரத்த குரலில் சொன்னாள் : “ருக்மிணி, வா... நாம விளையாடலாம்.”

உச்சிப் பொழுது முடிந்திருந்தது. கம்பிகள் மீது சாய்ந்து நின்றவாறு சீதா தன் சிநேகிதியிடம் சொன்னாள் : “வானத்தைப்பாரு. சுண்ணாம்பு தேய்த்த சுவரைப்போல இருக்குல்ல? வெள்ளை நிற சுவர் இருக்கிற ஒரு வீட்டுலதான் முன்னாடி நான் இருந்தேன். ஒவ்வொரு வருஷமும் தீபாவளி வர்றப்போ சுண்ணாம்பையும் மண்ணையும் சேர்த்து என் அப்பா சுவருக்கு வெள்ளையடிப்பார்.”


“உன் அப்பா இப்போ எங்கே இருக்கிறாரு சீதா?”- ருக்மிணி கேட்டாள்.

அவள் தன் தோளைக் குலுக்கினாள். “அப்பா இறந்துட்டாரு. எல்லாரும் இறந்துட்டாங்க. நான்கு வருஷங்களுக்கு முன்னாடி காலரா நோய் வந்து எல்லாரையும் கொண்டு போயிடுச்சு. என் வீட்டுல அஞ்சு வீட்டுல அஞ்சு பேரு செத்துப் போயிட்டாங்க. என் அப்பா, என் அம்மா, என் மூணு அண்ணன்மாருங்க...”

“வெள்ளை நிற சுவருள்ள அந்த வீட்டுக்கு என்ன ஆச்சு?”- ருக்மிணி கேட்டாள்.

“அதுவும் செத்துப்போயிருக்கும்”-சீதாவும் ருக்மிணியும் சிரித்தார்கள். “எல்லாமே சாகப் போறதுதான் ருக்மிணி. இந்த வானம் கூடத்தான்...” - சீதா சொன்னாள். வானத்தின் வெளிச்சத்தையே அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அது அவளின் கண்களை மஞ்சள் நிறமாக்கியது.

மதிய வெயிலின் கடுமை சற்று குறைந்தபோது அந்தச் சிறு பெண்களை ஆயி தன்னருகில் வரும்படி அழைத்தாள். “வாங்கடா கண்ணுகளா. உங்களுக்கு நான் தலைவாரி விடுறேன்” முதலில் ருக்மிணிக்கு ஆயி தலைவார ஆரம்பித்தாள். அவளின் சுருண்டு போயிருந்த முடியில் இருந்த சிக்கல்களை நீக்கி ஒழுங்குபடுத்தி வாரிக் கட்டினாள். சீப்பை வைத்து அழுத்தி வாரும்போது, வலியால் ருக்மிணி தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருந்தாள். “முடியில தேய்க்கிறதுக்கு நான் உனக்கு ப்ரம்மி எண்ணெய் வாங்கித் தர்றேன்”- ஆயி சொன்னாள். “ரெண்டு மாசத்துல உன் முடிக்கு பலம் வந்திடும். இப்போ உன் முடி ரொம்பவும் மெல்லிசா இருக்கு. சீதாவோட முடியைப் பாரு. ரொம்பவும் அடர்த்தியா இருக்கும். முடியோட கனத்தால அவளால நடக்கக்கூட முடியல.”

அந்தச் சிறு பெண்களின் தலைமுடியை ஆயி வாரிவிட்டுக் கொண்டிருக்கும்போது, சிந்துத்தாயி வந்தாள். லேசாக இறுமியவாறு அவள் கேட்டாள் : “எப்படியிருக்கே தங்கச்சி? இன்னைக்கு உன் முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுதே!”

அந்த அவலட்சணம் பிடித்த கிழவியின் கண் பார்வையைப் பற்றி நினைத்த ஆயி ஒரு மாதிரி ஆகிவிட்டாள். “விநாயகர் புண்ணியத்தால எப்படியோ வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு”- ஆயி பதில் சொன்னாள். “சீதாவுக்கு உடம்புக்குச் சரியில்லே. சாப்பாட்டுல அவளுக்கு ருசியே தோணலியாம்.”

“அவ வயசுக்கு வந்துட்டாளா?”

“இல்ல...”- ஆயி சொன்னாள் : “சொல்லப்போனா நான் ரொம்பவும் கவலையில இருக்கேன். இன்னைக்கு அவளை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போயி காட்டலாம்னு இருக்கேன்.”

“ஒவ்வொரு வாரமும் நீ உன் பொண்ணுகளை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போயி பரிசோதிச்சுப் பார்க்குறியா என்ன?”-விஷமம் நிறைந்த கேள்வியைக் கேட்டாள் சிந்துத்தாயி.

தன் மனதில் இருந்த கவலையை மறைக்க படாதபாடுபட்டாள் ஆயி. “நீங்க இப்படிக் கேட்டா எப்படி?”- கிழவியைப் பார்த்து ஆயி கேட்டாள் : “ஒவ்வொரு வாரமும் நான் என் பொண்ணுகளை பரிசோதிச்சுப் பார்க்குறது இல்லைன்னு அந்த கவுசல்யா உங்கக்கிட்ட சொன்னாளா?”

“ஆமா... நேற்று அவ என்கிட்ட அதைத்தான் சொன்னா.” பிறகு சிந்துத்தாயி அதை விளக்க ஆரம்பித்தாள் : “அவ வீட்டுக்கு முன்னாடி இருக்குற ரோடு வழியா நான் ரேஷன் கடைக்குப் போய்க்கிட்டு இருக்குறப்போ, என்னை அவ தடுத்து நிறுத்தினா. ஒரு கப் தேநீர் குடிச்சிட்டுப் போகும்படி சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினா. தேநீர் குடிக்கப் போகாம இருந்த எதுக்குத் தேவையில்லாம அவளோட வெறுப்புக்கு ஆளாகணும்னு நினைச்சேன். வெறுப்பு வந்துடுச்சுன்னா அவளால் பிரச்சினைகள் உண்டாக்க முடியும்னு உனக்கு நல்லாத் தெரியுமே! அவளுக்குத் துன்பம் உண்டாக்குறவங்களுக்கு, பயங்கர விரோதியா மாறிடுவா கவுசல்யா. சொல்லப்போனா சமீப காலமா அவ பெரிய செல்வாக்கு உள்ளவளா மாறிக்கிட்டு வர்றா. அவளோட வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பெரிய அரசாங்க அதிகாரியோட கார் நிக்கிறதை நான் கண்ணால பார்த்தேன்.”

“இது அவளால எப்படி முடியுது... அதுவும் அவளோட சுத்தமில்லாத பொண்ணுகளை வச்சுக்கிட்டு?”

“அவளோட பொண்ணுகளுக்கு நல்ல அனுபவம் இருக்கு”- கிழவி சொன்னாள்.

“இப்பவே என் பொண்ணுகளை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்”- ஆயி சொன்னாள் : “இங்கே தேவையில்லாம பேசி நேரத்தைப் பாழாக்க விரும்பல? சிந்துத்தாயி.”

“சரி, தங்கச்சி...”- வெற்றிலைப் பெட்டியிலிருந்து புகையிலையைக் கிள்ளியெடுத்தவாறு கிழவி சொன்னாள் : “இன்னைக்கு என்னாலும் எதுவும் செய்ய முடியல. தலை சுத்துற மாதிரி இருக்கு. ஒரு சோடாவுக்கான பணம் தரமுடியுமா தங்கச்சி? உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கிறப்போ சோடா குடிச்சாத்தான் வயிறு சரியாகுது...”

“சிந்துத்தாயி? நீங்க சோடான்னு சொன்னா உண்மையான சோடாவையா சொல்றீங்க?” - ஆயி கேட்டாள் : “கிடைக்கிறப்போ நீங்க நாட்டு சாராயம்தானே குடிக்கிறீங்க! நீங்க ஒரு புட்டி முஸாம்பி வாங்குறதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஐயா சொன்னாரே!”

“எல்லா இடத்துலயும் பொய் சொல்றவங்க இருக்கத்தான் செய்றாங்க”- கிழவி முணுமுணுத்தாள் : “சமீப காலமாகவே என் மீது எல்லாருக்கும் வெறுப்புதான். நல்ல காலத்துல எல்லா வகையிலும் நான் எல்லாருக்கும் உதவினேன். யாருக்கும் என்மேல இப்போ விருப்பம் இல்ல. எல்லாரும் என்கிட்ட விளையாட்டு காண்பிக்கிறாங்க. சொல்லப்போனா இளமைன்ற ஒண்ணு போயிடுச்சுன்னா எல்லா பெண்களோட நிலைமையும் இதுதான். லட்சுமி, இன்னைக்கு உனக்கு ஒரு வீடு இருக்கு. ஆனா, நான் இப்போ சொல்றதை மனசுல வச்சுக்கோ. பத்து வருடங்கள் போகட்டும். உன்னை இந்த வீட்டைவிட்டு விரட்டியடிக்கிறாங்களா இல்லையான்னு பாரு. உனக்குப் பதிலாக வேற யாராவது இங்கே ஆயியா ஆவா. பெரும்பாலும் அப்படி வர்றவ மீராவாகத்தான் இருக்கும். இல்லாட்டி அந்தக் கறுப்பா இருக்கிறவ இருக்காள்ல! சரஸ்வதி...”

“கருநாக்கை வச்சு அப்படியெல்லாம் சொல்லாதீங்க சிந்துத்தாயி...”-ஆயி கோபத்துடன் சொன்னாள்: “என்னை என்னோட பொண்ணுக அன்பா வச்சிருப்பாங்க. நான் அவங்களுக்கு ஒருநாளும் துரோகம் செஞ்சது இல்ல. அதோ அங்கே இருக்கிற ருக்மிணிக்கிட்ட கேட்டுப் பாருங்க. நான் இவங்க ஒவ்வொருத்தருக்கும் எப்படியெல்லாம் சாப்பாடு போடுறேன்னும் உடம்புக்குச் சரியில்லாம ஆச்சுன்னா இவங்களை நான் எப்படி கவனமா பார்த்துக்குறேன்னும் கேட்டுப் பாருங்க. உங்க பொண்ணுக செய்தது மாதிரி என்னை இவங்க எந்தக் காலத்துலயும் வெளியே விரட்டி விடமாட்டாங்க. சாகுற வரை நான் இவங்களோட ஆயியா இருப்பேன்.”

ஒருவகை கேலியுடன் சிந்துத்தாயி ஓசை உண்டாக்கினாள். “முன்னாடி நான்கூட அப்படித்தான் நினைச்சிட்டிருந்தேன், லட்சுமி” -அவள் சொன்னாள் : “ஆனா, என்ன நடந்துச்சுன்னு உனக்குத்தான் தெரியுமே! என்னைப் பற்றி என்னென்னவோ சொல்லிட்டுல்ல என்னை விட்டு என் அருமை மகள் வெளியேற்றினா. என்னால என்ன செய்ய முடிஞ்சது? ஏதாவது ஒரு ஆம்பளைய கவர்ந்து இழுக்குறதுக்கான வயசையெல்லாம் நான் தாண்டி வந்துட்டேன்.


எங்கேயாவது இருக்கிறதுக்கு தலைக்குமேல ஒரு கூரை வேணும்னு எப்படியெப்படியெல்லாம் நான் அலைஞ்சு திரிஞ்சிருப்பேன்! ஒரு வருஷம் ரோட்டுல உட்கார்ந்து நான் பிச்சை எடுத்தேன். அப்போ இந்தப் பகுதியில உள்ளவங்களுக்கு நான் ரொம்பவும் உபயோகமா இருந்தேன். வெறும் இருபது ரூபா செலவுல கர்ப்பத்தைக் கலைக்க என்னால முடிஞ்சது. அதுனால நீங்களெல்லாம் என்னை வீடுகளுக்குக் கூட்டிட்டு வந்தீங்க. எனக்கு அதிர்ஷ்டம்ன்றது இருக்கு. ஆனா, எனக்கு இருந்த அதிர்ஷ்டம் உனக்கும் இருக்கும்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?”

புடவைத் தலைப்பால முகத்தை மறைத்துக் கொண்ட ஆயி சிறிதும் வெட்கப்படாமல் உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். தன்னுடைய கிராமத்தின் சேறு நிறைந்த குளத்தில் கிடக்கும் எருமைகள் உண்டாக்கும் ஓசைதான் அதைக் கேட்டபோது சீதாவிற்கு ஞாபகத்தில் வந்தது. ஆயியின் அழுகைச் சத்தம் மிகவும் வினோதமாக இருப்பதாக அவள் உணர்ந்தாள். தன்னுடைய தோளால் அவள் ருக்மிணியைக் குலுக்கினாள். குலுங்கிக் குலுங்கி சிரிக்க வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. ஆனால், அந்தத் தடிமனான பெண் அழுவதை பரிதாபம் மேலோங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் ருக்மிணி.

உள்ளேயிருந்து மீரா உரத்த குரலில் அழைத்தாள் : “ருக்மிணி, இங்கே கொஞ்சம் வா. என் ப்ளவ்ஸ் பட்டனை பின்னாடி கொஞ்சம் போட்டுவிடு.”

பட்டன் போடாமல் திறந்து கிடந்த ப்ளவ்ஸ், கறுப்புநிறப் பாவாடை ஆகியவற்றுடன் நின்றிருந்த மீராவிற்கு உதவுவதற்காக ருக்மிணி அறைக்குள் ஓடினாள். மீராவின் முகம் மகிழ்ச்சி மிகுதியால் மிகவும் பிரகாசமாக இருந்தது. அவள் தன் நெற்றியில் குங்குமமும் கண்களில் மையும் இட்டிருந்தாள். “மீராத்தாயி, வெளியே எங்கேயாவது நீங்க போறீங்களா என்ன?” - அந்தச் சிறு பெண் கேட்டாள்.

“இல்ல... சாயங்காலம் வர்றதா சொல்லிட்டுப் போன என் நண்பனுக்காக நான் இப்படி ஆடை அணிஞ்சிருக்கேன்.”

“உங்களைப் பார்க்குறப்போ புதுப் பொண்ணு மாதிரி இருக்கு”-ருக்மிணி சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த மீரா அவளை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு”- மீரா சொன்னாள் : “நீ இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லாதே.”

“உங்களைப் பார்க்க வர்ற அந்த கல்லூரி மாணவனையா நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”- ருக்மிணி கேட்டாள் : “உங்களைப் பார்க்குறதுக்காக பவுண்டன் பேனாவை விற்றாரே, அவர்!”

“ம்... அவர்தான் என் கணவர். அவரோட பேரு கிருஷ்ணன். ஆச்சரியமா இருக்கா ருக்மிணி?” அந்தச் சிறு பெண்ணைப் பார்த்து மீரா கேட்டாள் : “என் பேரு மீரா. அவர் பேரு கிருஷ்ணன். பொருத்தமா இருக்குது இல்ல?”

ருக்மிணி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். அந்த மாலை நேரத்தில் மீராத்தாயி மிகவும் வினோதமாக நடந்து கொள்வதைப் போல அவள் மனதிற்குப் பட்டது. ஜுரத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மனம் போனபடியெல்லாம் பேசுவதைப்போல மீரா பேசிக் கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள். மீராவின் கன்னங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டன. கண்களில் நல்ல பிரகாசம் தெரிந்தது. மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு மாலையை மீரா தன் கூந்தலில் அணிந்தாள். உதட்டில் மேலும் சிவப்பு நிறம் இருக்கவேண்டும் என்பதற்காக தன் பற்களால் உதடுகளை அழுத்திக் கடித்தாள்.

“உதட்டுல லிப்ஸ்டிக் பூசிக்கலாமே?”-ருக்மிணி கேட்டாள்.

“அவருக்கு லிப்ஸ்டிக் பிடிக்காது”-மீரா சொன்னாள். பளவ்ஸ் பட்டனைப் போட்டவுடன், உணர்ச்சிவசப்பட்ட மீரா அவளை இறுக அணைத்துக் கொண்டு அவளுக்கு முத்தம் தந்தாள். “கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்.”

முன்னறைக்கு ருக்மிணி திரும்பி வந்தபோது, ஆயி தன் அழுகையை நிறுத்திவிட்டிருந்தாள். சிந்துத்தாயி அந்த இடத்தை விட்டுப் போயிருந்தாள். சாலையில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த பஸ்களைப் பார்த்தவாறு படியில் உட்கார்ந்திருந்த சீதாவின் அருகில் போய் ருக்மிணி உட்கார்ந்தாள். “ஒருநாள் மாடி பஸ்ல ஏற்றி ஆயி எங்களை அழைச்சிட்டுப் போனாங்க”-சீதா சொன்னாள் : “அதுல உட்கார்ந்து வெளியே கையை நீட்டி நான் ஒரு மரத்துல இருந்த கொய்யாக் காயைப் பறிச்சேன்.”

“நீ பயங்கரமான ஆள்தான்.”- ருக்மிணி சொன்னாள்.

“ஆயிக்கிட்ட வேணும்னா நீயே கேட்டுப் பாரேன்”- சீதா மெதுவான குரலில் சொன்னாள்.

“மரத்துல பழுத்திருந்த கொய்யாவை நான் பறிச்சேன். அதில் நிறைய விதைகள் இருந்துச்சு. அந்த விதைகள் பார்க்க எவ்வளவு நல்லா இருந்துச்சு தெரியுமா, அந்த விதைகள் வயிற்றுக்குள்ள போனா, வயிறே நிறைஞ்ச மாதிரி இருக்கும்னு ஆயி அப்போ சொன்னாங்க. உள்ளே ஆழத்தில அடுத்தடுத்து இருந்த விதைகள்...”

“அதைப்போல விதை ஏதாவது உன் வயிற்றுல இருக்கும்” -ருக்மிணி சொன்னாள் : “அதனாலதான் நேத்து ராத்திரி வாந்தி எடுத்திருக்கே!”

“ஆம்பளைங்க என் உடம்பைத் தெட்டுத் தடவுறப்போ மனசு புரட்டிப் புரட்டி எடுக்கிறதுனாலதான் நான் நேற்று வாந்தி எடுத்தேன்”- சீதா சொன்னாள் : “எல்லா ஆம்பளைங்க மேலேயும் எனக்கு ஒரே வெறுப்பு...”

“அப்போ நீ கல்யாணமே பண்ணிக்கமாட்டியா?”-ருக்மிணி ஆச்சரியத்துடன் கேட்டாள் : “சொந்தத்துல ஒரு வீடும் குழந்தைகளும் உனக்குன்னு வேண்டாமா?”

“வேணும்தான்... சொந்தத்துல ஒரு வீடும் எனக்குன்னு குழந்தைகளும் வேணும்னு எனக்குக்கூட விருப்பம்தான். கால்களைப் பிடிச்சு விளையாடுற தடிச்சு கொழுகொழுன்னு இருக்குற ஒரு குழந்தையைத்தான் நான் கனவு காணுறேன். என்னைப் பார்த்து அவன் சிரிக்கணும். ‘அம்மான்னு என்னை அவன் கூப்பிடணும். ஆனா, ஒரு ஆம்பளைகூட என் வீட்டுல இருக்கக்கூடாது...”

சாலையில் போய்க் கொண்டிருந்தவர்களிடமிருந்து முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு ஆள் உள்ளே வந்தான்.

“இந்த நேரத்துலயா?”-ஆயி கேட்டாள் : “சாயங்காலம்கூட ஆகலியே!”

“சாயங்காலம் எனக்கு வேலைகள் நிறைய இருக்கு”- வந்த ஆள் சொன்னான். ஒரு வெள்ளை புஷ் சட்டையும் டெர்லின் பேண்ட்டும் அவன் அணிந்திருந்தான். நகத்தை கடித்துக் கொண்டு ஒருவித பதைபதைப்புடன் அவன் தன்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி.. சரி... யார் வேணும்னு பாருங்க”-கூடி நின்றிருந்த இளம் பெண்களுக்கு நேராக விரலைச் சுட்டிக் காட்டியவாறு ஆயி சொன்னாள். மீராவைத் தவிர மற்ற எல்லாருமே முன்னறையில்தான் உட்கார்ந்திருந்தனர். ராதா எப்போதும் போல தொடையைக் காட்டிக் கொண்டு இலட்சியமாக உட்கார்ந்திருந்தாள். வந்த ஆள் அவளை நோக்கி விரலைக் காட்டினான். அவள் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள்.

அப்போது மீராவின் அறைக்குள்ளிருந்து கீதாகோவிந்தத்தின் வரிகள் உயர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன.

“எவ்வளவு இனிமையா பாடுறா, என் மீரா”-ஆயி சொன்னாள்.

பெண்கள் அமைதியாக பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘ரதிசுகஸாரே கதமபிஸாரே மதனமனோஹர வேஷம்

நகுருநிதம்பினி கமனவிளம்பன மனுஸரதம் ஹ்ருதயயேசம்.’


4

மீரா கல்லூரி மாணவனுடன் ஓடிப்போன விஷயம் பொழுது விடிந்த பிறகுதான் ஆயிக்குத் தெரிய வந்தது. மீராவின் அறை அடைத்துக் கிடந்தது. அந்த அறைக்கு வெளியே நடந்து போன மற்ற பெண்கள் அடைக்கப்பட்டிருந்த கதவை மெதுவாகத் தட்டியவாறு கேட்டார்கள். “மீராத்தாயி, படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாத அளவுக்கு அந்த ஆளு ஒரு வழி பண்ணிட்டுப் போயிட்டானா என்ன?” அதைக் கேட்டு எப்போதும் கேட்கக்கூடிய கோபம் கலந்த பதிலோ அல்லது மெதுவாகக் கேட்கும் சிரிப்புச் சத்தமோ உள்ளேயிருந்து கேட்கவில்லை.

“வந்து சாப்பிடு...”-கதவை பலமாகத் தட்டியவாறு ராதா அழைத்தாள்.

எல்லா நாட்களிலும் காலை ஆறு மணிக்கு அந்த வீட்டில் காலை உணவு தயாராக இருக்கும். நெய் ஒழுகிக் கொண்டிருக்கும் புரோட்டாவும் முட்டைக் குழம்பும் உள்ள கனமான உணவு. அதைத் தவிர ஒரு கப் பால்... காலை உணவு சாப்பிட்டு முடித்த பிறகு எல்லா பெண்களும் பாயில் சுருண்டு படுத்து சுகமாக உறங்குவார்கள். மதியம் இரண்டு மணிக்குச் சாப்பாடு சாப்பிடும்வரை அந்த உறக்கம் தொடரும். சாப்பிட்ட பிறகும் தூக்கம்தான். மாலை ஐந்து மணி ஆனவுடன் அவர்கள் தங்களின் அன்றாட வேலைகள் படுக்கையை விட்டு எழுவார்கள். எல்லாரும் எழுந்து போய்க் குளிப்பார்கள். குளித்து ஈரமான முடியை வாரி முடித்து அதில் பூமாலை சூடுவார்கள். முகம் பிரகாசத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக கன்னங்களில் ரூஜ் தேய்ப்பார்கள். இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த பவுடருக்குக் கீழே அவர்களின் தோல் சொரசொரப்பாகவும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். நிரந்தரமாகப் பயன்படுத்தப்படுவதால் அவர்களின் உடல் உயிரற்ற தன்மையுடன் வற்றிப்போன குளத்தைப் போல இருக்கும்.

சிறுமிகளான ருக்மிணியும் சீதாவும் மட்டும் எப்போதும் சிரித்த வண்ணம் இருப்பார்கள். உடலுறவு பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு இன்னும் அதற்குரிய வயது வரவில்லை. தங்களுக்கே தெரியாத ஏதோ காரணங்களால் தங்கள் மீது சுமத்தப்படும் தண்டனைதான் தங்களுக்கு விருப்பமே இல்லாமல் ஈடுபட நேர்கிற உடலுறவு சம்பவங்கள் என்பதுதான் அவர்கள் கருத்து. பெண்ணை ஒரு சுமையாக, ஒரு தொந்தரவாக நினைக்கும் ஒரு சமூகத்தில் பெண்ணாகப் பிறந்த தவறு காணமாகத்தான் தாங்கள் இப்படி தண்டிக்கப்படுவதாக அந்த சிறுமிகள் நினைத்தார்கள். சதுரக்கட்டத்தில் விளையாடும் விளையாட்டுக்கு மத்தியில் அவ்வப்போது கிடைக்கக்கூடிய இந்தத் ‘தண்டனை’யை மனப்பூர்வமாக அந்தச் சிறுமிகள் ஏற்றுக் கொள்ளவே செய்தார்கள். அந்த அளவிற்கு ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாக இருந்தார்கள் அவர்கள் இருவரும். தாத்தா வயதைக் கொண்ட பருமனான ஆட்கள் அவர்களின் பிஞ்சு உடல்மீது படுத்து சந்தோஷம் கண்டு கொண்டிருக்கும்பொழுது, அவர்களின் மனது வேறு எங்கோ இருக்கும். வாசலில் சதுரக் கட்டத்தில் நொண்டி நொண்டி ஓடிக் கொண்டிருப்பதில் அவர்களின் மனம் ஈடுபட்டிருக்கும்.

அடைக்கப்பட்டிருந்த கதவை ராதா தள்ளித் திறந்தபோது, தூக்கத்தின் சாயல் விழாத படுக்கை உள்ளே இருந்ததே தவிர, அங்கு மீராவைக் காணவில்லை. மீராவிற்கு மிகவும் பிடித்த புடவைகள் இருந்த ட்ரங்க் பெட்டியும் அங்கிருந்து காணாமல் போயிருந்தது. மீராவின் உள்ளங்கை அளவுள்ள ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டு தரையில் கிடந்தது. சுற்றிலும் குங்குமம் பரவிக்கிடந்தது.

நெற்றியில் கையை வைத்துக் கொண்டு உரத்த குரலில் ராதா சொன்னாள். “நம்ம மீராத்தாயி எங்கேயோ போயிட்டா. அவளுடைய கல்லூரி மாணவனான காதலனுடன் அவள் ஓடிப் போயிப்பாளோ?”

விஷயத்தைத் அறிந்த ஆயி மீராவின் படுக்கையில் உட்கார்ந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தாள். “என் தங்கப்பறவை கூட்டைவிட்டு பறந்து போயிடுச்சே.” அவள் ஒப்பாரி வைத்தாள். அதிர்ச்சி தரக்கூடிய அந்தச் செய்தியைக் கேட்டு வருத்தமடைந்ததைப் போல ஜன்னலுக்கு வெளியே வந்து நின்ற ஒரு காகம் சத்தம் போட ஆரம்பித்தது. ஆயியின் தலை முடியைக் கையால் தடவியவாறு ஆறுதல் சொன்னாள் ராதா. “மீராத்தாயி நிச்சயம் திரும்பி வருவா. அந்தப் பையன் கையில பணம் எதுவும் இல்ல. மீராத்தாயோட தங்க மாலையை விற்று அந்தப் பணம் தீர்ந்து போனவுடனே சாப்பிட வேற வழியே இல்லாம மீரா இங்கே வரப்போறது உறுதி.”

எனினும் ஆயி அழுது கொண்டுதானிருந்தாள். அவளின் அழுகைச் சத்தம் மேலும் உரத்த குரலில் ஒலித்தது. கடைசியில் அவளின் கவலையைத் தெரிந்துகொண்டு பக்கத்திலுள்ளவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

முதலில் அங்கு வந்தது கவுசல்யாதான். “அக்கா என்ன நடந்துச்சு?”- ஆயியைப் பார்த்து கவுசல்யா கேட்டாள்.

“என் விரோதிங்க என் மீராவைக் கொண்டு போயிட்டாங்க.”- ஆயி சொன்னாள். “எல்லாருக்கும் அவளோட அழகைப் பார்த்து பொறாமை. எல்லா அரசாங்க அதிகாரிகளும் அவளைச் சொந்தமாக்கிக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதே மாதிரிதான் பணக்கார பிஸினஸ்காரர்களும் ஆசைப்பட்டாங்க. என்னோட மொத்த சொத்தும் போயிடுச்சு. என் மீராவைப் போல ஆம்பளைகளை கவர்ந்து இழுக்குறதுக்கு வேற யார் இருக்கா? என்ன உடல் அவளுக்கு? நான் இனிமேல் காசிக்குப் போய் சாகப்போறேன்”- ஆயி அப்போதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

“மீரா தன் விருப்பப்படிதான் போயிருப்பா”- கவுசல்யா சொன்னாள். “இப்படிப்பட்ட சம்பவங்கள் இதுக்கு முன்னாடியும் நடந்திருக்கு இல்ல? நல்ல பெயர் வாங்கின வீடுகள்ல கூடத்தான் இந்த மாதிரி நடந்திருக்கு. மரைன்ட்ரைவ்ல போன வருஷம் அந்த நேபாளிப் பொண்ணு ஓடிப்போகலியா? போனவ போயி சாகட்டும். நன்றி கெட்ட ஒரு பொண்ணை நினைச்சு நீங்க எதுக்குக்கா தேவையில்லாம கவலைப்படணும்?”

“கவுசல்யா இங்கே இருக்குற இந்த பொண்ணுகளை நான் எவ்வளவு நல்லா பார்த்துக்குறேன்னு உனக்குத் தெரியாதா? நெய்ல தயாரிச்ச புரோட்டாவும் முட்டையும் பாலும் காட்லிவர் எண்ணெயும் மாத்திரையும்னு நான் இவங்களுக்கு என்னவெல்லாம் தர்றேன். நகரத்துல நடக்குற எல்லா விழாக்களுக்கும் பொருட்காட்சிகளுக்கும் நான் இவங்களை அழைச்சிட்டுப் போறேன். நான் இவங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன் தெரியுமா?”

“அக்கா நீங்க ரொம்பவும் இரக்க குணம் உள்ளவங்களா ஆயிட்டீங்க”- கவுசல்யா அறிவுரை சொன்னாள். “இந்தப் பொண்ணுக மேல அளவுக்கதிகமா அன்பு செலுத்துறதைப் பற்றி நானே உங்கக்கிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன். அன்பா இருக்குறது எந்தக் காலத்துலயும் நமக்கு உதவாது. அப்படி இருக்குறதை கண்டு பிடிச்சிட்டேன்னா நான் என் பொண்ணுகளை சாட்டையை வச்சு விலாசிட்டுத்தான் வேற வேலை பார்ப்பேன். அதுனால அவங்களுக்கு என்னைப் பார்த்தா பயம். என் பொண்ணுக எனக்கு அன்னியர்கள் மாதிரிதான். அக்கா உங்க பொண்ணுங்க செய்யிறது மாதிரி என் பொண்ணுங்க பகல் முழுவதும் வாசல்ல கட்டம் போட்டு விளையாடுறது இல்ல.


மைனர் பொண்ணுகளை விபச்சாரத்துக்கு கொண்டு வர்றது சட்ட விரோதம்னு உங்களுக்குத் தெரியாதா? இந்த வீட்டுல இருக்குற மைனர் பொண்ணுகளைப் பற்றி ஆளுங்க எப்படியெல்லாம் பேசுறாங்க தெரியுமா? அதுவும் அக்கா உங்களோட நண்பர்கள்னு சொல்லிக்கிறவங்க... அவங்க பேரை நான் சொல்ல மாட்டேன்.”

“என் மைனர் பொண்ணுகளைப் பற்றி யார் சொன்னாங்க?”- அழுது சிவந்து போன கண்களுடன் மீராவின் படுக்கையைவிட்டு வேகமாக எழுந்த ஆயி கேட்டாள். “அந்தப் பிசாசு சிந்துத்தாயியா சொன்னா? இல்லாட்டி... இன்ஸ்பெக்டர் ஐயாவா?”

ரகசியங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்துடன் கவுசல்யா தலையைக் குலுக்கியவாறு சிரித்தாள். “நான் இங்கே பொய் சொல்றதுக்காக வரல. அக்கா உங்களுக்கு ஆறுதல் சொல்லணும் போல இருந்துச்சு. அதுனாலதான் வந்தேன்.”

புதிதாக மலர்ந்த பாசத்துடன் கவுசல்யாவை ஆயி இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். “உனக்கு மட்டும்தான் என்மேல அன்பு இருக்கு...”

“நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து நிற்போம்”- கவுசல்யா பதில் சொன்னாள். “நமக்கு பொதுவான எதிரிகள் இருக்காங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து நின்னா நமக்கு யாரும் தொந்தரவு தர முடியாது. ஏன் போலீஸ்காரங்க கூட...”

கறுப்பு நிறமுள்ள சரஸ்வதி தன்னுடைய பொருட்களுடன் மீராவின் அறையை நோக்கி வந்தாள். “மற்ற எல்லாரையும்விட என்கிட்டத்தான் நிறைய பேரு வர்றாங்க”- ஏதோ விளக்கிச் சொல்வதைப் போல் அவள் சொன்னாள். “முன்னாடியிருந்தே இந்த அறைமேல எனக்கு ஒரு கண்ணு இருக்குது. இங்கேயிருந்து பார்த்த அகலமான தெரு தெரியும். ஜன்னல் படியில உட்கார்ந்து கார்ல போற ஆளுகளை கைகாட்டி இழுக்குறதுக்கு இந்த அறையில இருக்குறதுதான் சரியா இருக்கும்.”

அதைக் கேட்டு ராதாவிற்கு பயங்கர கோபம் உண்டானது. ஆனால் அவளைவிட வீட்டுக்கு அதிகமான வருமானத்தைச் சம்பாதித்துத் தரும் சரஸ்வதியுடன் நியாயம் பேசிக் கொண்டிருக்க அவளால் முடியவில்லை. மற்றொருத்தியின் காதில் மெதுவான குரலில் ராதா சொன்னாள். “இவ உண்மையிலேயே ஒரு தேவடியாதான். யாராவதொரு ஆம்பளை கண்ணை உயர்த்தி பார்த்துட்டாபோதும்... இப்படியும் அப்படியுமா இவ பின் பக்கத்தை ஆட்டிக்கிட்டு நடக்குறதை நீ பார்த்திருக்கேல்ல?”

வாசலில் இருந்த திண்ணையில் உட்கார்ந்து தலையைக் குனிந்தவாறு ஆயி அழுவதும் மூக்கைச் சிந்துவதும் மீராவின் நன்றி மறந்த செயலை நினைத்துப் பார்த்து கோபமாகப் பேசுவதுமாக இருந்தாள். அப்போது அந்த வழியே தொழிலாளர்களும் மில் பணியாட்களும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் வந்தபோது மதியநேரம் முடிந்திருந்தது. அவர் ஆயியைப் பார்த்து ஆச்சரியம் மேலோங்கக் கேட்டார்.

“லட்சுமிபாயி இந்த விஷயத்தை முன்கூட்டியே என்கிட்ட நீங்க சொல்லியிருக்கலாம்ல?”

இருண்டுபோயிருந்த நெற்றியில் கையால் அடித்துக் கொண்டு வருத்தம் கலந்த குரலில் ஆயி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“இந்த விஷயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஓடிப்போன அந்தப் பொண்ணை எப்படியாவது இங்கே திரும்பி கொண்டு வந்திருப்பேன். ரெயில்வே ப்ளாட்ஃபாரங்களையும் பஸ் ஸ்டேஷன்களையும் நல்லா பார்க்கும்படி நான் ஆளுங்களை அனுப்பியிருப்பேன். அந்தப் பிச்சைக்காரப் பயல பிடிச்சிட்டு வந்து ஜெயில்ல போட்டிருப்பேன். இந்நேரம் அவங்க நகரத்தைக் கடந்து ஏதாவது கிராமத்துக்குள்ள போயி ஒளிஞ்சிருப்பாங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அந்தப் பையனை சிறைக்குள்ள போட்டு என்ன பிரயோஜனம்?”- ஆயி கேட்டாள். “தான் விருப்பப்பட்டுத்தான் மீரா அவன்கூட போயிருக்கா. அவ ஒண்ணும் மைனர் பொண்ணு இல்ல. அந்தப் பையனை மீரா யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சிக்கிட்டான்னு ருக்மிணி என்கிட்ட சொன்னா.”

“கல்யாணமா?”- இன்ஸ்பெக்டர் உரத்த குரலில் கத்தினார். “மதிப்புள்ள ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒரு தேவடியாதான் கிடைச்சாளா? அவன் ஒரு கூட்டுக் கொடுக்குற ஆளா இருப்பான். அவளை வச்சு பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிருப்பான். இந்த சூது வாது நிறைஞ்ச உலகத்தைப் புரிஞ்சிக்க முடியாத ஒரு சுத்தமான மனசைக் கொண்ட பெண் நீங்க. என் லட்சுமிபாயி தன்னைத் தொடக் கூட என்னை அவ அனுமதிக்கல. அந்த விஷயம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? ஒருநாள் நான் அவ முன்னாடி முப்பது ரூபாயை நீட்டினேன். அப்போ அவ சொன்னா “வேண்டாம் இன்ஸ்பெக்டர் சார்... நான் காதலிக்கிற அந்த ஆளை ஏமாற்ற என்னால முடியாது”ன்னு. உங்களோடது போல உள்ள ஒரு விபச்சாரம் நடக்குற வீட்டுல இருக்குற ஒருத்தி மதிப்பான ஒரு மனிதர்கிட்ட இப்படியா பேசுவாங்க? என் லத்தியால அங்கேயே அவளை நாலு போட்டு சரி பண்ணியிருக்கணும். ஆனால் உங்க வீட்டுல தேவையில்லாம ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம்னு நினைச்சு நான்தான் அமைதியா இருந்துட்டேன். நீங்க என் அக்கா மாதிரி லட்சுமிபாயி...”

“நீங்க உண்மையைச் சொல்றீங்க இன்ஸ்பெக்டர்”- ஆயி அழுதாள். “நீங்க என் சகோதரர்தான். மனசுல வருத்தம் உண்டாகுற ஒவ்வொரு நேரத்துலயும் நான் உங்களைத்தான் தேடுறேன். உங்க உதவி மட்டும் இல்லாமலிருந்தா இந்த திசையில என்னால வாழ்ந்திருக்கவே முடியாது. இன்னும்கூட நல்ல இடமா பார்த்து க்ராண்ட்ரோடு பக்கமோ இல்லாட்டி வேற ஏதாவது நல்ல இடம் பார்த்து என் பொண்ணுகளை அழைச்சிக்கிட்டு போனா என்னன்னு பல தடவை நான் யோசிச்சிருக்கேன். என் பொண்ணுக முதல்தரமா வளர்ந்தவங்க. நான் சொல்றது உண்மைதானே? இங்கே வர்ற ஒவ்வொரு ஆளையும் ஆச்சரியப்பட்டு நிக்க வைக்கிறா என் சின்ன பொண்ணு ருக்மிணி. அவளுக்கு அந்த அளவுக்கு அழகான உடம்பு அமைஞ்சிருக்கு. நல்ல வாசனையும் அவள்கிட்ட இருக்கு. இன்ஸ்பெக்டர் அவ நேற்று என்கிட்ட சொன்னா. உங்களை அவளுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்காம். நீங்க ஒரு அழகன்னு அவ சொன்னா.”

“எங்கே அவ?”- இருண்ட இடைவெளியைப் பார்த்தவாறு அவர் கேட்டார்.

“அந்த ஹால்ல படுத்து அவ உறங்கிக்கிட்டு இருப்பா”- ஆயி சொன்னாள். “மீரா இங்கேயிருந்து ஓடிப்போனதுல அவளுக்கு ரொம்பவும் வருத்தம். பாவம்... அவ எப்படி அழுதா தெரியுமா? காலையில மீராதான் அவளைக் குளிப்பாட்டுவா. பாட்டு பாடக் கூட அவ இவளுக்குச் சொல்லித் தந்தா.”

“நான் ருக்மிணியைக் கொஞ்சம் பார்க்கட்டுமா?” அவர் கேட்டார்.

அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டுவர ஆயி உள்ளே போனாள். கணவனும் மனைவியுமாக வேடங்கள் அணிவிக்கப்பட்ட இரண்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்துக் கொண்டு அப்போது ருக்மிணி விளையாடிக் கொண்டிருந்தாள். சீதா தரையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தவாறு அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“மகளே இன்ஸ்பெக்டர் ஐயா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாரு”- ருக்மிணியைப் பார்த்து ஆயி மெதுவான குரலில் சொன்னாள். “பொம்மைகளை இங்கேயே வை. என் அறைக்குப் பக்கத்துல இருக்குற அந்தச் சின்ன அறைக்கு நீ போ. அங்கே அவரை நான் வரச் சொல்றேன்.”

“இப்போ வேண்டாம் ஆயி”- ருக்மிணி பிடிவாதமான குரலில் சொன்னாள். “நாங்க இங்கே ஜாலியா விளையாடிக்கிட்டு இருக்கோம். நேற்று வாங்கித் தந்த இந்த பொம்மைக்கு நம்ம பொம்மையை நாங்க கல்யாணம் செஞ்சுத் தரப்போறோம். மீரான்னும் கிருஷ்ணன்னும் நாங்க இந்த பொம்மைகளுக்குப் பேர் வச்சிருக்கோம். பயமுறுத்துற முகத்தை வச்சிருக்குற அந்த இன்ஸ்பெக்டரைப் போகச் சொல்லுங்க ஆயி.”

ஆயி குனிந்து அவளின் காதைப் பிடித்துத் திருகினாள். “இங்கே இருந்து இப்போ எழுந்திருக்கிறியா இல்லியா?”- அவள் திட்டினாள். “இன்ஸ்பெக்டர் ஐயாவைப் போல இருக்குற ஒரு ஆளை எப்படி உன்னால அப்படிப் பேச முடிஞ்சது? உன்னை அவருக்கு வேணும்னு தோணினா உடனே நீ போயி அவரை சந்தோஷப்படுத்தணும். நீ சொன்னபடி நடக்க மாட்டேன்னா சொல்ற?”

“சரி ஆயி...”- தரையை விட்டு மெதுவாக எழுந்த அந்தச் சிறுமி ஆயி சொன்னபடி நடக்கத் தயாரானாள். “சீதா நீ இங்கேயே இரு. நான் இப்போ வந்திடுவேன். நான் வந்தபிறகு பொம்மைகளோட கல்யாணத்தை நடத்தலாம்.” அப்போதும் தரையில் படுத்திருந்த சீதா ஒரு வெகுளித்தனமான சிரிப்பைச் சிரித்தாள்.

அந்தச் சிறுமியிடம் இன்ஸ்பெக்டர் அப்போது மிகவும் பாசத்துடன் பழகினார். “கண்ணைத் திறந்து மூடுற ஒரு பொம்மை உனக்கு வேணுமா?”- அவளின் அழகான கைகளைத் தடவியவாறு அவர் கேட்டார்.

“வேணும்”- ருக்மிணி அந்த நிமிடமே பதில் சொன்னாள்.

“சர்ச் கேட்டில் இருக்குற கடையில அப்படிப்பட்ட ஒரு பொம்மை இருக்கு”- இன்ஸ்பெக்டர் சொன்னார்: “வயிற்றைப் பிடிச்சு அழுத்துறப்போ அம்மான்னு வாயைப் பிளந்து அது அழும். அது ஒரு வெளிநாட்டு பொம்மை. அதோட விலை நூறு ரூபா. நீ என்கிட்ட இன்னும் அன்பா நடந்துக்கிட்டா உனக்காக அந்தத் தொகையை செலவழிக்கிறதுக்கு நான் தயங்கவே மாட்டேன். இந்த உலகத்துல இருக்குற மற்ற எல்லாரையும்விட உன் மேலதான் எனக்குப் பிரியம் அதிகம்.”

“அப்படின்னா உங்க மனைவி குழந்தைங்க மேல உங்களுக்கு பிரியம் இல்லியா?”- அந்தச் சிறுமி கேட்டாள்.

“ருக்மிணி உன்மேல இருக்குற பிரியம் அளவுக்கு அவங்கமேல எனக்குப் பிரியம் இல்ல”- அவர் சொன்னார்: “உன் வயசுல எனக்கு ஒரு சின்ன பொண்ணு இருக்கா. என்கிட்ட பிரியமா இருக்குறதா நீ சத்தியம் பண்ணிச் சொன்னா ஒவ்வொரு மாதமும் உனக்கு நான் விளையாட்டு சாமான்கள் வாங்கித் தர்றேன். மீராவை இங்கேயிருந்து கொண்டுபோன அந்தப் பையனை மாதிரி நான் அழகன்னு சொல்ல முடியாது. என்னைப் பார்க்குறப்போ குரங்கைப் பார்க்குறது மாதிரி இருக்குல்ல? என் முகத்தைப் பார்க்குறப்போ உனக்குச் சிரிப்பு வருதுல்ல?”

இரக்கம் வரவழைக்கக் கூடிய அவரின் பேச்சைக் கேட்டவுடன் ருக்மிணிக்கு அவர்மீது கனிவு பிறந்தது. “நீங்க பார்க்குறதுக்கு அழகு இல்லாத ஆள் இல்ல...” அவள் சொன்னாள் “எங்களை விட்டுட்டு ஓடிப்போன என் அப்பாவைப் போல இருக்கீங்க நீங்க. உங்களைப் பார்க்குறப்பல்லாம் நான் என் அப்பாவைத்தான் நினைக்கிறேன்.”

“என் செல்லப் பொண்ணாச்சே நீ” இனிமேல் உனக்கு கவலைன்றதே இருக்கக் கூடாது”- இன்ஸ்பெக்டரின் கண்களில் நீர் நிறைந்தது. “உன்னை நான் சந்தோஷப்படுத்துறேன். என்கிட்ட தவிர வேற யார்கிட்டயும் உன்னை அனுப்பக் கூடாதுன்னு நான் லட்சுமி பாயிக்கிட்ட தெளிவா சொல்லிர்றேன். நீ எனக்காக இருக்குறவளா இருந்தா உனக்காக நான் லட்சுமிபாயிக்கிட்ட எல்லா மாதங்கள்லயும் ஒரு தொகை கொடுத்துடுறேன். அப்போ அவங்க முணுமுணுக்கவே மாட்டாங்க. அப்படி ஒரு ஏற்பாடு பண்ணினா உனக்குப் பிடிக்குமா?”

“யாராவது ஒரு பையன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்தா?”- கள்ளங்கபடமில்லாத குரலில் ருக்மிணி கேட்டாள்.

“நான்தான் அந்த பையன். என் பூவே...”- அவளை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அந்த மனிதர் தன்னுடைய கட்டையான குரலில் சொன்னார்:

இங்குமங்குமாய் நரைத்த முடி இருக்கும் அவரின் தரையிலிருந்து வந்த வாசனை ருக்மிணியிடம் குமட்டலை உண்டாக்கியது. திடீரென்று அவள் தன் கண்களை மூடிக் கொண்டாள். கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்த அவள் நூறு ரூபாய் விலையுள்ள வெளிநாட்டு பொம்மையைப் பற்றி மட்டுமே அப்போது எண்ணினாள்.

5

முனை கூர்மையாக்கப்பட்ட ஒரு குச்சியையும் ஏதோ ஒரு பச்சிலையை அரைத்து உண்டாக்கப்பட்ட உருண்டையையும் கையில் எடுத்துக் கொண்டு ஆயியின் அறைக்கு அடுத்து இருக்கும் சிறிய அறைக்குள் சிந்துத்தாயி நுழைவதைப் பார்த்தபோது ருக்மிணியின் மனதில் ஒருவித பயம் உண்டானது.

“வேண்டாம் ஆயி வேண்டாம். அந்தக் கிழவி என்னைத் தொட நான் விடமாட்டேன்”- என்று பரிதாபமாக அழுதுகொண்டே சொன்ன சீதாவை அவளின் மெலிந்துபோன கைகளை மேல்நோக்கி தூக்கி இழுத்துக் கொண்டு ஆயி அந்தச் சிறிய அறைக்குள் கொண்டு போனாள். பிறகு உள்ளேயிருந்தவாறு அந்த அறையைத் தாழிட்டாள். அந்த அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட சீதாவின் முனகல் குரலைக் கேட்டவாறு அறைக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தாள் ருக்மிணி. மனதைக் கசியவைக்கும் அளவிற்கு பரிதாபமான குரலில் அழுது கொண்டிருந்த சீதாவை சிந்துத்தாயி கோபத்துடன் திட்டுவதையும் தொடர்ந்து சீதாவின் அழுகை மெதுவாக முனகலாக மாறியதையும் அவள் கேட்டாள். திடீரென்று உரத்த குரலில் கேட்ட ஒரு அழுகைச் சத்தம் அந்த அறைக்குள் உயர்ந்து பின் அதுவே யாரோ ஒருவரின் பலமான கைகளால் அழுக்கப்பட்டதையும் கேட்ட ருக்மிணியின் கால்கள் துவண்டன. அவளுடைய சினேகிதி சீதாவை அவர்கள் என்ன செய்கிறார்கள்?

வாசலிலிந்த கம்பிகளை நோக்கி நடந்த ருக்மிணி வெளியே பார்த்தாள். ஆண்கள் நிறைந்திருந்த ஒரு இரட்டை அடுக்கு பஸ் சாலை வழியே கடந்து போனது. அதில் உட்கார்ந்தவர்கள் தன்னைக் கூர்ந்து பார்ப்பதைப் போல அவள் உணர்ந்தாள். அப்போது வானம் புதிதாக சுண்ணாம்பு அடிக்கப்பட்ட சுவரைப் போல இருந்தது. ஒரே மாதத்திற்குள் ஐந்து மரணங்கள் நடைபெற்ற கிராமத்தின் அந்தச் சிறிய வீட்டைப் பற்றி சீதா சொன்னதை மீண்டும் அவள் நினைத்துப் பார்த்தாள். அப்போது மனித குரல் போல் அல்லாத ஒரு உரத்த அழுகைச் சத்தம் அவள் செவிகளில் வந்து மோதியது. மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பித்து வந்த ஒரு மிருகத்தின் சத்தமாக அது இருக்குமோ? அவள் ஆச்சரியத்துடன் நின்றாள்.


சிறிது நேரம் சென்றதும் அறைக்குள்ளிருந்து சிந்துத்தாய் வெளியே வந்து திண்ணையில் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்தாள். வெற்றிலைப் பெட்டியிலிருந்து உலர்ந்துபோன ஒரு இலையை எடுத்து அதை வாயில் போட்டு அவள் சுவைக்க ஆரம்பித்தாள். “நம்ம சீதாவோட நிலைமை மோசமா இருக்கு”- அவள் மெதுவான குரலில் சொன்னாள் “அவ செத்துப் போனாலும் போகலாம்.”

அடுத்த நிமிடம் ருக்மிணி உள்ளே ஓடினாள். அந்தச் சிறு அறையின் கதவுகள் பாதி திறந்திருந்தன. சீதாவின் தொடைகளுக்கு மத்தியில் பழைய புடவைத் துணிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள் ஆயியும் ராதாவும். அந்தத் துணிகள் இரத்தத்தால் நனைந்திருந்தன. ஒரு பொம்மையைப் போல எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தாள் சீதா. மதிய நேர சூரியனின் ஒளிபட்ட அவளின் சிறிய முகம் மிகவும் வெளிறிப் போயிருந்தது. அவளின் உருவம் ஒரு வெளிநாட்டு பொம்மையை அப்போது ஞாபகப்படுத்தியது. படுத்திருந்த அவளின் உடலில் சற்று உயரமாகத் தெரிந்த வயிறு மெதுவாக துடித்துக் கொண்டிருந்தது. விலை உயர்ந்த பொம்மைகளின் வயிற்றை அழுத்தும்போது மம்மி என்று அழுவதைப் போல அவளும் அழுவாளோ?

“ருக்மணி நம்ம சீதா நம்மைவிட்டுப் போகப் போறா”- மெதுவான குரலில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு ஆயி சொன்னாள் “நல்ல ஆட்கள் இறந்தபிறகு போகுற சொர்க்கத்தை நோக்கி இவளும் போகப்போறா.”

“சீதா சாகப்போறாளா?”- ருக்மிணியின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

இன்ஸ்பெக்டர் அப்போது அங்கு வந்து மிகப் பெரிய உதவியாக இருந்தது. மெடிக்கல் ரிப்போர்ட் எழுதுவதற்காக அவர் டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சீதாவின் இறந்துபோன உடல் மின்சார சுடுகாட்டிற்குக் கொண்டு போகப்பட்டது. ஆயியும் மற்ற மூன்று இளம் பெண்களும் சீதாவின் உடல் உரிந்து சாம்பலாவதை முன்னால் நின்று பார்த்தார்கள். தெருவில் பொம்மைகள் விற்பனை செய்யும் ஒரு மனிதனிடம் வாங்கிய ஒரு ப்ளாஸ்டிக் பொம்மைக்கும் ருக்மிணி கிருஷ்ணன் என்ற பெயர் வைத்திருந்த ஒரு பச்சை நிறத்தால் ஆன பொம்மைக்கும் அவர்கள் இருவரும் ஏற்கெனவே திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அந்தத் திருமண நினைவுடன் சீதாவைப் பற்றிய நினைவுகளும் எஞ்சி நின்றன. அந்த பொம்மைகளுக்கு அருகில் படுத்தவாறு எந்தவித சத்தமும் உண்டாக்காமல் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தாள் ருக்மிணி. ஒரு வாடிக்கையாளர் எப்போதும் போல வந்து கதவைத் தட்டியபோது ராதா சொன்னாள் “தயவு செய்து போங்க. இன்னைக்கு காலையில இங்கே ஒரு சோக நிகழ்ச்சி நடந்திடுச்சு.” அவன் எதிர்த்து எதுவும் சொல்லாமல் திரும்பிப் போனான்.

இரவு நேரத்தில் சரஸ்வதியின் அறைக்குள்ளிருந்து ஒரு ஆணின் குரலைக் கேட்டு ருக்மிணி திடுக்கிட்டு எழுந்தாள். சரஸ்வதியின் கவலை அதிக நேரம் நீண்டு நிற்கவில்லை. அந்த நேரத்தில் யாராவது தனக்கு வந்து ஆறுதல் சொல்லமாட்டார்களா என்று ருக்மிணியின் மனம் ஏங்கியது. ஆயி தன்னுடைய தோள்மீது கையை வைத்து கட்டிப் பிடித்திருந்தால் ருக்மிணிக்கு மீண்டும் உறங்க முடிந்திருக்கும். அறையில் சீதா இருப்பதைப் போலவே அவள் உணர்ந்தாள். இன்ஸ்பெக்டர் வந்து அந்தச் சிறு அறைக்கு தன்னை அழைத்துக் கொண்டு போய் ருக்மிணி உன்னை நான் எந்த அளவுக்கு விருப்பப்படுறேன் தெரியுமா? என்று மீண்டும் கூறியிருந்தால்... பயம் மனதில் நிறைந்திருந்தபோது அவள் அப்படியெல்லாம் விருப்பப்பட ஆரம்பித்துவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் ஆயி ஒரு ஜோதிடனை வீட்டிற்கு வர வைத்தாள். தரையில் ஒரு கட்டம் வரைந்து அவன் அதன்மீது சோழிகளை உருட்டினான்.

“வாழ்க்கையில் ரொம்பவும் மோசமான ஒரு காலகட்டத்தை நீங்க இப்போ அனுபவிச்சிக்கிட்டு இருக்கீங்க ஆயி”- அவன் சொன்னான். “ஒருத்தன்கூட உங்க ஒரு பொண்ணு ஓடிப் போயிருச்சுன்னு நீங்க சொன்னீங்கள்ல? மற்றொரு பொண்ணு செத்துப் போயிட்டா. இனிமேலும் உங்களுக்குப் பல கெட்ட விஷயங்கள் நடக்கப் போகுது. கிரக நிலையைச் சரி பண்ணுறதுக்கு பூஜை நடத்தணும். துர் தேவதைகளை விரட்டணும்...”

“கிரகங்கள்கூட எனக்கு விரோதிகளா இருக்கா என்ன?” ஆயி கேட்டாள். “கிரகங்களும் எனக்கு எதிரா நின்னுக்கிட்டு இருக்கு. இந்த ஊர்ல எனக்கு விரோதிங்க நிறைய இருக்காங்க. எல்லாருக்கும் என் மேல பொறாமை. அவங்க பேரை நான் சொல்ல விரும்பல. இன்னும் கொஞ்சம் நல்ல இடமா பார்த்து... மரைன் ட்ரைவ் பக்கமோ கொளாபா பக்கமோ பாஸ்டர்லைன் பக்கமோ போயிறலாமான்னு பாக்குறேன். அப்பவாவது எனக்கு மன அமைதி கிடைக்காதா?”

“புதுசா இடம் தேடி பிடிக்கணும்னா உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? பகடி மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கேட்பாங்கள்ல?”- ஜோதிடர் சொன்னார் “இதுவே நல்ல இடம்தான். அதிகமாப் போனா ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சு ஒரு ஹோமம் நடத்தினா போதும். அதுலயே உங்களோட விரோதிங்க எல்லாரும் அடங்கிப் போயிடுவாங்க. பிஸினஸ் பிரமாதமா நடக்க ஆரம்பிச்சிடும்.”

“ஹோமம் நடத்தக் கூடிய யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?”- ஆயி கேட்டாள்.

வாசலில் அலட்சியமாக நின்றிருந்த இளம்பெண்களை அந்த மனிதர் வெறித்துப் பார்த்தார். “நானே ஹோமம் நடத்துறேன். ஆனால் அந்த ஹோமத்தை ரொம்பவும் ரகசியமா யாருக்கும் தெரியாம நடத்தணும். இந்த வீட்டுக்குப் பின்னாடி வராந்தா இருக்கா?”

ஜோதிடம் போனபிறகு ஆயிக்கு ஆறுதல் சொல்வதற்காக சிந்துத்தாயி வந்தாள்.

“எல்லாம் கடவுள் சித்தம், என் தங்கச்சி...”- அவள் சொன்னாள்: “இல்லாட்டி அவளைப்போல இருக்கிற ஒரு சின்ன பொண்ணு கர்ப்பம் தரிக்க முடியுமா? அவ வயசுக்குக்கூட வரல. நானே இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இதுவரை கேள்விப்பட்டதே இல்ல. அதிக நாட்கள் வாழ்றதுக்கான கொடுப்பினை இல்லாத பொண்ணு அவ. வாழ்க்கையில சீக்கிரமே சாகுறதுக்கான எல்லா அறிகுறிகளும் அவகிட்டே இருந்துச்சு. வெளிறிப்போன அவளோட உதடுகளை உனக்கு ஞாபகத்துல இருக்குல்ல? அவளோட மெலிஞ்சுபோன கைகள்...”

ஆயி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள் “என் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்த பொண்ணு அவ தெரியுமா?”- ஆயி சொன்னாள். “மத்தியானம் அவ எனக்கு வெற்றிலை மடிச்சுத்தருவா. வெறும் பத்து வயது நடக்குறப்போ முந்நூறு ரூபாவுக்கு கிராமத்துல இருக்கிற ஒரு புரோக்கர் அவளை எனக்கு வித்தான். காலரா வந்து அவளோட அப்பாவும் அம்மாவும் செத்துப் போயிருந்தாங்க. மழைக்காலம் இருக்கிறப்போ நான் அவளுக்கு காட்லிவர் ஆயில் கொடுத்தேன். இருந்தும் அவள் உடம்புல சதை பிடிக்கவே இல்ல. ஒருநாள் இன்ஸ்பெக்டர் ஐயா வந்து சொன்னாரு. அவளைச் சதைப்பிடிக்க வைக்க முயற்சி பண்ண வேண்டாம்னு.


ஒரு நாட்டியமாடுகிற பெண்ணுக்கு வேண்டிய உடல்வாகு அவகிட்ட இருக்குன்னு அவர் சொன்னாரு. அவளுக்கு நடனம் சொல்லிக் கொடுங்க. நல்ல பணவசதி உள்ள ஆளுகளை அவ வசீகரிச்சு இழுப்பா”ன்னு அவர் சொன்னாரு. பரதநாட்டியம் கத்துக்க அவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா என் தங்க மகளை என்கிட்ட இருந்து தெய்வம் தட்டிப்பறிச்சிடுச்சு. சிந்துத்தாயி தயவு செஞ்சு இங்கே நடந்த எந்த விஷயத்தையும் யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம். அப்பன்டிக்ஸ் வெச்சு அவ செத்துப் போயிட்டான்னு டாக்டர் ஐயா சர்ட்டிபிகேட் எழுதித் தந்திருக்காரு.”

“அப்பன்டிக்ஸா? அப்படின்னா என்ன? கர்ப்பப் பையைத்தான் அப்படிச் சொல்வாங்களோ?”- கிழவி கேட்டாள்.

“இல்ல... இல்ல... அது வேறு ஏதோ ஒண்ணு....”- ஆயி பதில் சொன்னாள்.

“எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். இனிமேலாவது நீ ரொம்ப கவனமா இருக்கணும் லட்சுமி”- சிந்துத்தாயி சொன்னாள். “இப்படிப்பட்ட காரியங்கள் நடக்காம பார்த்துக்கணும். ருக்மிணிக்கு இப்படிப்பட்ட ஒரு ஆபத்து நடந்துடக்கூடாது. அவளுக்கு கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கு. அவளுக்கு நல்ல வளர்ச்சி இருக்கு.”

“ருக்மிணிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது”- ஆயி சொன்னாள். “இன்ஸ்பெக்டர் ஐயா அவமேல ரொம்பவும் பிரியமா இருக்காரு. அவர் அவளை ஒரு கீப்பா வச்சிக்கப்போறாரு. அவருக்கு இனிமேல் குழந்தைகள் எதுவும் பிறக்கப் போறது இல்ல. அந்த அளவுக்கு அவருக்கு வயசாயிடுச்சு.”

“குழந்தைகள் பிறக்க வைக்கிறதுக்கு ஆம்பளைகளுக்கு வயசு ஒரு பிரச்சினையா என்ன லட்சுமி...”- சிந்துத்தாயி சொன்னாள் “எண்பது வயசு உள்ள ஒரு ஆள் இருபது வயசு உள்ள ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளைகளைப் பெற்ற சம்பவம் எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டர் ஐயாவை எடுத்துக்கிட்டா ஆம்பளைங்களுக்கு மத்தியில அந்த ஆளு சிங்கம் மாதிரி. இந்த பூமி முழுவதும் குழந்தைகள் உண்டாக்குற அளவுக்கு அந்த ஆளுகிட்ட சக்தி இருக்கு...”

அதைக் கேட்டு ஆயி சிரித்துவிட்டாள். அவளின் சிரிப்புடன் சேர்ந்து கிழவியின் அவலட்சணமான சிரிப்பும் சேர்ந்து ஒலித்தது.

அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது “வளையல் வேணுமா?” என்று கேட்டபடி வளையல் விற்பனை செய்யும் மனிதன் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றான். பல வண்ண வளையல்கள் நிறைந்திருந்த கண்ணாடி போட்ட ஒரு பெட்டியை அவன் தன் தோள்மீது தொங்க விட்டிருந்தான். வளையல்களைப் பார்ப்பதற்காக ருக்மிணி வேகமாக ஓடி வந்தாள். வளையல் விற்பனை செய்யும் மனிதன் தரையில் உட்கார்ந்தான். கார்ட்போர்ட்டால் உண்டாக்கப்பட்ட உருளைகளின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்களை அவன் வெளியே எடுத்தான். ஒவ்வொரு உருளையிலும் மூன்று டஜன் வளையல்கள் இருந்தன. சரஸ்வதி தன்னுடைய கையை நீட்டிக் கொண்டு கேட்டாள். “அந்த ஆரஞ்சு நிறத்துல இருக்கிற வளையல்களை எடுங்க... பார்ப்போம். அது நைலான் வலையல்களா?” வளையல் விற்பவனைப் பார்த்து அவள் கேட்டாள். “ஆமாம்... ஆனா விலை கொஞ்சம் அதிகமா இருக்கும்”- அவன் சொன்னான். “நான் அந்த வளையல்களை வாங்க முடியாதுன்னு நீங்க நினைச்சீங்களா?”- குறும்புத்தனம் நிறைந்த கண்களுடன் கறுப்பான அந்த இளம் பெண் கேட்டாள். எல்லாம் தெரியும் என்ற எண்ணத்துடன் அந்த மனிதன் சிரித்தான். “நீங்க தங்க வலையல் வேணும்னா கூட வாங்கலாம்”- அவன் தாழ்வான குரலில் சொன்னான். அதைக் கேட்டு அவள் சிரித்தாள். வெள்ளி மணிகள் ஒலிப்பதைப்போல இருந்தது அவளின் சிரிப்பு.

“ருக்மிணி உனக்கு வலையல் வேணுமா?” ஆயி கேட்டாள். “நல்ல சிவப்பு நிறத்துல இருக்கிற வளையல்கள் உன் கைகளுக்கு பொருத்தமா இருக்கும்...” ருக்மிணி வளையல்கள் தனக்கு வேண்டாம் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினாள். வலையல்கள் சீதாவைப் பற்றிய நினைவுகளை அவளிடம் உண்டாக்கின. அதனால் வளையல்கள் அணிய வேண்டும் என்ற விருப்பமும் அவளுக்கு இல்லாமல் போனது. “வேண்டாம் ஆயி. எனக்கு எதுவுமே வேண்டாம்”- அவள் சொன்னாள். கைகளை நீட்டி ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த ஒரு டஜன் வளையல்களை போடும்படி அந்த மனிதனிடம் சொன்னாள் சரஸ்வதி “நான் இந்த வளையல்களுக்கு பணம் தரலைன்னா?”- அவள் மெதுவான குரலில் அவனைப் பார்த்துக் கேட்டாள். அதற்குப் பதிலாக வந்த அவனுடைய சிரிப்பு அர்த்தம் நிறைந்ததாக இருந்தது.

“நீங்க பணம் எதுவும் தரவேண்டாம்”- அவன் சொன்னான். “அப்படின்னா இது என்ன வியாபாரம்?”- கேள்வி கேட்ட சரஸ்வதியின் மெல்லிய ரவிக்கையின் மார்புப் பகுதிகளையே அவனுடைய கண்கள் வெறித்துப் பார்த்தன. அவளுடைய கவர்ச்சியான பின்பகுதியையும் அந்தக் கண்கள் பார்த்தன. “நானொரு நல்ல வியாபாரியா இல்லாமலிருக்கலாம்”- அவன் சொன்னான். “ஆனா நான் நல்லவன். உங்களுக்கு அதை நிரூபிச்சுக் காட்டணுமா?”- அவன் கேட்டான். அதைக் கேட்டு சரஸ்வதி விழுந்து விழுந்து சிரித்தாள். பணம் எடுத்துக் கொண்டு வருவதற்காக அவள் அறைக்குள் போனாள்.

“நீங்க எந்த ஊரு?”- ஆயி கேட்டாள்.

“நானா? வாரணாசியில இருந்து வர்றேன்”- அவன் சொன்னான். தாதருக்குப் பக்கத்தில என் அண்ணனுக்கு ஒரு வெற்றிலைப் பாக்கு கடை இருக்கு. கொலிவாடாவில் நாங்க ஒண்ணா சேர்ந்து இருக்கோம்.”

“வெற்றிலைப் பாக்கு கடையில நல்ல பணம் கிடைக்குமா?”- ஆயி கேட்டாள்.

“இல்ல... எங்கம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.”

அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் மிகவும் வியர்த்துப் போயிருந்தார்.

“எல்லாத்தையும் சரி பண்ணியாச்சு”- இன்ஸ்பெக்டர் சொன்னார்: “எனக்கு கொஞ்சம் படுக்கணும் போல இருக்கு. ஒரு மணி நேரமாவது ஓய்வெடுத்தால்தான் சரியா இருக்கும். ருக்மிணி எங்கே? ஓ... இங்கேதான் அவ நின்னுக்கிட்டு இருக்காளா?”

இன்ஸ்பெக்டருடன் ருக்மிணியை அறையை நோக்கித் தள்ளிவிட்டாள் ஆயி. வாசல் கதவைப் பிடித்தவாறு நின்றுகொண்டு ருக்மிணி படுக்கையில் மல்லாக்க விழுந்து கிடந்த அந்தத் தடிமனான மனிதரைப் பார்த்தாள். ஆடைகள் முழுவதையும் மாற்றியிருந்தார் அவர். “என் கிளியே இங்கே பக்கத்துல வா”- காமம் நிறைந்த குரலில் அவர் அழைத்தார். ருக்மிணி அசையவில்லை.

“உனக்கு என்மேல கோபமா செல்லமே?”- அவர் கேட்டார். “சர்ச் கேட்ல இருந்து வெளிநாட்டு பொம்மை வாங்கித் தரலைன்னு நீ என் மேல கோபப்பட்டுக்கிட்டு இருக்கியா? அந்தப் பொண்ணோட மரணத்தைத் தொடர்ந்து அவளோட உடலடக்கம் அது இதுன்னு நூறாயிரம் விஷயங்களை நான் முடிக்க வேண்டியதிருந்துச்சு. நானே தளர்ந்து போயிட்டேன். எனக்கு கொஞ்சம் சமயம் கொடு. மூணு நாட்கள்ல அந்த பொம்மை உன் கையில இருக்கும். அந்த பொம்மைக்கு நீ சீதான்னு பேர் வை...”


ருக்மிணி அவளின் சினேகிதியின் மரணத்திற்குப் பிறகு முதல் தடவையாக இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவள் அவருக்குப் பக்கத்தில் ஓடிவந்து முடி வளர்ந்திருந்த அவரின் நெஞ்சின்மீது முகத்தை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்... “வாப்பா... வாப்பா....”- என்று அவள் அழைத்தாள்.

அதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தாலும் அவளின் சுருண்டு காணப்பட்ட அவளின் தலைமுடியை அவர் தன் கையால் கோதிக்கொண்டிருந்தார். “ஓ... வாப்பா... என்னை இங்கேயிருந்து கொண்டு போங்க. இல்லாட்டி நானும் செத்துப் போயிடுவேன்...” மெதுவான குரலில் அவள் முனகினாள்.

அவளுடைய நெற்றியில் அவர் முத்தமிட்டார். காமம் அவரை விட்டு ஓடிப் போயிருந்தது. “நீ உன் அப்பாவை வாப்பான்னுதான் கூப்பிடுவியா?”- அவர் கேட்டார்.

“ஆமா...”- ருக்மிணி அழுகைக்கிடையில் சொன்னாள்:. “வாப்பாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். ஆனா என் அம்மாகூட சண்டை போட்டுட்டு எங்கே போறேன்னுகூட சொல்லாம அவர் எங்கேயோ போயிட்டாரு. அதுக்குப்பிறகு வாப்பா திரும்பி வரவேயில்ல... தீபாவளிக்கு புது ஃப்ராக் வாங்கிட்டு வருவாருன்னு வீட்டு முன்னாடி எவ்வளவு நேரம் வாப்பாவை எதிர் பார்த்து நான் உட்கார்ந்திருந்தேன் தெரியுமா? இனி என்னைக்காவது என்னைப் பார்க்கிறதுக்கு என் வாப்பா வருவாரா? என்னை என் வாப்பா மறந்தாலும் மறந்திருக்கலாம்...”

“அழாதே...” - இன்ஸ்பெக்டர் சொன்னார்: “உனக்கு நானிருக்கேன்ல... நான்தான் இனிமேல் உனக்கு வாப்பா... இனிமேல் நான் உன்னை என் சொந்த மகளைப் போல பார்த்துக்குறேன். அது போதாதா மகளே?”

அவருடைய கைகளுக்குள் அடங்கியவாறு அவள் உறங்கினாள். ஒரு இரட்டை அடுக்கு பேருந்தில் அவளும் சீதாவும் பயணம் செய்வதைப் போலவும், உயரமான கொய்யா மரத்திலிருந்து கொய்யாப் பழத்தைப் பறித்து பழத்தையும் அதற்குள் இருந்த விதைகளையும் தாங்கள் சாப்பிடுவதைப் போலவும் அவள் கனவு கண்டாள்.

6

திய நேரத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ஆயி. அழுது அழுது கலங்கிப் போயிருந்த கண்களுடனும் கசங்கிய ஆடைகளுடனும் மீராத்தாயி அப்போது அங்கு வந்தாள். உறங்கிக் கொண்டிருந்த ஆயியின் உருவம் பயங்கரமாகவும் பயமுறுத்தும் விதத்திலும் இருந்தது. ஆயியின் அந்த உருவத்தைப் பார்த்தவாறு தரையில் உட்கார்ந்திருந்தாள் ருக்மிணி. அந்த நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணின் பெரிய மார்பகங்கள் மீது தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு மீராத்தாயி அழுதாள். “எனக்கு உதவுங்க ஆயி...”

“அவரை அடிச்சுக் கொன்னுடச் சொல்லி இன்ஸ்பெக்டர் போலீஸ்காரங்களுக்கு உத்தரவு போட்டிருக்கார். ஸ்டேஷன்ல பிடிச்சு வச்சுக்கிட்டு போலீஸ்காரங்க அவரை அடிச்சுக் கொல்றாங்க. இன்னும் கொஞ்ச நேரம் ஆனா அவர் செத்தே போயிடுவாரு ஆயி. நான் விதவை ஆயிடுவேன். ஆயி எந்திருச்சு இன்ஸ்பெக்டர்கிட்ட அவரை அடிக்கக் கூடாதுன்னு போய்ச் சொல்லுங்க.”

ஆயி எழுந்து அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். கறுத்துப் போயிருந்த அவளுடைய முகம் வெளிறிப் போயிருந்தது.

“என்ன ஆச்சு மீரா?”- அவள் மெதுவான குரலில் கேட்டாள். “அப்போ நீ திரும்ப வர்றதுன்னு முடிவு பண்ணிட்டியா?”

“அவரை அடிச்சுக் கொல்றாங்க”- மீரா அழுது கொண்டேயிருந்தாள். “எந்திரிங்க ஆயி. அவர் எந்தத் தப்பும் செய்யாதவர்னு இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லுங்க. என்னை அவர் இங்கேயிருந்து இழுத்துக்கிட்டுப் போகல. நான்தான் அவரை இங்கேயிருந்து வம்படியா அழைச்சிட்டுப் போகச் சொன்னேன். உண்மை இப்படி இருக்கிறப்போ என்னை வெறுமனே விட்டுட்டு அவரை மட்டும் அவங்க அடிக்குறதுக்குக் காரணம் என்ன?”

“அவன் இப்போ எங்கே இருக்கான்?”- ஆயி கேட்டாள்.

“போலீஸ் ஸ்டேஷன்ல அவரைப் பிடிச்சு வச்சிருக்காங்க. தயவு செய்து அவரை ஒண்ணும் செய்யாம விடச் சொல்லுங்க. என் வாழ்க்கை முழுவதும் நான் இங்கேயே இருந்துடுறேன்.”

படுத்திருந்த இடத்தைவிட்டு மெதுவாக எழுந்த ஆயி வெற்றிலை போட ஆரம்பித்தாள்.

“சரி மீரா... நான் போயி இன்ஸ்பெக்டர் ஐயாவைப் பார்க்கிறேன். நீ உள்ளே போயி குளி. ராதாகிட்ட சாப்பாடு தரச்சொல்லு. உன்னைப் பார்க்கிறப்பவே தெரியுது. சரியா சாப்பிட்டு ஒரு வாரத்துக்குமேல ஆயிருக்கும்னு...”

நன்றி நிறைந்த கண்களுடன் ஆயியின் கைகளை முத்தமிட்ட மீரா வீட்டிற்குள் நுழைந்தாள்.

“என் மீரா கடைசியில எப்படியோ திரும்ப வந்துட்டா”- மன மகிழ்ச்சியுடன் ஆயி சொன்னாள். பிறகு ருக்மிணியையும் அழைத்துக் கொண்டு ஆயி போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தாள்.

“ஆம்பளைகளைக் காதலிக்கிறதுன்றது ஆபத்தான விஷயம்”- தன்னுடன் வந்த ருக்மிணியைப் பார்த்து ஆயி சொன்னாள்: “கயிறைக் கட்டி நம்மை நாமே தூக்குல போட்டுக்கிறதுக்கு சமம் அது. யாரையும் காதலிக்கலைன்னா நீ எப்பவும் சுதந்திரமா இருக்கலாம். என்னைக்கும் நீ இந்த விஷயத்தை ஞாபகத்துல வச்சிருக்கணும்...”

இன்ஸ்பெக்டரின் உதவியை வேண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆயி சென்றபோது அந்த இளைஞனை போலீஸ்காரர்கள் அடித்து உதைத்து நாசம் பண்ணியிருந்தார்கள். ஸ்டேஷனிலிருந்து அவனை அழைத்துக் கொண்டு வர ஆயிக்கு அதிக நேரம் ஆகவில்லை. ஒரு டோங்காவில் ஆயிக்குப் பக்கத்தில் அவன் தலையைக் குனிந்தவாறு அழுது கொண்டிருந்தான். “தன் தப்பில்ல”- அவன் முணுமுணுத்தான். ஆனால் அவனுடன் பேச ஆயி விரும்பவில்லை. வீட்டிற்குப் பக்கத்தில் டோங்கா நின்றது. அவனிடம் வண்டியைவிட்டு இறங்கும் படி ஆயி சொன்னாள். வண்டியைவிட்டு அவன் இறங்க ருக்மிணி உதவினாள். “என்னோட எலும்புகளெல்லாம் ஒடிஞ்சு போயிடுச்சு” அந்த இளைஞன் முணுமுணுத்தான்.

அப்போது அந்த வழியே சைக்கிளில் வந்த தபால்காரன் ஆயியை அழைத்துச் சொன்னான் “அம்மா இன்னைக்கு உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கு...”

“மகளே ருக்மிணி... கடிதத்தைப் பிரிச்சுப் படி”- ஆயி சொன்னாள்:. “என் மகனோட கடிதமா? அவன் தன் தாயின் பாவங்களையெல்லாம் மன்னிச்சுட்டானா?”

வலியால் முனகிக் கொண்டிருந்த அந்த இளைஞன் நொண்டி நொண்டி நடந்தவாறு வீட்டிற்குள் நுழைந்து உட்கார்ந்தான். எவ்வளவோ நாட்களாக ஆயி எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடிதத்தில் இருக்கும் விஷயத்தை அறிந்து கொள்வதற்காக தபால்காரனும் அங்கேயே நின்றிருந்தான். ருக்மிணி கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள். “என் அன்பான அம்மாவுக்கு பத்து வருடங்களாக நான் அமைதியாக எதுவும் பேசாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்படி இருக்கும்பொழுது இன்று பெரிய படிப்பு படித்த என்னுடைய முதலாளி உண்மையான அன்பு என்றால் என்னவென்பதை எனக்குப் புரிய வைத்தார். அம்மா உங்களை வேதனைப்படுத்தியதற்கும் இவ்வளவு காலம் உங்களைப் பற்றி நினைக்காமல் இருந்ததற்கும் என்னை அவர் பலமாகத் திட்டினார்.


ஒவ்வொரு தொழிலிலும் அந்தந்த தொழிலுக்கே உரிய மதிப்பும் பெருமையும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் உங்களுடைய தொழிலைக்குறித்து நான் அவமானமாக நினைப்பதற்கு எதுவும் இல்லை என்பதையும் எனக்கு அவர் விளக்கிப் புரிய வைத்தார். ஒரு பெரிய மோட்டார் காரேஜ் வைத்திருக்கும் அவர் ஒரு பெரிய பணக்காரர். பத்து வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்ட தன்னுடைய தாய் திரும்ப கிடைப்பதாக இருந்தால் தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழப்பதற்கு நான் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்: “நீங்க பணம் சம்பாதிக்கலாம். மனைவியும் குழந்தைகளும் கூட உங்களுக்குக் கிடைப்பார்கள். ஆனால் ஒருமுறை தாய் நம்மை விட்டு போய்விட்டால் எந்தக் காலத்திலும் யாராலும் அந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது” என்று அவர்தான் சொன்னார்: அவர் சொன்னதால் உந்தப்பட்ட நான் வரும் சனிக்கிழமை மதியம் உங்களைப் பார்ப்பதற்காக அங்கு வருகிறேன். அம்மாவின் தங்கமகன் சதாசிவமனே.”

ஆயி மகிழ்ச்சியால் தேம்பித் தேம்பி அழுதாள். ருக்மிணியின் கண்களிலும் நீர் ஆறென வழிந்தது. தபால்காரன்கூட உணர்ச்சி வயப்பட்டு நின்றுவிட்டான்.

“சந்தோஷமான செய்தி ஆயிற்றே இது”-  தபால்காரன் சொன்னான். ஆயி இடுப்பிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அவன் கையில் தந்தாள்.

“என் மகன் எந்த அளவுக்கு அறிவாளியா ஆகியிருக்கான். என் தங்க மகன் சதாசிவ்...”- உதத்த சத்தத்தில் மூக்கைச் சிந்திக் கொண்டே ஆயி சொன்னாள். அப்போது மீரா அங்கே வந்தாள். தரையில் ஒரு சிலையைப் போல அமர்ந்திருந்த அந்த இளைஞனின் உருவம் அவள் கண்களில் பட்டது.

“என்ன மன்னிச்சுடுங்க”- அவனுடைய கால்களில் விழுந்து மீரா கெஞ்சினாள்.

“இங்கேயிருந்து என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லி உங்களை நான் வற்புறுத்தாம இருந்திருந்தா யாரும் உங்களை கொடுமைப் படுத்தியிருக்க மாட்டாங்க. ரொம்ப அடிச்சிட்டாங்க இல்லே? கொஞ்சம் சூடான பால் கொண்டு வரட்டுமா? உள்ளே வந்து கொஞ்சம் ஓய்வெடுங்க...”

“மீரா நீ அவனை வெறுமனே விடு...” ஆயி சொன்னாள்: “அவன் அமைதியா இருக்கட்டும். உன்னால அவன் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. இனிமேலாவது அவனை சும்மா இருக்க விடு.”

“நான் இல்லாம அவருக்கு என்ன அமைதி வேண்டிக்கிடக்கு?”- மீரா கேட்டாள். “நீங்க என்னைக் காதலிக்கிறீங்கள்ல?”

அந்த இளைஞன் தரையில் மல்லாக்கப் படுத்தவாறு கண்களை மூடினான்.

“உங்களுக்கு இப்பவும் என்னைப் பிடிக்குதுல்ல?”- மீரா கேட்டாள்.

“எனக்குத் தெரியாது”- அவன் சொன்னான்.

“நீ உன் அம்மாவிட்ட போ. வீட்டைவிட்டுப் போன பிறகு அவங்க ரொம்பவும் கவலைப்பட்டிருப்பாங்க” ஆயி அவனிடம் சொன்னாள்.

“இல்ல... அவங்க கவலையில இருக்கமாட்டாங்க”- அந்த இளைஞன் பதில் சொன்னன். “அம்மாவும் அப்பாவும் பூனாவுல ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருக்காங்க. இன்னைக்கு சாயங்காலம் ஏழு மணிக்குத்தான் அவங்க திரும்பி வர்றாங்க. அம்மா திரும்பி வர்றதுக்குள்ள நான் வீட்டுக்குப் போயிடுவேன்.”

“அப்போ ஒருவார விடுமுறை மாதிரியா இது? ஒரு சின்ன தேனிலவு...”- தொண்டையில் எழுந்து மேலே வந்த அழுதையுடன் மீரா கேட்டாள் “நாம புருஷன் பொண்டாட்டியா வாழப் போறோம்னு நீங்க சொன்னது பொய்யா?”

அதற்கு அந்த இளைஞன் எந்த பதிலும் கூறவில்லை.

“உனக்கு இப்போ என்ன வயசு நடக்குது?” வெற்றிலையை மென்றவாறு ஆயி கேட்டாள்.

“பத்தொன்பது”- அவன் சொன்னான்.

“நீ உன் அம்மாகிட்ட போ. மீராவை மறந்திடு” ஆயி சொன்னாள்: “வேலை கிடைச்சு தேவடியாள்கள்கிட்ட வர்ற அளவுக்கு பணம் சம்பாதிக்கிறப்போ இங்கே வா...”

அந்த வார்த்தைகளைக் கேட்டு மீரா அதிர்ச்சியடைந்து நின்று விட்டாள். தரையில் இருந்து எழுந்து கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு அந்த இளைஞன் நடந்து போனான்.

“நன்றி கெட்ட பன்னி...”- மீரா கோபமான குரலில் சொன்னாள்: “அவன் தனக்கு இப்போ இருபத்தி நாலு வயசு நடக்குதுன்னும் ஒரு மில்லுல வேலை கிடைச்சிடுச்சின்னும் என்கிட்ட சொன்னான். திருடன்... நாற்றமெடுத்த திருடன்...”

மீரா தன்னுடைய பழைய அறையிலிருந்த சரஸ்வதியின் பொருட்களை எடுத்து வெளியே எறிந்தாள். போகத்தின் உச்சிக்குச் சென்ற சரஸ்வதி மீராவின் முகத்தைக் கீறினாள். “நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? இந்த வீடு என்ன உன் சொந்தமா? ஒரு வாரம் ஒரு பள்ளிக் கூட பையன்கூட ஓடிப்போயிட்டு இப்போ திரும்பி வந்திருக்கே. எதுவுமே நடக்காத மாதிரி நீ இருக்கலாம். இந்த அறையை நான் விட்டுத்தர்றதா இல்லே. இது இனிமேல் எனக்குத்தான்...”

அது ஒரு சீனியாரிட்டி விஷயம் என்பதாக மட்டுமே இருந்தது. இந்த முறை ஆயி மீராவின் பக்கம் நிற்கவில்லை. மீரா தவறாக நடந்து விட்டாள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சொல்லப்போனால் இந்தத் தொழிலுக்கு ஏற்றவள் சரஸ்வதிதான். யாரிடமும் தனிப்பட்ட நெருக்கமோ உணர்ச்சியோ அவளுக்கு இல்லை. சரியாகக் கணக்குச் சொல்லி யாரிடமும் அவள் பணம் வாங்கிவிடுவாள். இருப்பதிலேயே நல்ல அறை சரஸ்வதிக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும்.

கடைசியில் தன்னுடைய இப்போதைய நிலையைப் புரிந்து கொண்ட மீரா சிறுமிகள் படுத்துறங்கும் பொது அறையின் மூலையில் தன்னுடைய பொருட்களைக் கொண்டுபோய் வைத்தான். மீண்டும் அவள் தொழிலில் தன்னுடைய இடத்தைப் பிடிக்க வேண்டும்.

அன்று மாலையில் இன்ஸ்பெக்டர் வந்தபோது ஒரு தட்டு நிறைய லட்டுடன் அவரை ஆயி வரவேற்றாள். அவர் அவளைப் பார்த்து சிரித்தார்.

“என்ன ஒரே மகிழ்ச்சியா இருக்கீங்க?”- அவர் கேட்டார். அப்போது அந்த கடிதம்  மீண்டும் வாசிக்கப்பட்டது. எல்லாருடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது.

“லட்சுமிபாயி உங்களுக்கு நல்ல நேரம் வந்திருச்சு”- அவர் சொன்னார்: பிறகு ஒரு கையை நீட்டி சைகை செய்து அவர் ருக்மிணியை அழைத்தார். இன்னொரு கையிலிருந்த பெரிய பொட்டலத்தைக் காட்டியவாறு அவர் சொன்னார் “திறந்து பாரு என் மகளே. உனக்கு நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு...”

அது ஒரு வெளிநாட்டு பொம்மை. ஓரளவு அதைப் பார்க்கும்போது அது சீதாவை ஞாபகப்படுத்தியது. அதன் மேல்தோல் மிகவும் வெளுத்திருந்தது. வயிறு வீங்கியிருந்தது. ருக்மிணி அதன் வயிற்றைப் பிடித்து அழுத்தினாள். அப்போது அது அம்மா... அம்மா என்று அழுதது. பொம்மையின் முகத்திலும் உடலிலும் அவள் முத்தமிட ஆரம்பித்தாள். “அப்போ உன் வாப்பாவுக்கு முத்தம் கிடையாதா?”- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

ஒரு கையால் அவள் அவரை கட்டிப் பிடித்துக் கொண்டு தன் மூக்கைக் கொண்டு அவரின் சட்டையை உரசினாள். “நீங்க ஒரு அன்பான மனிதரா ஆயிட்டீங்க”- இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஆயி சொன்னாள். தலையைக் குலுக்கியவாறு அவர் இதயபூர்வமாகச் சிரித்தார்.


“லட்சுமிபாயி நான் இப்போ ஒரு வயசான ஆளு”- அவர் சொன்னார்: “நாக்பூர்ல அப்பா, அம்மாவோட இருக்கிற என் பேத்தியைத்தான் இந்த சின்னப் பொண்ணு ஞாபகப்படுத்துது. இவளை மாதிரித்தான் அந்தக் குழந்தையும் என் மேல ரொம்பவும் பிரியமா இருக்கும். எல்லா தீபாவளிக்கும் அவ எனக்கு ஒரு கடிதம் எழுதுவா.”

“அன்பைவிட மேலானது வேற எதுவும் இல்ல இன்ஸ்பெக்டர் ஐயா”- ஆயி சொன்னாள். புகையிலைத் துண்டையும் சுண்ணாம்பையும் இடது கை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள் ஆயி. “எனக்கும் வயசாயிடுச்சு. இந்த வீட்டை சரஸ்வதிகிட்ட விட்டுட்டு காசிக்குப் போயி மரணமடைஞ்சா என்னன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். கடைசிநாள் வரை எந்தவித பிரச்சினையும் இல்லாம வாழ்றதுக்கான எல்லா வழி வகைகளையும் நான் செஞ்சிட்டேன். போறப்போ கூட ஒரு வயசான கிழவியையும் கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். அந்த சிந்துத் தாயையும் என்கூட அழைச்சிட்டுப் போனா என்னன்னு நினைக்கிறேன். அந்தக் கிழவிக்கு சொந்தம்னு யாரும் இல்ல. எதுவா இருந்தாலும் சனிக்கிழமை என் மகன் வரட்டும். அதுக்குப் பிறகு முடிவு செய்வோம்.”

“லட்சுமிபாயி அப்போ நாங்க உங்களைப் பார்க்க முடியாதே”- இன்ஸ்பெக்டர் சொன்னார் “நீங்க இல்லாத இந்த வீடு இப்போ இருக்குற மாதிரி இருக்காது. ருக்மிணி எங்கே போவா? இந்த வீட்டுல இருக்கப்போற புதிய ஆயிக்கிட்ட அன்புக்காக அவ கெஞ்சி நிக்கிற சூழ்நிலை வரலாம்ல?”

“அவளை நான் என் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்”- ஆயி சொன்னாள்: “கட்டாயம் ஒரு பொண்னை அவன் நல்லா காப்பாத்துவான்.”

“நேராமாயிருச்சா?”- சுற்றிலும் கண்களை ஓட்டியவாறு அங்குவந்த ஒரு ஆள் கேட்டான்.

“இந்த வீட்டுல எப்பவும் நேரமாகுறது இல்ல...”- உள்ளே அறைக்குள் அந்த மனிதனை அழைத்துப் போவதற்காக சரஸ்வதி வந்தாள். அவளை அவன் விருப்பத்துடன் பார்த்தான்.

“என் மீரா கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்ல?”- இன்ஸ்பெக்டரைப் பார்த்து ஆயி கேட்டாள் “உங்களுக்கு அவளை எப்பவும் பிடிக்குமே.”

“வேண்டாம் லட்சுமிபாயி. இன்னைக்கு ஒரு பொண்ணுகூட இருக்கணும்ன்ற எண்ணமே என்கிட்ட இல்ல...”- வெற்றிலையில் மிகவும் கவனமாக சுண்ணாம்பைத் தடவியவாறு அவர் சொன்னார் “இன்னைக்கு எனக்குள்ள இருந்த ஏதோ ஒண்ணு செத்துப்போச்சு.”

“ஒருவேளை வேற ஏதாவது உங்க மனசுல புதுசா தோணியிருக்கலாம்”- மெல்லிய புன்சிரிப்புடன் ஆயி சொன்னாள். அப்போது ருக்மிணியின் கையிலிருந்த பொம்மை அம்மா... அம்மா... என்ற சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.