நான்தான் தவறு செய்தவன்
- Details
- Tuesday, 04 September 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7086
பலபலவென்று வெளுக்கும்போது சங்கரன் நாயர் வீட்டைவிட்டுப் புறப்படுவார். ஆறு மைல் தூரம் நகரத்திற்கு நடக்க வேண்டும். நகரத்திலிருக்கும் முன்சீஃப் நீதிமன்றத்தில் சேவகனாக இருக்கிறார் அவர்.
ஒரு வேட்டி அணிந்து, துண்டை இடுப்பில்கட்டி மெதுவாக அவர் நடந்து செல்வார். ஒரு பழைய குடையை கையிடுக்கில் இறுகப் பிடித்திருப்பார். மாநிறத்தில், மெலிந்துபோன உருவத்தைக் கொண்ட மனிதர் அவர். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் எதையாவது பேசாமல் அவர் கடந்து செல்லமாட்டார்.



