செல்க்காஷ்
- Details
- Wednesday, 08 August 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 8075
கறுத்த தூசு மேல்நோக்கி உயர்ந்ததன் காரணமாக ஆகாயத்தின் தெற்குப் பக்கம் முழுமையாக இருண்டு போனது. அடர்த்தியான மூடு பனிக்குள்ளிருந்து பார்ப்பதைப் போல எரிந்து கொண்டிருந்த சூரியன் பச்சை நிறத்திலிருந்த கடலையே உற்றுப் பார்த்தது. சாதாரண படகுகளின் துடுப்புகளும், நீராவிக் கப்பல்களின் காற்றாடிகளும், துர்க்கியிலிருந்து வந்திருந்த ஃபெலுக்கா என்றழைக்கப்பட்ட கப்பல்களின் கூர்மையான அடிப்பகுதியும், துறைமுகத்தின் சுறுசுறுப்பாக இருக்கும் நீர்ப்பரப்பை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தன.





