வளர்ப்பு மகள்
- Details
- Wednesday, 06 June 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7624
அந்தக் கொலை வழக்கு விசாரணையின் கடைசி நாள் அது. பிரபலமான அந்த வழக்கைப் பார்ப்பதற்காக நீதிமன்றத்தில் நிறைய மக்கள் கூடியிருந்தார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவன் செய்த குற்றத்தை நிரூபிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் இரண்டு மணி நேரம் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தைக் காட்டிப் போராடினார்.
குற்றம் சாட்டப்பட்ட மனிதன் குற்றம் செய்தவனா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பெருமதிப்பிற்குரிய நீதிபதி ஜுரிமார்களுக்கு அரை மணிநேரம் அனுமதித்தார். அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசுவதற்காக பக்கத்திலிருந்த அறைக்குள் போனார்கள்.





