வளர்ப்பு மிருகங்கள்
- Details
- Saturday, 10 November 2012
- Category: சிறுகதைகள்
- Written by sura
- Hits: 8304
நல்ல நிலவொளி திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலான பனி மூட்டத்தினூடே தூரத்தில் மேற்கு திசையில் இருந்த மலை முகடுகள் தெளிவில்லாமல் நிழல்களைப் போல தெரிந்தன. இரவு நேரத்தின் உறைந்து போன அமைதி எங்கும் பரவியிருந்தது.
ஜானம்மா மெத்தையில் அசையாமல் படுத்திருந்தாள். பாதி இரவு தாண்டியிருக்கும். இருப்பினும், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அமைதியின் மரத்துப்போன சரீரத்தை வேதனைப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்த சர்க்கஸ் கொட்டகையிலிருந்து மெல்லிய பேண்ட் வாத்திய இசை காற்றில் மிதந்து வந்தது.



