வெளுத்த குழந்தை
- Details
- Friday, 09 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7968
உச்சிப் பொழுது. கோடை வெயில் பயங்கரமாகத் தகித்துக் கொண்டிருந்தது. பூமியிலிருந்து நெருப்பு ஜூவாலைகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றவோ என்பது மாதிரி இருந்தது. அந்த மணல் மீது கால் வைத்தால் நெய்யப்பம்போல கால்கள் வெந்துவிடும். ஒரு மனிதனால்கூட அந்தச் சமயத்தில் அதில் நடக்க முடியாது. எனினும், குஞ்ஞிமோன் நடந்தான். குழந்தைகளை அடையும்போது வெயில் குளிர்ந்துவிடும் அல்லவா? ஆனால், எவ்வளவு நேரம் வெயில் அப்படி குளிர்ச்சியாக இருக்க முடியும்? குஞ்ஞிமோன் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.




