பேரழகி
- Details
- Category: புதினம்
- Written by சித்ரலேகா
- Hits: 7113
பரபரப்பாக வந்தான் சந்துரு. "மீனாட்சி அத்தை... நம்ம பவித்ரா, அந்த அரவிந்தனோட ஓடிப் போகப்போறாளாம். அவங்க ரெண்டு பேரும் மதுரைக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களாம்..."
"என்னடா சந்துரு சொல்ற?" அதிர்ச்சியான விஷயத்தைக் கேட்ட மீனாட்சி, கால்கள் மடங்க, தரையில் சரிந்து உட்கார்ந்தாள்.
"பதறாதீங்க அத்தை. அவங்க போறதைத் தடுத்து நிறுத்த என்னால முடியும். நாளைக்கு ராத்திரிதான் போகப் போறாங்க..."









