Logo

ரவியின் கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7127
raviyin-kadhai

"என்னை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து 'லாக்'கைச் சுற்றி ஒரு நாள் பத்து முறை ஓட்டவில்லையா? சக் சக் சக் சக்... அன்ற நான் பயந்து உரத்த குரலில் சத்தம் எழுப்பியபோது என்னை 'பூனைக்குட்டி, தொந்தரவு தருபவளே, அறிவு இல்லாதவளே' என்றெல்லாம் அழைத்தது ஞாபகத்தில் இல்லையா? சொல்லுங்க ரவி...

ஞாபகத்தில் இல்லையா? பிறகு... ஒரு பள்ளிக்கூட நாளின் போது நான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தேன் அல்லவா? அதற்குப் பிறகு நாம் விக்டோரியா மெமோரியலிற்குள், கடலையைத் தின்று கொண்டே நடந்தோம்... ஞாபகத்தில் இல்லையா ரவி?"‘

தன்னுடைய கால்களுக்கு அரகில் வெறும் தரையில், அவிழ்த்துப் போடப்பட்ட கூந்தலுடன் அமர்ந்திருந்த பெண்ணின் கண்களையே பார்த்தவாறு, அவன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவளுடைய கண்கள் ஈரமாயின.

"உங்களுக்கு அவை எதுவும் ஞாபகத்திலேயே இல்லையா?" அவள் மீண்டும் கேட்டாள்: "ரவி, நீங்கள் அவற்றையெல்லாம் மறந்துவிட்டீர்களா என்ன?"

அவன் அவளுடைய முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே தாழ்ந்த குரலில் சொன்னான்: "நான் ரவி இல்லை."

கதை ஆரம்பிக்கும்போது தந்தை இருந்தார். தாய் இருந்தாள். ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தக்கூடிய இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்- ஒரு அண்ணனும் ஒரு தங்கையும், பொறாமைப்படக் வடிய அளவிற்கு பண வசதி கொண்ட ஒரு மலையாளி குடும்பம். கல்கத்தாவிலேயே மிகவும் நாகரீகமாக இருக்கும் ஒரு தெருவில், பத்தாம் எண்ணைக் கொண்ட வீடு, கார், வேலைக்காரர்கள், ட்யூஷன் மாஸ்டர்கள், நாகரீக உடைகள் அணிந்த விருந்தாளிகள். அத்த் வகையில் ஆர்ப்பாட்டமான ஒரு சூழல்... மெலிந்த கை கால்களையும் பெரிய கண்களையும் கொண்ட இளம்பெண் தன்னுடைய அண்ணனிடம் கூறினாள்:

"பேபி அண்ணா, என்னை கல்லூரிக்கு இந்தி திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்தச் செல்ல வேண்டும். அப்பாவும் அம்மாவும் வெளியே செல்லும் ஞாயிற்றுக்கிழமை அல்லவா? என்னால் இங்க தனியாக இருக்க முடியவில்லை."

பேபி கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைப் பின்னோக்கி வாரிக் கொண்டிருந்தான். அவன் ஒரு நிழல் வந்து விழுந்த தன்னுடைய மேலுதட்டையும், பிரகாசித்துக் கொண்டிருந்த தலைமுடியையும் பார்த்தவாறு முழுமையான மிடுக்குடன் சொன்னான்:

"முடியாது."

"அது நடக்காது. என்னை அழைத்துக் கொண்டு போகவில்லையென்றால், பிறகு எதற்காக இரண்டு டிக்கெட்களை வாங்க வேண்டும்? என்னால் இங்கு தனியாக இருக்க முடியாது. பேபி அண்ணா, நீங்க என்னை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்."

"என்னால் முடியாது."

இடையில் அவ்வப்போது அவளை அலட்டிக் கொண்டிருந்த அந்த எண்ணம், தான் யாருக்கும் தேவைப்படவில்லை என்ற அந்த நினைப்பு, பன்னிரண்டு வயது தாண்டிய  அந்த இளம் பெண்ணை திடீரென்று மீண்டும் பாதித்தது. அவள் தன்னுடைய அண்ணனை இறுக அணைத்துக் கொண்டு, அவன்மீது தன்னுடைய முகத்தை மறைத்து வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவன் பதைபதைப்பு அடைந்தான்.

"நீ ஏன் அழுகிறாய், லில்லி? நான் அழைத்தச் செல்லாமல் இருப்பேனா? உனக்கு இந்தி மொழி புரியாது என்று நினைத்துதான் வர வேண்டாம் என்று சொன்னேன். நீ வா. உனக்கு போராக இருக்காது என்றால், நீ வா. அழாதே லில்லி. லில்லி லில்லி... லில்லி... லில்லி..."

அவன் அவளடைய முகத்தைத் தன்னுடைய கைக்குட்டையால் துடைத்து, அவளைக் கிச்சுக்கிச்சு மூட்டியவாறு மீண்டும் சொன்னான்:

"லில்லி... லில்லி... லில்லி... லில்லி.."

அவள் சிரித்தாள்.

அவன் தன்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாடக்வடிய மைதானத்தை நோக்கி நடந்தபோது, அவனைப் பற்றி எல்லாரிடமும், வீட்டில் இரப்பவர்களிடம் மட்டுமல்ல- வெளியே தெருவில் நடந்து செல்பவர்களிடம் கூட, எல்லாரிடமும் கூற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது: 'என்னுடைய அண்ணனைப் பாருங்கள்...  இந்த அளவிற்கு அருமையான ஒரு மனிதரை நீங்கள் பார்த்திருக்க முடியாது... இந்த அளவிற்கு இரக்க குணம் கொண்ட ஒரு ஆளை...'

 

கல்லூரியில் காட்டப்பட்ட 'பரதேசி' என்ற இந்தி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களுடன் ரவியும் இருந்தான். பேபியின் நண்பன். தந்தையும் தாயும் தோட்டத்தில் பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தாய் பேபியிடம் கேட்டாள்: "உடன் இருப்பது யார்?"

ரவி ஒரு சாதாரண காக்கித் துணியால் உண்டாக்கப்பட்டிருந்த பேண்ட்டை அணிந்திருந்தான். தன் தாய் அவனுடைய ஆடைகளைக் கூர்ந்து கவனிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதும், பேபியின் முகம் சிவந்தது. அவன் சொன்னான் "என்னுடைய நண்பன்."

"நான் பேபியின் வகுப்பில் படிக்கிறேன்." ரவி சிரித்துக் கொண்டே சொன்னான்: "என் பெயர் ரவீந்திரன். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்."

அவனுடைய தாய் அதற்குப் பிறகும் புன்னகைக்க வில்லை. பாதி மட்டுமே திறக்கப்பட்டிருந்த தன்னுடைய கண்களால் ரவியைப் பார்த்தவாறு அவள் கேட்டாள்:

"அப்பா யாரு?"

"என் அப்பாவின் பெயர் டாக்டர் பிள்ளை."

"இங்கே ப்ராக்டீஸ் பண்ணி அதிக நாட்கள் ஆகிவிட்டனவா?"

"ஆமாம்... அப்பா போருக்குச் சென்றுவிட்டு, ஒரு கால் இல்லாமல் திரும்பி வந்தார். அதனால் ஹோமியோபதி கற்று, வாழ்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தார்."

ரவியின் உற்சாகம் நிறைந்த அந்தக் குரலைக் கேட்டோ என்னவோ, பேபியின் தந்தை தான் வாசித்துக் கொண்டிருந்த நாளிதழைச் சற்று தாழ்த்தி வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார். ரவி அப்போது புன்னகையைத் தவழவிட்டான்.

"ஓ... ஹோமியோபதி... அப்படித்தானே?" பேபியின் தாய் கேட்டாள்: "ஹேமியோபதிமீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?"

"இருக்கிறது."

"நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறதா?"

"பரவாயில்லை. ஒரு மாதிரியாகப் போய்க் கொண்டிருக்கிறது."

பேபியின் தாய் பேச்சை நிறுத்திவிட்டு, ஒரு உரோம சால்வையைப் பின்ன ஆரம்பித்தாள்.

"வா ரவி... அன்றைக்கு நான் சொன்ன கேமராவைக் காட்டுகிறேன்." பேசி சொன்னான். தன் தாயின் நடவடிக்கைகள் எப்போதும் போல அப்போதும் அவனைச் சற்று அவமானப்படச் செய்தன. ரவி பேபியின் தாயையும் தந்தையையும் பார்த்துச் சொன்னான்: "நான் வரட்டுமா?"

பேபியின் அறைக்குள் நுழைந்தவுடன் ரவி சொன்னான்: "அபாரமான அழகைக் கொண்ட வீடு! பணக்காரர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்ற விஷயம் எனக்கு இன்று புரிந்துவிட்டது."

அதைக்கேட்டதும் மீண்டும் பேபியின் முகம் சிவந்தது. அவன் எந்தவொரு காரணமும் இல்லாமல் அந்த அறையின் ஒழுங்கைக் குலைப்பதற்கு மயற்சித்தான். விரிக்கப்பட்டிருந்த அந்த படுக்கையில் கையால் அடித்து சில சுருக்கங்களை உண்டாக்கினான். மேஜையின் மீத வைக்கப்பட்டிருந்த சில தாள்களைச் சுருட்டி, தரையில் எறிந்தான். சாளரத்தில் தொங்கிக் கொண்டிருந்த நீல நிற திரைச்சீலைகளை அகற்றுவதற்கு பதிலாக அவற்றின் முனைகளை சிறிதும் ஒழுங்கு இல்லாமல் கட்டிவிட்டான். ரவி டஅவனுடைய முக வெளிப்பாடுகளையும் செயல்களையும் பார்த்து விழுநது விழுந்து சிரித்தான்.

"நான் வேலைக்காரனிடம் ஐஸ்க்ரீம் கொண்டு வரும்படி கூறட்டுமா?" வாசலில் வந்து நின்று கொண்டு லில்லி கேட்டாள்.

"ஹா... ஐஸ்க்ரீம்! இவை எல்லாவற்றுக்கும் மேலே ஐஸ்க்ரீம் வேறு இருக்கிறதா? இதுதான் சொர்க்கம், பேபி..." ரவி சொன்னான்:


"இது சொர்க்கம் என்று தோன்றுகிறது. இந்தக் கதவுக்கு அருகில் வெள்ளை நிற ஆடை அணிந்து வந்து நின்று கொண்டிருக்கும் சிறிய உருவம், தேவதையாக இரக்க வேண்டம். ஹா... ஹ... ஹா..."

பேபியும் சிரித்தான். "இங்கே வா லில்லி... உன்னுடைய வாயில் இருக்கும் கம்பியைக் காட்டு. இவளுடைய பல் வெளியே நீட்டிக் கொண்டு தெரியக்கூடாது என்பதற்காக டென்டிஸ்ட் கட்டியிருக்கும் பாலத்தைப் பார்க்க வேண்டாமா? வா..."

லில்லி தலையை ஆட்டினாள். அவளுக்குத் தன்னுடைய அண்ணன் மீது கோபம் உண்டானது.  தன்னுடைய வாழ்க்கையின் ம்கவும் மோசமான அந்த ரகசியத்தை இந்த இளைஞனிடம் காட்ட வேண்டுமா என்ன?

"பல் வெளியே தெரிந்தால் என்ன? பல் வெளியே தெரியும்படி இரப்பவர்களைத் தான் எனக்குப் பிடிக்கும். வாயில் பல் இல்லை என்ற சந்தேகம் உண்டாகாது அல்லவா- வெளியே எல்லா பற்களும் தெரிந்தால்? ஹ...ஹ...ஹ..."

பேபி தன்னுடைய தங்கையைப் பிடித்து அருகில் நிற்க வைத்து அவளைக் கிச்சுக்கிச்சு மூட்டியவாறு சொன்னான்: "லில்லி... லில்லி... லில்லி... லில்லி... எனக்கென்று இருக்கும் ஒரேயொரு தங்கை இவள். இவள் பார்ப்பதற்கு கொஞ்சம் மோசம்தான். அது உண்மையும்கூட ஆனால், இவளை எங்காவது யாராவது திரடிக் கொண்டு போனால், அவனை நான் சும்மா விட மாட்டேன்."

ரவி தலையைப் பின்னோக்கித் திருப்பி, உரத்த குரலில் சிரித்தான். அன்றிலிருந்து லில்லியின் வாழ்க்கைக் கதையில், மாநிறத்தையும் முகத்தில் பருவையும் சுருண்ட தலைமுடியையும் கொண்ட ரவி மக்கியமான ஒரு கதாபாத்திரமாக ஆனான்.

 

ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்குப் பிறகு, தந்தையும் தாயும் தூங்குவதற்கு மாடிக்குப் போய்விட்டால், லில்லி கதவைத் திறந்து வெளியே தோட்டத்திற்குச் செல்வாள். அங்கிரக்கும் மரங்களுக்குக் கீழே கவிழ்ந்து படுத்துக் கொண்டு பேபியும் ரவியும் பேசிக் கொண்டிருப்பார்கள். லில்லி அவர்களுக்கு அரகில் சென்று புல்லில் உட்காருவாள். வெயில் பலமாகப் பிரகாசிக்கும்போது, நிழலில் படுத்திருக்கும் அந்த இளைஞர்களின் முகங்களைப் பார்த்துக் கொண்டே லில்லி கண்களை மூடுவாள். வாழ்க்கை எந்த அளவிற்கு அமைதியானதாகவும் அழகானதாகவும் இருக்கிறது! அப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

பேபியின் அன்னை சொன்னாள்: "லில்லி உயரமாக வளர்ந்து கொண்டிருக்கிறாள். கொஞ்சம் காலம் ஆனால், புடவை அணிய வேண்டியதிருக்கும்."

"ஓ... மம்மி!" லில்லி முணுமுணுத்தாள்.

"இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால், திரமணம் செய்ய வேண்டியதிருக்கும்."

"ஓ... மம்மி!"

 

சமையல்காரன் வேலைக்காரியிடம் சொன்னான்: "மம்மி.. மம்மி... பப்பா... கப்பா.. பத்து பதிமூணு வயசு ஆகியும் நேரடியாக விஷயத்தைக் கூறத் தெரியவில்லை. பொண்ணு கொஞ்சிக் கொஞ்சிதான் விஷய்ததையே சொல்லுது... அதைக் கேக்குறப்போ எனக்கு சிரிப்புத்தான் வருது."

சமையலறைக்கு நீர் வேண்டும் என்பதற்காக வந்த லில்லி, அந்த வார்த்தைகளைக் கேட்டு வாசலிலேயே அதிர்ச்சியடைந்து நின்று விட்டாள். தன் மீது சமையல்காரனுக்கு இந்த அளவிற்கு வெறுப்பு இருக்கிறது என்ற விஷயமே அவளுக்கு அன்றுதான் தெரிய வந்தது. அவள் உள்ளே நுழையாமல், அப்போதே ஒடி தன்னுடைய படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

லில்லி வேலைக்காரியிடம் கேட்டாள்: "லட்சுமி, உங்களுடைய பொண்ணுக்கு என்னுடைய வயது இருக்குமா?"

"ஆமாம்..."

"என்னுடைய உயரம் இருக்குமா?"

 

 

"சிவ... சிவ.. அதொண்ணும் இல்லை. உங்களுடைய உயரம் இல்லை... அவள் தடித்து போய், வெளுத்து, ஒரு மாதிரி இரப்பாள்."

சில நேரங்களில் லில்லி அறையில் வேறு யாரும் இல்லாத போது நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டு தன்னுடைய உருவத்தை ஆராய்ந்து பார்ப்பாள். தன்னுடைய அழகு எங்கே இருக்கிறது, எங்குமே இல்லையா என்ன? உடலின் இந்த மெல்லிந்த தோற்றம் என்றுமே மாறாதா? அவள் தன்னுடைய நீளம் குறைவான கூந்தலைப் பிடித்து இழுத்து முகத்தில் பிறரைக் கவர்வதைப் போன்ற ஒரு அமைப்பை உண்டாக்க முயற்சிப்பாள். ஆனால், அது நடக்காது. அவள் முகத்தில் பவுடர் தேய்த்து, அதன் தவிட்டு நிறத்தைச் சற்று நேரம் வாசனை பிடிக்க முயற்சிப்பாள். வாயில் இருக்கும் கம்பியை எடுத்து நீக்கி, முகத்தைச் சாய்த்து வைத்துக் கொண்டு சிரிப்பாள்... தன்னுடைய அழகற்ற தோற்றம் தனக்கு எப்போதும் வெறுப்பை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றும்.

அவள் தன்னுடைய தாய் இருக்கும் அறைக்குச் சென்று கேட்பாள்.

"மம்மி, என்னுடைய தலை முடியை இனிமேல் வெட்ட வேண்டாம். நான் இரண்டாகப் பின்னிவிடப் போகிறேன்."

"அது உனக்கு கொஞ்சமும் பொருத்தமாக இருக்காது."

"அப்படியென்றால் எனக்கு எதுதான் பொருத்தமாக இருக்கும்? ஒரு குரங்கின் வாலா? நான் ஏன் இப்படி ஆனேன்?"

"எப்படி?"

"இப்படி பார்க்க சகிக்காத மாதிரி... பேபி அண்ணனுக்கு நிறம் இருக்கு. அழகு இருக்கு. எல்லாம் இருக்கு. எனக்கோ... ஒண்ணுமேயில்ல..."

அம்மா அமைதியாக உட்கார்ந்திருப்பாள். அவளடைய அன்னையின் கையின் ஒரு தீண்டலைக்கூட லில்லியால் அன்ற அனுபவிக்க முடியவில்லை. அதனால், தன்னுடைய வாழ்க்கையில் அன்பு என்ற ஒன்று இருக்கிறதா என்றுகூட பல நேரங்களில் அவள் சந்தேகப்பட்டாள்.

 

பேபிக்க டைஃபாய்ட் வந்து பாதித்தபோது, அந்த வீட்டின் அன்றாட நடவடிக்கைகளுக்குச் சில மாற்றங்கள் உண்டாயின. அவளுடைய தாய் நிலைக் கண்ணாடியையும் அழகுப் பொருட்களையும் முழுமையாக மறந்துவிட்டாள். இடையில் அவ்வப்போது நர்ஸ்கள் அவளுடைய அன்னையிடம் கூறுவார்கள்.

"கொஞ்சம் போய் படுங்க. நீங்கள் இப்படி தூக்கத்தை இழந்து இங்கு எதற்காக இருக்க வேண்டும்? பேபியைப் பார்த்துக் கொள்வதற்கு நாங்கள் இல்லையா?"

சுய உணர்வு இல்லாமல், கண்களை மூடிப் படுத்திருந்த பேபியின் வெளிறிப் போன முகத்தைப் பார்த்துக் கொண்டே அவளுடைய தாய் மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழுதாள். கூடத்தில் இருந்து கொண்டு தன் தாய், தன் தந்தையிடம் கூறிக் கொண்டிருந்த சில வார்த்தைகளை லில்லி கேட்டாள்.

"ஏன் என்னிடம் பொய் சொல்றீங்க?" அவளுடைய தாய், அவளின் தந்தையிடம் கேட்டாள்: "அவனுக்கு உடல்நிலை சரியாக ஆகாது. அப்படித்தானே? என் குழந்தை சாகப் போறான். அது எனக்குத் தெரியும்."

லில்லிக்கு தன்னுடைய உடலே செயலற்று விட்டதைப் போல தோன்றியது. இந்தச் செய்தியை எதற்காகத் தன்னிடம் யாரும் கூறவில்லை? அவள் பேபி படுத்திருந்த அறையின் வாசலுக்குப் போய் நின்றாள்.

"உள்ளே வரக்கூடாது." ஒரு நர்ஸ் சொன்னாள்.

"நான் பார்க்கணும்."

"உங்களை உள்ளே விடக்கூடாது என்று அப்பா சொல்லியிருக்கார்."


"நான் பேபி அண்ணனைப் பார்க்கணும். நான் பேபி அண்ணனைப் பார்த்தே ஆகணும். நான்..."

இறுதியில் அனுமதி கிடைத்தபோது அவள் தன்னுடைய அண்ணனின் கட்டிலின் அருகில் சென்றாள்.

"பேபி அண்ணா..."

அவன் எதுவும் பேசவில்லை.

"தூங்குகிறாரா?" அவள் நர்ஸிடம் கேட்டாள்.

"உங்களுடைய அண்ணன் உறங்கிக் கொண்டிருக்கிறார்."

"நான் பிறகு வர்றேன்."

அவள் நடுங்கிக் கொண்டிருக்கும்ம கால்களுடன் அறையை விட்டு வெளியேறி ஓடினாள். அன்று இரும்பால் ஆன வெளிவாசலுக்கு அருகில் தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது, ரவி தன்னுடைய கிரிக்கெட் மட்டையுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

"லில்லி..."

"ம்...?"

"பேபிக்கு எப்படி இருக்கு?"

"பரவாயில்லை. இப்போ தூங்கிக் கொண்டிருக்கிறார்."

"நான் போகட்டுமா?"

"ம்..."

ரவி போன பிறகு, அவளுக்கு அழுகை வந்தது. அதற்கான காரணமும் அவளுக்குத் தெரியவில்லை.

 

ஒரு நாள் மாலை நேரத்தில் ரவியும் ரவியின் தந்தையும் பேபியைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். வரவேற்பறையில் லில்லியின் தாயைத் தவிர வேறு யாரும் இல்லை. அவளுடைய தாய் ஒரு பைத்தியம் பிடித்தவளைப் போல ஓடி வந்து ரவியின் தந்தையின் கைகளைப் பிடித்தாள்.

"டாக்டர்... என் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும்" அவள் சொன்னாள்: "என் பேபியின் உடல்நலக் கேட்டை உங்களால் குணப்படுத்த முடியாதா?"

"டாக்டர் மஜும்தார்தானே பார்த்துக் கொள்கிறார்? அந்த அளவிற்கு ஒரு நல்ல டாக்டர் கல்கத்தாவிலேயே இல்லை. கவலைப்பட வேண்டாம்." ரவியின் தந்தை சொன்னார்.

"என் பிள்ளையைக் காப்பாற்றுங்க... என் குழந்தையைக் காப்பாற்றுங்க..."

லில்லியின் தாய் கூறிக் கொண்டேயிருந்தாள்.

அன்ற இரவு உறங்குவதற்காகப் படுத்த பிறகும் நீண்ட நேரம் லில்லி அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். "சொர்க்கத்தில் இருக்கும் கர்த்தாவே! உங்களின் காதுகளில் விழவில்லையா," அவள் இருட்டைப் பார்த்துக் கேட்டாள்: "என் தாயின் வார்த்தைகளை நீங்களும் கேட்கக் கூடாதா?"

 

ஆனால், துக்கம் ஒரு பெரிய கையைப் போல அந்த குடும்பத்தின் மீத வந்து விழுந்தது. பேபியின் மரணத்திற்குப் பிறகு, சிறிது காலத்திற்க அந்த வீட்டில் சந்தோஷத்தின் ஒரு அடையாளம் கூட இல்லாமல் போய்விட்டது. விருந்துகள் இல்லை. சந்தோஷச் சிரிப்புகள் இல்லை. பேபிக்கு கணக்குப் பாடம் கற்றுத் தந்த தலை நரைத்த ட்யூஷன் மாஸ்டர் ஒரு நாள் லில்லியின் தாயைப் பார்ப்பதற்காக வந்திருந்தபோது, அவளின் தாய் திடீரென்று தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு, படிகளில் ஏறிப் படுக்கையறைக்குச் சென்று குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவளுடைய தாய் வெளிறிப் போய் காணப்பட்டாள். உடல் மெலிந்து போனது. அவளுடைய பிரகாசமான தோற்றம் முற்றிலும் இல்லாமற் போனது. இடையில் அவ்வப்போது லில்லி  தன் தாயின் அருகில் சென்று உட்கார்ந்து எதையாவது கூற ஆரம்பிப்பாள். ஆனால், அவளுடைய அன்னை அவை எதையும் காதிலேயே வாங்குவதில்லை.

காலப்போக்கில், லில்லியின் அன்னை பேபியை மறந்து விட்டாள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வேதனையே இல்லாமல், அவனைப் பற்றி நினைப்பதற்குக் கற்றுக் கொண்டாள். மீண்டும் அந்த வீடு அழகானதாக ஆனது. புதிய திரைச் சீலைகள், தோட்டத்தில் புதிய பூஞ்செடிகள், வரவேற்பறையில் புதிய மகங்கள்... பேபியின் புகைப்படங்கள், அவன் பயன்படுத்திக் கொண்டிருந்த பொருட்கள் ஆகியவை காணாமல் போன பொருட்களாக ஆயின. அவனுடைய அறை பொருட்களை வைக்கும் ஒரு அறையாக மாறியது. இனிப்புப் பலகாரங்களும் பிற பொருட்களும் அங்கு சுவரில் இருந்த அலமாரிகளில் இடம் பிடித்தன. ஆனால், லில்லியின் வாழ்க்கையிலிருந்து பேபி விலகிச் செல்லவில்லை. காலையில் எல்லாரும் தூக்கத்திலிருந்து கண் விழிப்பதற்கு முன்னால், அவள் படிகளில் இறங்கிப் படிக்கும் அறைக்குச் செல்லும் போது, வெளியே யாருக்கும் தெரியாமல் தன் அண்ணன் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறான் என்று அவளுக்குத் தோன்றியது. தவிட்டு நிறத்தைக் கொண்ட பைஜாமாவும் சட்டையும் அணிந்திருக்கும் பேபி அண்ணன்... மேஜைக்கு அருகில் அமர்ந்து கொண்டு அவள் மெதுவான குரலில் கூறுவாள்:

"எனக்கு பார்க்கணும் போல இருக்கு."

வெளியே தெரியாத அந்த அண்ணனின் வெளியே தெரியாத ஒரு கையைத் தடவியவாறு அவள் கூறுவாள்.

"என் பேபி அண்ணா... பேபி அண்ணா..."

 

குளிர்காலம் முடிவடைந்து, மீண்டும் மஞ்சள் வெயில் தோட்டத்தில் வந்து விழ ஆரம்பித்த போது லில்லிக்கு தன்னுடைய இழப்பைப் பற்றிய முழுமையான ஒரு புரிதல்  உண்டானது. இனி எந்தக் காலத்திலும் தன்னுடைய அண்ணன் புல்லின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டு, பொழுது போக்கிற்காக எதையாவது கூறி குலுங்கிக் குலுங்கி சிரிக்கப் போவதில்லை. 'எந்தச் சமயத்திலும் இல்லையா?' அவள் தோட்டத்தில் இருக்கும் செடிகளின் மேற்பகுதிகளை அசைத்துக் கொண்டிருக்கும் காற்றிடம் கேட்டாள்:

'எந்தக் காலத்திலும் இல்லையா?'

இல்லை... இல்லை... இல்லை... தன்னுடைய இதயம் ஒரு அறையாக இருந்தால், பேபி அண்ணன் இருந்த மூலை இப்போது வெறுமையாகவே இருக்கிறது. இதயத்தின் மூலை மட்டுமா? வாழ்க்கையே எந்த அளவிற்கு இருண்டு போனதாக ஆகிவிட்டது! திறந்து விட்டால் காற்றில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் அந்த இரும்பு கேட்டைப் பிடித்துக் கொண்டு லில்லி தெருவையே பார்த்தாள். ரவி ஏன் வரவில்லை? ரவி சமீப நாட்களாக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி வைத்து விட்டானா? ரவியைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன! ரவியும் தன்னை மறந்துவிட்டானா?

அவளுடைய கண்கள் நிறைந்துவிட்டன. அந்தத் தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு நிலக்கடலை விற்பனை செய்பவன் தன்னுடைய கூடையைத் தரையில் இறக்கி வைத்துவிட்டு, அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

"கடலை வேணுமா?"

அவள் தலையை ஆட்டினாள்: "வேண்டாம்."

 

ஒன்றோ இரண்டோ வருடங்கள் ஓடி முடிந்தன. லில்லி மேலும் சற்று வளர்ந்தாள். அவளுடைய உடல் சற்று சதைப்பிடிப்பு கொண்டதாக ஆனது. கூந்தலின் நீளம் அதிகமானது. ஆனால், அவளுடைய அமைதியான குணமும் கேள்விகள் கேட்கக்கூடிய அந்த பெரிய கண்களும் மற்றவர்களிடமிருந்து அவளை விலகி இருக்கச் செய்தன. சில நேரங்களில் அவளுடைய தாய் கேட்டாள்: "லில்லி, நீ உன்னுடைய தோழிகளில் யாரையாவது இங்கே அழைக்கக் கூடாதா?"

"யாரை அழைப்பது?"

"உன்னுடைய நண்பர்கள்... உனக்கு குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எந்தவொரு தோழியும் இல்லையா?"

லில்லி பதில் எதுவும் கூறாமல் எழுந்து நடப்பாள்.


தன்மீது பள்ளிக்கூடத்தில் இருப்பவர்களில் ஒருவருக்கு கூட அன்பு இல்லை என்று அவள் எப்படித் தன் தாயிடம் கூறுனாள்? அவளுடைய தாயால் அப்படிப்பட்ட ஒரு நிலைமையை நம்பவே முடியாதே! பல நேரங்களில் தன்னை ஆணவம் பிடித்தவள் என்றும் மகாராணி என்றும் அழைத்து கிண்டல் பண்ணக் கூடிய தன்னுடைய தோல்களை அவள் நினைத்துப் பார்த்தாள். தோழியா? தனக்கு எந்தத் தோழி இருக்கிறாள்?

 

ஒரு நாள், அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த தன் தந்தையிடம் லில்லி சொன்னாள்:

"அப்பா... இனி ஜனவரியில் இரந்து நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கட்டுமா? தேர்வு நெரங்கிக் கொண்டிருக்கிறதே! வீட்டில் இரந்து படித்தால், நன்றாகப் படிக்க முடியாது."

"ஹாஸ்டலிலா?"

லில்லி தலையைக் குலுக்கினாள். அவர் தன்னுடைய வளர்ந்த மகளைப் பார்த்து, ஒரு சிறிய ஆச்சரியத்துடன் கேட்டார்: "அது ஏன்? வீட்டில் இருப்பதற்கு உனக்கு விருப்பமில்லாமல் போய்விட்டதா?"

"அது இல்லை, அப்பா... என்னால் தனியாக இருந்து படிக்க முடியவில்லை. வேறு பிள்ளைகளிடம் ஒவ்வொரு சந்தேகத்தையும் கேட்பதற்கு.."

"வேறு பிள்ளைகளிடம் நீ சந்தேகம் கேட்பதா? முட்டாள்தனமாகப் பேசாதே லில்லி. உன் அளவிற்கு அறிவைக் கொண்ட எந்தவொரு பிள்ளையும் அந்தப் பள்ளிக்கூடத்தில் இல்லை. பள்ளிக்வடத்தில் மட்டுமல்ல- இந்த கல்கத்தாவிலேயே இல்லை.

 

லில்லிக்கு பதினைந்து வயது ஆனபோது, ஒருநாள் அவள் மீண்டும் ரவியைப் பார்த்தாள். அவள் கேட்டைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தபோது, ரவி அந்தத் தெருவின் வழியாக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். ரவி மேலும் சற்று வளர்ந்திருப்பதைப் போல அவளக்குத் தோன்றியது. அவன் வியர்வையில் நனைந்திருந்த ஒரு நீல நிற சட்டையையும் வெள்ளை நிறத்தில் பேன்ட்டையும் அணிந்திருந்தான். முகத்தில் முன்பு இருந்ததைப் போலவே சிறிய பருக்கள் இருந்தன. தலைமுடி முன்பைப் போலவே சுருண்டு கட்டுப்பாடே இல்லாமல்... அந்தப் புன்சிரிப்பும் முன்பு இருந்ததைப் போலவேதான்...

"ரவி!" அவள் அழைத்தாள்.

"என்ன... இவ்வளவு நாட்களாகவே வரவே இல்லை?"

"காரணம் எதுவும் இல்லை..." அவன் தன்னுடைய கையில் இருந்த கிரிக்கெட் மட்டையைத் தன் காலுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டே சொன்னான்.

"ரவி, நீங்க தடிமனா ஆகியிருக்கீங்க." அவள் சொன்னாள்.

"ம்... லில்லி, நீயும் தடிச்சிருக்கே."

"ம்... நான் உயரமா ஆகியிருக்கேன். பிறகு... என் பற்களைப் பாருங்க. இப்போ வெளியே நீட்டிக் கொண்டு இல்லையே!"

"நல்ல அழகியா இருக்கே."

ரவி சிரித்தான். தன்னுடைய உலகத்தில் சிரிப்பு முற்றிலுமாக வற்றிப் போய்விட்டது என்று நினைத்திருந்த லில்லிக்கு திடீரென்று சந்தோஷத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு துள்ளல் உண்டானது. ரவியின் கைகளைப் பற்ற வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. புதிதாகப் பிறந்த ஒரு வெட்கத்துடன் அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

"நான் போகட்டுமா?"

அவள் தலையை ஆட்டினாள்.

"என்ன?"

"ஏன் இவ்வளவு அவசரமா போறீங்க. ரவி, நான் உங்களைப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன."

"எனக்கு..."

"போகணும்... அப்படித்தானே? சரி... போங்க. இங்கு உங்களுக்குன்னு யாரும் இல்லை அல்லவா? பேபி அண்ணன் இல்லையே!"

அவளுடைய உதடுகள் துடித்தன. ரவி தன் கிரிக்கெட் மட்டையால் தெருவின் ஓரத்தில் கிடந்த சில செங்கற்களைத் தட்டி உடைத்துக் கொண்டிருந்தான். அவன் எதுவும் கூறவில்லை.

"எனக்குன்னு ஒரு ஆள்கூட இல்லை. ரவி, எனக்குன்னு ஒரு ஆள் கூட இல்லை."

அவள் தன்னுடைய முகத்தைக் கைகளில் மறைத்து வைத்துக் கொண்டு அழுதாள்.

"லில்லி..." ரவி அழைத்தாள். அவனுடைய குரல் மிகவும் மென்மையாக இருந்தது. "லில்லி, அழாதே."

"ரவி, இப்போ போங்க. ஆனால், நாளைக்கு இந்தத் தெரு வழியா வருவீங்களா?"

"ம்..."

"தினமும் வருவீங்களா?"

"ம்..."

ரவியின் உருவம் கண்களை விட்டு மறைந்தவுடன், மாலை நேரம் ஒரு பேர்வையைப் போல அந்த தோட்டத்தில் வந்து விழுந்தது.

அவன் சென்றதற்கும் திடீரென்று வந்து பரவிய அந்த இருட்டிற்குமிடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதைப் போல லில்லிக்குத் தோன்றியது.

 

ரவி இன்டர்மீடியட் வகுப்பில் மூன்ற முறை தோல்வியைச் சந்தித்தான். கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு நாள் அவனுடைய தந்தை லில்லியின் வீட்டிற்கு வந்தார்.

"அலுவலகத்தில் வேலையா? இப்போது வேக்கன்ஸி எதுவும் இல்லையே?" லில்லியின் தந்தை சொன்னார்.

அவருக்கு உடலுறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நோயாளிகள் மீதும் பொதுவாகவே தோன்றக்கூடிய வெறுப்பு அந்த வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.

"நான் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்."

அன்று இரவு லில்லியின் தாய் அவளின் தந்தையிடம் சொன்னாள்: "அந்த ரவிக்கு எப்படியாவது ஒரு வேலையைக் கொடுக்கணும். அவன் நம்முடைய பேபியின் நெருங்கிய நண்பனாக இரந்தான்."

"வேலை விஷயத்தில் சென்டிமெண்ட் எதையும் காட்டி பிரயோஜனமே இல்லை." லில்லியின் தந்தை சொன்னார்: "எந்தவொரு உபயோகமும் இல்லாதவர்களையெல்லாம் என்னுடைய கம்பெனியில் வேலைக்கு எடுத்தால், அது அழிவிற்கு ஒரு எளிய வழியாக ஆகிவிடும். போதாத குறைக்கு, இப்போது மோட்டார் கார் வர்த்தகத்திற்கு பாதிப்பு உண்டாகிவிட்டிருக்கிற காலம் வேறு... நானே கிட்டத்தட்ட முந்நூறு தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 

அடுத்த அறையில் படுத்திருந்த லில்லி அந்த வார்த்தைகளைக் கேட்டு வெறுப்புடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். சாளரத்திற்கு வெளியே வானம் கறுத்த வெல்வெட்டைப் போல மென்மையாகக் காணப்பட்டது. தான் ரவிமீது அன்பு வைத்திருக்கிறோம்... தந்தையையும் தாயையும் விட அதிகமான அன்பு வைத்திருக்கிறோம் என்று அவளுக்கு திடீரென்று புரிந்தது.

"ஓ... ரவி... ரவி... ரவி... என்னுடைய ரவி..." அவள் இருட்டில் முணுமுணுத்தாள்.

 

ரவி ஒரு ஏழை இன்ஷுரன்ஸ் ஏஜென்டாக ஆனான். அவன் சற்று பழையதாக இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினான். அதன் மீது மிகுந்த சத்தத்தை உண்டாக்கிக் கொண்டு அவன் பயணிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் சாயங்காலம் லில்லி கேட்டிற்கு அருகில் நின்றிருந்தபோது, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அவளிடம் கேட்டான்.

"என்ன லில்லி ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி போய்விட்டு வரலாம் என்ற தோன்றுகிறதா?"

"என்னை உட்கார வைத்துக் கொண்டு போவீர்களா?"

சாயங்கால நேரத்து சூரியன் பொன் துகளைப் போல அவனுடைய கண்களில் விழுந்து கொண்டிருந்தது. அவள் மோட்டார் சைக்கிளில் ஏறி, அவனுக்குப் பின்னால் முதுகுடன் சேர்ந்து உட்கார்ந்தாள்.


பல நேரங்களிலும் அவள் அவனுடன் அந்த பழைய மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து பயணம் செய்தாள். பல வேளைகளிலும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஏரியின் ஓரத்தில் இருந்த புல்வெளியில் உட்கார்ந்து உரையாடிகனார்கள். பல நேரங்களில் ஒருவரையொருவர் பார்த்தவாறு அன்புடன் சிரித்தார்கள். தாங்கள் செய்வது எதுவும் தவறானது என்று அவர்களுக்கு எந்தச் சமயத்திலும் தோன்றியதில்லை. முதுமையும் சிறிது வறுமையும் தளர்வடையச் செய்த ஒரு தந்தையையும், எதிர்காலத்தைப் பற்றிய பல கவலைகளையும் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கும் அனுதாபம் தேவையாக இருந்தது. அவளுக்கோ? அவன் அவளுடைய வாழ்க்கையின் அர்த்தமாக இருந்தான். அவளுடைய எதிர்காலத்திற்கான சாவி அவனுடைய அந்தக் கைகளில் இருந்தது.

 

ஒரு நாள் மாலை நேரத்தில் லில்லி ரவியிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்று கேட்டைத் திறந்த போது, தோட்டத்தில் இருந்த சாய்வு நாற்காலியை விட்டு அவளுடைய தந்தை திடீரென்று எழுந்தார்.

"இதுவரை எங்கே போயிருந்தாய்?"

"நான் வாக்கிங் போயிருந்தேன்." அவளுடைய குரல் பதைபதைப்பால் தடுமாறியது.

"வாக்கிங் போயிருந்தியா? பொய் சொல்றியா? மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞனுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு சவாரி போனாய். அப்படித்தானே?"

அவளுடைய தந்தையின் முகம் சிவந்து பயங்கரமாக இருந்தது. லில்லி தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தாழ்வான குரலில் அவள் சொன்னாள்:

"நான் லேக் வரை போயிருந்தேன். அவ்வளவுதான்."

"எனக்கு முன்னால் நிற்காமல் போ. இல்லாவிட்டால் நான் உன்னை கொன்னுடுவேன். வெட்கம் இல்லாதவளே! அவலட்சணம் பிடித்த பெண்ணே... இங்கேயிருந்து போ... போ..."

அவள் வேகமாக உள்ளே சென்றாள். தோட்டத்தில் இருந்த அவளுடைய தந்தை மீண்டும் கோபத்துடன் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருந்தார்.

"இனிமேல் அவனை இங்கே எங்கேயாவது பார்த்தால், நான் போலீஸிடம் ஒப்படைத்துவிடுவேன். ரௌடி!"

 

பிறகு அவள் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட ஒரு கிளியைப் போல ஆகிவிட்டாள். தன்னுடைய தந்தை தன் ஆன்மாவை இறுகக் கட்டிப் போட்டுவிட்டார் என்று அவளுக்குத் தோன்றியது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்துவிட்டால், அதற்குப் பிறகு மறுநாள் காலையில் தான் கேட்டைக் கடந்து வெளியே வர முடியும். திரைப்படம் பார்க்க வில்லை. வாக்கிங் போகவில்லை. அவள் சாளரததின் கம்பிகளில் சாய்ந்து நின்று கொண்டு ரவியைப் பற்றி நினைத்துப் பார்ப்பாள். கேட்டின் அருகில் ரவி ஏன் வரவில்லை? தன் தந்தை அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனைத் திட்டியிருப்பாரோ? ரவியை தன் தந்தை அவமானப்படுத்திவிட்டிருப்பாரோ? ரவி என்ற பெயரை சத்தம் போட்டு உச்சரிப்பதற்கே அவளுக்கு பயமாக இரந்தது. ஆனால், தூங்குவதற்குப் படுத்திருக்கும் போது, ஒரு கடவுளின் பெயரைக் கூறுவதைப் போல அந்த இரண்டு எழுத்துக்களையும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன. ரவி! எந்த அளவிற்கு முழுமையான ஒரு பெயர் அது! ரவி! சூரியன்! அதற்கு வர்ணனைகள் தேவையில்லை. அலங்காரங்கள் தேவையில்லை. வெப்பத்தையும் உயிர்ப்பையும் அளிக்கும் சூரியனுக்கு விளக்க வார்த்தைகள் தேவை இல்லையே!

 

லில்லி கல்லூரியில் சேர்ந்தாள். அதற்குப் பிறகும் அவளை புடவை அணிய அவளுடைய தாய் அனுமதிக்கவில்லை.

"உனக்கு இப்போது ஃப்ராக்தான் பொருத்தமாக இருக்கும். எதற்கு புடவையைச் சுற்றிக் கொண்டு இந்துப் பெண்களைப் போல நடந்து திரிய வேண்டும்? உனக்கு அந்த அளவிற்கு வயதென்றும் ஆகவில்லை." அவளுடைய தாய் சொன்னாள்.

லில்லி நிலைக் கண்ணாடியைப் பார்த்து, தன்னுடைய மெலிந்து போய் காணப்பட்ட கால்களைச் சபித்தாள்.

சமையல்காரன் வேலைக்காரியிடம் சொன்னான்: "எனக்கு இவற்றையெல்லாம் பார்க்குறப்போ ஒரு சிரிப்புத்தான் உண்டாகுது... பத்து பதினாறு வயதான பெண்கள் முழங்காலை மறைக்காத உடுப்பை அணிந்து அப்படியே நடந்து திரியிறது என்றால்... வெட்கம் ஒண்ணும் இல்லையா? பொண்ணு வயசுக்கு வந்து கடைசியில குளத்துல குதிக்கப் போகுது. பார்த்துக்கோ."

 

ஒருநாள் லில்லி தோட்டத்தில் ஒரு புத்தகத்துடன் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தபோது, மதிலுக்கு அப்பால் பாதையில் ரவி நடந்து போவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.‘

"ரவி..." அவள் சத்தம் போட்டு அழைத்தாள். வீட்டிற்க வெளியே வேறு யாரும் இல்லை. அவள் ஓடி, கேட்டைத் திறந்து தெருவை நோக்கி ஓடினாள். ரவி புள்ளிகள் போட்ட ஒரு தவிட்டு நிற சட்டையையும் காக்கி நிறத்தில் பேன்ட்டையும் அணிந்திருந்தான். அவனுடைய அந்த தோற்றத்தையும், மிகவும் பழக்கமான அந்த வேகமான நடையையும் பார்க்கும்போது, அவளுடைய தொண்டையில் ஒரு தேம்பல் சத்தம் உண்டானது.

"ரவி... நில்லுங்க.." அவள் அழைத்துச் சொன்னாள்: "தயவு செய்து கொஞ்சம் நில்லுங்க. நான் பார்க்கணும்."

அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான்.

அவள் தெருவில் ஓடிச்சென்று, அவனுக்கு முன்னால் போய் நின்று மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு சொன்னாள்: "ரவி, கொஞ்சமாவது இரக்கம் வைத்து நில்லுங்க. எனக்கு கொஞ்சம் பார்க்கணும்னு எந்த அளவிற்கு ஆசை இருக்கிறது தெரியுமா?"

ரவி எதுவும் பேசவில்லை. அவன் சிரிக்கவும் இல்லை.

அவள் கேட்டாள்: "ரவி, என் மீது கோபமாக இருக்கிறீர்களா? நான் என்ன செய்வது, என் தந்தை என்னைக் கொன்று விடுவதாகக் கூறினார். அப்பா..."

"அப்பா..." ரவி கோபத்துடன் சொன்னான்: "அப்பா... அவருடைய செல்ல மகளை நான் திருடிக் கொண்டு போய்விடுவேன் என்று உன் அப்பா நினைத்து விட்டாரா? அவருடைய அனைத்து அழகுகளையும் கொண்ட அருமை மகளை? ஃபூ! எனக்கு அவருடைய பணமும் வேண்டாம். அவருடைய மகளும் வேண்டாம். 

நான் என்ன குருடனா? அப்பா? அப்பாவின் அழகான மகளும்... பலகைப் பற்களும்... துருத்திக் கொண்டிருக்கும் முழங்கால்களும்... நீக்ரோவின் நிறமும்! ப்பூ! எனக்கு உன்னைப் பார்த்து மோகம் என்று நினைத்துவிட்டாயா?"

"ஓ... ரவி..." அவன் கூறிக் கொண்டிருந்ததை நிறுத்தியவுடன், அவள் ஒரு சிலையைப் போல அசைவே இல்லாமல் நின்றுவிட்டாள். தன்னுடைய உதடுகள் எவ்வளவோ முறை அழைத்துப் பழகிய அந்தப் பெயரைக் கூறுவதற்கு சிரமமாக இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.

"நான் உங்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை.  உங்களிடமிருந்து எந்தவொரு உதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னைத் தொந்தரவு செய்யாமல் வெறுமனே விட்டால் போதும்... நாங்கள் அப்பிராணி ஏழைகள். எப்படியாவது வாழ்ந்து கொள்கிறோம்." ரவி சொன்னான்.

லில்லி அந்த தெருவின் காங்க்ரீட்டால் ஆன ஓரத்தில், அந்த தூசி படிந்த தரையில் முழங்கால்களால் நின்று கொண்டு தளர்ந்து போன குரலில் சொன்னாள்:


"மன்னிக்கணும், ரவி... நான் தவறு செய்தவள் அல்ல... அப்பா..."

"அப்பா! நான் எதையும் கேட்க விரும்பவில்லை... எழுந்து போ... இனி போ. இனிமேல் இதையெல்லாம் பார்த்து உன்னுடைய அப்பாவோ டிரைவரோ வேறு யாரோ வந்தால், நானும் என் தந்தையும் மாநிலத்தை விட்டே போக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்."

"ரவி..." அவள் அழுதுகொண்டே சொன்னாள்: "ரவி, என் மீது உங்களுக்கு கோபம் இருக்கும். ஆனால், நான் உங்களைக் காதலிக்கிறேன். என்னால் இப்படி வாழ முடியாது. என்னை எங்காவது அழைத்துக் கொண்டு செல்லுங்கள்."

ரவி அவளைப் பிடித்து எழுந்திருக்கச் செய்தான். தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் கண்களால் பார்த்துக் கொண்டே சொன்னான்:

"சாயங்காலம் ஆகிவிட்டது. சீக்கிரமா வீட்டிற்குத் திரும்பிப் போ. நான் இங்கு நிற்பது நல்லது இல்லை."

"ரவி... என்னை விட்டுப் போகாதீங்க. என்னால் இந்த வீட்டில் வாழ முடியாது. ரவி... ரவி..."

"லில்லி, நான் நாளைக்கு வர்றேன். இது சத்தியம். நான் நாளைக்கு சாயங்காலம்வர்றேன். இல்லாவிட்டால் நான் நாளை மூணு மணிக்கு விக்டோரியா மெமோரியலின் கிழக்குப் பக்க கேட்டிற்கு அருகில் வந்து நின்று கொண்டிருப்பேன். இப்போ புறப்படு..."

 

இரக்கம், அன்பு, அனுதாபம்- இவை அனைத்தும் அவர்களுக்கு இடையே இருந்தன. கைகளைப் கோர்த்துப் பிடித்துக் கொண்டு ஆட்கள் அவ்வளவாக இல்லாத தெருக்களின் வழியாகவும், மதிய வெயில் பற்றி எரிந்து கொண்டிருந்த மைதானங்களிலும் அவர்கள் நடந்து திரிந்தார்கள். அவர்கள் பணத்தைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கவே இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், உண்மையைக் கண்டடைந்த அவர்களுக்கு மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? மதங்கள் என்பவை கண்மூடித்தனமான நம்பிக்கைகள். 'நான் ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக இருப்பவன்' என்று ஒருவன் கூறுகிறான். இன்னொரு ஆள் 'நான் கிறிஸ்துவ மதத்தில் ஒரு உறுப்பினர்' என்று கூறுகிறான். வேறொரு மனிதன் கூறுகிறான், 'நான் குட்டிச்சாத்தான் உண்டு என்று நம்புபவர்கள் இருக்கும் க்ளப்பின் உறுப்பினர்' என்று. பல வகையான நம்பிக்கைகள்... அவ்வளவுதான்.

ரவி, சூரிய வெளிச்சம் வந்து விழுந்த கண்களால் அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான்:

"லில்லி... இனிமேல் நான் உன்னை எப்போதும் விட்டுப் போக மாட்டேன். இது சத்தியம்..."

"காரணம்?"

"நீ அழுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை."

"எப்போதும் விட்டுப் போக மாட்டீர்கள் அல்லவா?"

"போக மாட்டேன். எப்போதும் விட்டுப் போக மாட்டேன்."

 

ஆனால், அவர்கள் பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டானது. அவர்களுடைய சந்திப்புகளைப் பற்றி லில்லியின் தந்தை தெரிந்து கொண்டார். வீட்டில் மீண்டும் கோபமான காட்சிகள் நடந்தன. மீண்டும் அழுகைகள். இறுதியில் லில்லியின் தந்தை தன்னுடைய உலக அனுபவம் இல்லாத மகளுக்கு ஒரு திருமணத்தை முடிவு செய்தார். உரில் இருந்த ஒரு உறவினரின் மூத்த மகன். முப்பத்து இரண்டு வயது கொண்ட ஒரு டாக்டர். பார்ப்பதற்கு மோசம் இல்லை.

லில்லியின் தந்தை நண்பர்கள் கேட்டார்கள். "பொண்ணு வயதில் மிகவும் குறைவானவளாக இருக்கிறாளே! இவ்வளவு அவசரப்பட்டு எதற்குத் திருமணம் செய்ய வேண்டும்?"

"எங்களுடைய குடும்பத்தில் உள்ள எல்லாரும் மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வார்கள். நான் பதினைந்தாவது வயதில் திருமணம் செய்து கொண்டேன். லில்லிக்கு பதினாறு வயது முடிந்துவிட்டது."

அன்றிலிருந்து லில்லியின் தாய் லில்லியைக் கட்டாயப்படுத்தி புடவை அணியச் செய்தாள். வீட்டில் மலையாளரத்தில் உரையாடுவதற்கு உற்சாகப்படுத்தினாள்.

"நீ இப்படி ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொண்டு திரிந்தால், உன்னுடைய மாமியார் என்ன சொல்லுவாங்க?" அவளுடைய தாய் கேட்டாள்.

லில்லி பதில் எதுவும் கூறவில்லை. தன்னுடைய கருத்தைத் தெரிந்து கொள்ளும் ஆசை யாருக்கும் இல்லை என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். ஆனால், தலைமுடியை வாரிக் கொண்டிருந்த வேலைக்காரியிடம் ஓரிரு முறை அவள் சொன்னாள்: "எனக்கு விஷம் அருந்தி இறக்க வேண்டும் போல இருக்கு."

வேலைக்காரி மிகவும் பதைபதைப்படைந்து விட்டாள். அவள் சமையல்காரனிடம் அதைக் கூறினாள். சிறிது அழுதாள். ஆனால், சமையல்காரன் தனக்கே உரிய கிண்டல் குரலில் சொன்னான்.

"இறக்கப் போகிறாங்க! அதையெல்லாம் கேட்கவே வேண்டாம். திருமணம் நடக்க இருக்கறப்போ, பெண்கள் சாகப் போறாங்களா? திருமணம் நடக்கட்டும். அப்போ வர்ற ஆளை விடமுடியாத நிலையில் இருப்பாங்க. இதையெல்லாம் நம்புற அளவுக்கு நீ ஒரு முட்டாளா இருக்கியே...! இறக்கப் போறாங்களாம்! அதைக் கேக்குறப்பவே சிரிப்பு வருது!"

 

லில்லி ஒரு மனைவியாக ஆனாள். நாயின் கழுத்தில் பட்டையைத் தொங்க விடுவதைப் போல அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டி அடிமைத்தனத்தை சுமக்கச் செய்தார்கள். அவளையும் அழைத்துக் கொண்டு அந்தக் கணவன் தான் ப்ராக்டீஸ் செய்யும் இடத்திற்குச் சென்றான்.

அவளுடைய நடவடிக்கைகளில் ஆணவத்தின் ஒரு சிறிய அடையாளத்தைக் கூட அவன் பார்க்கவில்லை. எனினும், அவன் இடையில் அவ்வப்போது கூறினான்:

"நான் மோட்டார் கார் நிறுவனத்தின் டைரக்டர் இல்லை. ஒரு நடுத்தரமான டாக்டர் மட்டுமே. அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் கூற ஆரம்பித்தால், நான் பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்வேன்."

அவள் எதையும் கேட்கவில்லை. அந்தச் சிறிய அறைகளில் இறந்த ஒரு ஆன்மாவைப் போல எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து திரியும் அந்த இளம் பெண்ணை மனப்பூர்வமாகக் காதலிக்க அந்தக் கணவனால் முடியவில்லை. அவள் ஏன் சிரிக்கவில்லைல? அவளுக்கு தன்மீது அன்பு இல்லையோ? அவனுடைய மனதில் நூறு சந்தேகங்கள் எழுந்து கொண்டிருந்தன. ஒரு நாள் அவன் கேட்டான்: "உனக்கு இந்த திருமணத்தில் முழுமையான விருப்பம் இல்லை. அப்படித்தானே?"

"நீங்க ஏன் அப்படிக் கேட்குறீங்க?"

"நீ என்னை வெறுக்கிறாய் என்று எனக்கு சில நேரங்களில் தோன்றுகிறது."

"நான் யாரையும் வெறுக்கவில்லை."

"உன்னுடைய கண்களில் நான் ஒரு முழு கிராமத்து மனிதனாகவும் ஒரு தரித்திரனாகவும் தெரியலாம்."

"அது எதுவும் உண்மை இல்லை."

"நீ சொல்லு... சத்தியம் பண்ணிச் சொல்லு லில்லி, உனக்கு என்மீது அன்பு இல்லையா?"

அவள் அவனுடைய கண்களையே பார்த்தாள்.

தொடர்ந்து தலையைக் குலுக்க மட்டுமே செய்தாள்.

 

தன்னுடைய குறைகளை மறைப்பதற்காக மட்டுமே அவன் அவளுடைய குறைகளை வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். சமையல்காரனை வேலையை விட்டு வெளியேற்றியபோது, அவள் சமையல்காரியாக ஆனாள்.


வேலைக்காரியை வேலையை விட்டு அனுப்பியபோது, அவள் வேலைக்காரியாக ஆனாள். அவளுடைய கை நகங்களின் நுனி, முறிந்தது. இருண்டது. அவளுடைய உள்ளங்கைகள் முரட்டுத்தனமாக ஆயின. அவளுடைய அழகு குறைந்தது. எனினும், அவன் சொன்னான். ‘நீ பழைய புடவைகளைச் சுற்றிக் கொண்டு நடக்கும்போதுகூட, உனக்குள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் அந்த ஆணவத்தை என்னால் உணர முடிகிறது. நீ வெளியே கூறவில்லையென்றாலும், நீ ªன்னையும் இந்த வாழ்க்கையையும் வெறுக்கிறாய். எல்லா நிமிடங்களிலும் நான் அதைப் புரிந்து கொள்கிறேன்.’

லில்லி யாரும் பார்க்காமல் இருக்கும்போது அழுதாள். தனக்க யாருமே இல்லை என்று அவளுக்குப் பல நேரங்களிலும் தோன்றியது. ஆனால், அந்தத் திருமணமும் ஒரு தோல்வியாக இருக்கவில்லை. அவளுக்கு குழந்தைகள் உண்டானார்கள். அவர்கள் அந்த வீட்டில் சந்தோஷச் சிரிப்புகளை எழச் செய்தார்கள்.

 

முக்கியமான காரணங்கள் எதுவும் இல்லாமலே அந்த மனைவிக்கும் கணவனுக்குமிடையே வெறுப்பு வளர்ந்து வந்தது. முட்களும் நீருள்ள இலைகளும் உள்ள ஒரு கள்ளிச் செடியைப் போல, அவர்கள் அதன் வளர்ச்சியை கவனிக்காமல் இருப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால், அந்தச் செடி வளர்ந்து மரமாக ஆனது. அது அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவாக ஆனது. பந்தை உருட்டிவிட்டு விளையாடுவதற்கு மத்தியில் அல்லது ஒருவரோடொருவர் எதையாவது கூறி சிரிப்பதற்கு மத்தியில், அவர்களுடைய குழந்தைகள் அந்த மரத்தின் மூச்சு சத்தத்தைக் கேட்பார்கள். கிளைகளை கைகளைப் போல நீட்டிக் கொண்டு, அது மீண்டும் மீண்டும் வளர முயற்சிப்பதை அவர்கள் பார்ப்பார்கள். அவர்களுடைய குரல்கள் இறங்கும். சிரிப்புகள் மறையம்.

அப்படிப்பட்ட அந்த வீட்டிற்கு ஒரு நாள் லில்லியின் தாயும் தந்தையும் வந்திருந்தார்கள். அவர்களுடைய தலை முடியில் வெள்ளை நிறம் வந்து சேர்ந்திருந்தது. ஆனால், நடந்துகொள்ளும் முறைகளில் எந்தவெவரு மாறுதலும் உண்டாகியிருக்கவில்லை. முழுமையான இரக்கமற்ற மனதுடன் லில்லியின் தாய் உரையாடலக்கு மத்தியில் சொன்னாள்:

‘‘ரவி இருக்கானே! நம்முடைய ஹோமியோ டாக்டரின் மகன்... அவன் போன வருடம் இறந்துவிட்டான். மோட்டார் சைக்கிளில் ஏறி போய்க் கொண்டிருக்கிறான். ஒரு லாரி வந்து மோதிவிட்டது. இப்போது டாக்டர் தனி ஆளாகிவிட்டார்.’’

‘‘அம்மா, நீங்க இந்தப் பொய்யைக் கூறி இருக்க வேண்டியதில்லை.’’ லில்லி சொன்னாள். அவளுடைய குரலில் நடுக்கம் இருந்தது.

‘‘எது பொய்?’’

‘‘ரவி இறந்துவிட்டார் என்பது...’’

லில்லியின் தாய் அவளின் முகத்தையே பார்த்தாள். அடுத்த நிமிடம் வெளிறிப் போனாள். அவள் சொன்னாள். ‘‘நான் எவையெல்லாம் முழுமையாக இல்லாமல் போயிருக்கம் என்று நினைத்தேன். கொஞ்ச காலம் ஆகிவிட்டது அல்லவா? ஓ! லில்லி. நீ இப்போதும்...’’

‘‘ஆமாம்... இப்போதும் நான் ரவியைக் காதலிக்கிறேன். அதனால் தான் இந்தப் பொய்யைக் கூறியிருக்க வேண்டாம் என்று நான் சொன்னேன்.’’

‘‘பொய் இல்லை, லில்லி. நாங்கள் போயிருந்தோம். பாவம்... பேபியின் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். பேபி இறந்து விட்டான். அவனும் இறந்துவிட்டான். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கம் எவ்வளவு நாட்கள் வாழ்க்கை இருக்கிறது என்று யாரால் கூற முடியும்?’’

லில்லிக்க முப்பத்தைந்து வயது ஆனபோதுதான் அவன் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்து சேர்ந்தான். அதுவும் திடீரென்று அவள் சாளரத்தின் கண்ணாடிகளைத் துடைப்பதற்கு மத்தியில் தலையை உயர்த்தி தெருவின் எதிர்ப்பக்கத்திலிருந்த கட்டிடத்தைப் பார்த்தாள். ஒரு சாளரத்தின் கதவில் சாய்ந்தவாறு தனக்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் இளைஞன் யார்? லில்லி திடீரென்று அதிர்ச்சிடையந்து விட்டாள். ரவி? சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கிறது? மாநிறம், பெரிய கண்கள், சுருண்ட தலை முடி, மெலிந்த உடல்... ‘நான் எந்தக் காலத்திலும் உன்னை விட்டுப் போக மாட்டேன்’ என்று ரவி கூறினான் அல்லவா? தான் எப்படி அந்த வார்த்தைகளை மறந்தோம்? ரவி இறந்துவிட்டான் என்பதை நம்பினோமா? ரவி...

‘ரவி...’ - அவள் சொன்னாள்: ‘ரவி...’

அவன் அவளையே பார்த்தான். பிறகு எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல், சாளரத்தை விட்டு உள்ளே போய் மறைந்துவிட்டான்.

லில்லி நீண்ட நேரம் அந்த சாளரத்தின் கதவைப் பிடித்துக் கொண்டே நின்றிருந்தாள். ரவிக்கு தன்னை யாரென்று தெரியவில்லையா என்ன? அப்படி இருந்தால்கூட, ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? நான் தடிமனாக ஆகிவிட்டிருக்கிறோம் தன்னுடைய முகத்தின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக ஆகிவிட்டிருக்கிறது.

அவள் படுக்கையறைக்குள் சென்று அங்கிருந்த ஒரு சிறிய கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஆராய்ந்து பார்த்தாள். கன்னங்களின் அசாதாரணமான சிவப்பு அவளை வெட்கம் கொள்ளச் செய்தது.

 

சில நாட்களுக்குப் பிறகு மதிய வேளையில் வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் அவன் அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். அவள் தன்னைவிட வயது அதிகமான ஒரு பெண்ணாக இருக்கலாம். திருமணம் ஆனவளாக இருக்கலாம். ஆனால், அவள் தன்னுடைய முகத்தைப் பார்த்து ஏன் சிரித்தாள்? அவளைப் பார்ப்பதற்கு தான் வரலாமா என்று தான் கேட்டபோது, சைகையால் என்ன காரணத்திற்காக அவள் அனுமதி அளித்தாள்? அவள் உண்மையாகவே கெட்ட நடவடிக்கைகள் கொண்டவளாக இருக்க வேண்டும். அவனுடைய சிந்தனைகள் அந்த வாசலுக்கு அருகில் திடீரென்ற நின்றன.

‘‘என் ரவி...’’ அவள் வாசல் கதவைத் திறந்தவாறு அழைத்தாள்: ‘‘உள்ளே வாங்க.’’

 

திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டு இருட்டாக ஆக்கப்பட்டிருந்த அந்த அறையில் இருந்து கொண்டு அவன் அவளிடம் கேட்டான்: ‘‘என்ன... எதுவுமே பேசாம இருக்கிறாய்? நீ பரிதாபப்பட ஆரம்பித்து விட்டாயா?’’

அவள் படுக்கையின் இன்னொரு முனையில் நின்று கொண்டு தளர்ந்துபோன ஒரு குரலில் சொன்னாள்: ‘‘பரிதாபப்படுவதா? எந்தச் சமயத்திலும் இல்லை. ஆனால், எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது?

‘‘ஆச்சரியமா? அது எதற்கு உண்டாக வேண்டும்? நீ என்னை இங்கு வேறு என்ன காரணத்திற்காக அழைத்தாய்?’3

‘‘ரவி... அப்படிப் பேசாதீங்க.’’ அவள் சொன்னாள்: ‘‘நீங்கள் மிகவும் மாறிப்போய் விட்டீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.’’

‘‘பார்... நான் மீண்டும் ஒரு முறை சொல்லட்டுமா? நான் ரவி இல்லை. என்னுடைய பெயர் ஹலீத். போன மாதம் வரை எனக்கு உன்னை தெரியவே தெரியாது. புரியுதா? இது என் ஒரு விளையாட்டு! உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?’’

‘‘ஹலீத்தா? அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே கேட்டாள்: ‘‘என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் ரவிதான். என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்.’’

‘‘முட்டாள்... உன்னை நான் எதற்க ஏமாற்ற  வேண்டும்?’’


அவன் ஹலீத் ஆக இருந்தான். ஆனால், அவனை அவள் ரவி என்றே அழைத்தாள். அவன் இருபத்தைந்து வயதுகள் மட்டுமே ஆன ஒருவனாக இருந்தான். எனினும், அவள் அவனை வழிபட்டாள். அது ஒரு கனவு மட்டுமே என்று அவளுக்கு மெல்லிய ஒரு புரிதல் இருந்தது. எனினும், அந்தக் கனவை நம்புவதற்கு அவள் முயற்சித்துக் கொண்டேயிருந்தாள். இறுதியில், அவர்களுடைய புதிய உறவைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள். அவளுடைய கணவன் காயம்பட்ட உணர்வுடன் நீண்ட நேரம் அமர்ந்து சிந்தித்தான். தான் இவை அனைத்தையும் எதிர்பார்த்ததுதான் என்பதை இறுதியில் அவன் புரிந்து கொண்டான். அவளுடைய நடத்தை ஒரு போலித்தனம் கொண்டதாக இருந்தது. அவன் அவளிடம் சொன்னான்:

‘‘நான் இந்த பிரச்சினையை தெளிவான சிந்தனையுடன் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். இனிமேல் நாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாது. நீ உன்னுடைய தந்தையைத் தேடிப் போவதுதான் நல்லது.’’

‘‘சரி...’’

மன்னிப்பு கேட்டு கெஞ்சவில்லை. புகார்கள் இல்லை. அவன் அவளுடைய கண்களையே ஓரக்கண்களால் பார்த்தான். அவள் அழவே இல்லையே! அந்த அளவிற்கு கடுமையான இதயத்தைக் கொண்ட ஒரு பெண்ணை தான் எதற்காக விரும்பினோம்?

 

பிரியமான ஹலீத்,

நீங்கள் ரவி அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். இல்லாமலிருக்கலாம். ஆனால், ரவி முடிவடைந்துவிடவில்லை.

எனக்கு உங்கள்மீது தோன்றக் கூடிய இந்த பைத்தியக்காரத்தனமான உணர்வு- அது எது வேண்டுமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்- அழியாமல் இருகஅகம் காலம் வரை ரவி முடிவடைய மாட்டார். அவர் நமக்கப் பிறக்கப் போகும் ஆன்மாவாக இருப்பார். என்னை உங்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்த்தது அவருடைய தூண்டுதலால்தான் இருக்க வேண்டும். காரணம்- அவர் என்னிடம் மட்டுமே வாழ்வார். என்னுடைய சேர்ந்தே இறக்கவும் செய்வார். நான் ரவி. அல்லது ரவிதான் நான். எனக்குள் இருக்கும் நரம்புகளில் ஓடும் ரத்த ஆறுகளில் ஆணவம் கொண்ட ஒரு கடவுளைப் போல அவர் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் என்னுடன் சேர்ந்தபோது, அவர் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நிரந்தரமானவராக ஆகிவிட்டார். நம்மிடம் உண்டான தப்பு என்ன என்பது உங்களுக்குப் புரிகிறதா, ஹலீத்? நாம் வெறும் விளையாட்டு பொம்மைகளாக இருந்தோம். அவர்தான் சந்தோஷச் சிரிப்புடன் கயிறுகளை இழுத்து நம்மை செயல்பட வைத்தார்.

வடிவமற்ற சிந்தனைகளால் களங்கம் உண்டான ஒரு அன்பு கலந்த உறவை நீங்கள் தேடவில்லை. ஒன்று, இரண்டாக ஆவது; மீண்டும் அது ஒன்றாக ஆவது. எவ்வளவோ சாதாரணமான இந்தச் செயலின் இறுதியில், பொறுப்புகள் எதுவும் இல்லாமல், அவமான உணர்வு எதுவும் இல்லாமல், நீங்கள் எழுந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டாம். என்னுடைய சிந்தனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டாம். நீங்கள் எந்தச் சமயத்திலும் எனக்கு அன்பையோ இரக்கத்தையோ அளித்ததில்லை. அளிக்கப் போவதும் இல்லை. எனக்கு அருகில் இருக்கும்போது நீங்கள் எப்போதும் வெறும் கடுமையான மனிதராகவே இருந்திருக்கிறீர்கள். கலப்படமே இல்லாத கடுமை. நம்மைச் சுற்றி, அன்பு கலந்த சொற்கள் வெளிப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் கூட நான் மரங்களின் கடுமையான நிழல்களை மட்டுமே பார்த்தேன். காட்டு உயிரினங்களின் கர்ஜனைகளை மட்டுமே கேட்டேன். உங்களை அவருக்குத் தேவையில்லை. எனக்குள்ளே இருந்து கொண்டு தைரியம் முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. எனினும், நான் மதிப்பை விட்டெறிந்து விட்டேன். நீங்கள் ரவி இல்லை என்ற விஜயத்தைத் தெரிந்துகொண்ட பிறகும், உங்கள் மீது அன்பு வைத்தேன்.

கடிதம் எழுதுவதுகூட தேவையற்ற ஒன்றுதான். நீங்கள் கூறுவதைப் போல இன்னொரு பைத்தியக்காரத்தனமான செயல். ஆனால், நான் புறப்படுகிறேன். வழி தவறிப் போய்விட்ட ஒர பெண்ணை எந்தக் கணவன்தான் தூக்கி எறியாமல் இருப்பான்? என்னை மன்னிக்க வேண்டும்- எல்லா வகையான தவறுகளுக்கும்.

சொந்தம்,

லில்லி!

 

வண்டி நகர ஆரம்பித்தபோது, பதினெட்டு வயதான அந்த மகன் தன் தாயிடம் சொன்னான்: ‘‘அம்மா, நீங்க இப்படி நடந்து கொள்வீர்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என்னால் தலையை உயர்த்தி வைத்துக் கொண்டு நடக்க முடியவில்லை.’’

லில்லி எதுவும் கூறாமல், வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கூந்தலில் இங்குமங்குமாக இருந்த ஒன்றோ இரண்டோ வெள்ளை முடிகளைப் பார்த்துக் கொண்டே மகன் மீண்டும் தொடர்ந்து சொன்னான்:

‘‘அம்மா, நீங்கள் குறிப்பாக இந்த வயதில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வீர்கள் என்று... ஓ... எனக்கு நினைத்துப் பார்க்கும் போதே பைத்தியம் பிடிக்கிறது. அப்பாவை எதற்கு குறை சொல்ல வேண்டும்? இந்த அவமானத்தை அப்பாவால் தாங்கிக் கொள்ள முடியுமா?’’

‘‘நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை.’’ அவள் சொன்னாள்.

‘‘பரிதாபப்படவும் இல்லை. அப்படித்தானே?’’

அவனுடைய குரல் மிகவும் ஆண்மைத்தனம் நிறைந்ததாக இருந்தது. அவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கே லில்லியால் முபபியவில்லை. அவள் வெளியே, வேகவேகமாக மறைந்து போய்க் கொண்டிருந்த நெல் வயல்களையே பார்த்துக கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

‘‘அதுவும் ஒரு முஸ்லீம்! என்னைவிட சற்று மட்டுமே வயதில் அதிகமான ஓர் இளைஞன்... ஓ... அம்மா நீங்கள் இதைச் செய்திருக்கக் கூடாது. எனக்கு எவ்வளவு சிந்தித்துப் பார்தத்லும், ஒரு காரணமும் கிடைக்கவில்லை. உங்களுக்கு அனைத்தும் இருந்தன அல்லவா? எந்தவொன்றுக்கும் குறைவே இருந்ததில்லை. எனினும் ஒர சாதாரணப் பெண்ணைப் போல...’’

தன் தாயின் கண்கள் ஈரமாவதைப் பார்த்ததும், அவன் அமைதியாக இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான்.

 

வண்டி கல்கத்தாவை அடைந்தபோது, நேரம் இருட்டி விட்டிருந்தது. மகன் திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்து சிவப்பு சட்டை அணிந்திருந்த சுமை தூக்கும் மனிதரிடம் சைகை காட்டினான்.

‘அம்மா!’ - அவன் அழைத்தான்: ‘கல்கத்தா வந்துவிட்டது.’

அந்த அறையில் அவனுடைய தாய் இல்லை. அவன் குளியலறையைப் பார்த்தான். அம்மா எங்கு போய் மறைந்து விட்டாள்? தான் கூறிய வார்த்தைகளுக்கு சற்று கடுமை அதிகமாகிவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது.

‘‘அம்மாவைக் காணோம். என் அம்மாவைக் காணோம்.’’ அவன் சொன்னான்.

அடர்த்தியான நீலநிற பேண்ட் அணிந்த ஒரு இளைஞன் அந்த அறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னான்: ‘‘உன் அம்மாவை எங்கே?’’

ஹலீதைப் பார்த்ததும், லில்லியின் மகனின் உதடுகள் துடித்தன. அவன் சொன்னான்:

‘‘என் அம்மாவைக் காணோம்.’’

‘‘எங்கே காணாமல் போனாள்?’’


‘‘நான் தேநீருக்குப் பிறகு உறங்கிவிட்டேன். இப்போதான் கண் விழித்தேன். அம்மாவும் தூங்குவதற்காகப் படுத்தாங்க.’’

‘‘நான் அவள் புறப்பட்ட பிறகுதான் விஷயத்தையே தெரிந்து கொண்டேன். எனினும், நான் விமானத்தில் நேற்று இரவே இங்கே வந்து விட்டேன். நான் அவளை என்னுடன் அழைத்துக் கொண்டு போவது என்று தீர்மானித்தேன். ஒதுக்கி வைக்கப்பட்டவளாக அவளுடைய தந்தையையும் தாயையும் தேடி அவள் திரும்பி வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு பொறுப்பற்றவனாக இருக்கலாம். ஆனால், மனிதன் அல்லவா? இப்போது அவள் எங்கே போயிருப்பாள்?’’

‘‘அம்மா ஏதாவது செய்யக் கூடாததைச் செய்திருப்பார்களோ? தற்கொலை...’’

‘‘இல்லை... அவள் அதைச் செய்ய மாட்டாள். மாநிறமும் சுருண்ட முடியையும் கொண்ட அந்தக் குழந்தை பிறந்து, அவனை வளர்க்க வேண்டும் என்ற ஆசையுடன் அவள் இருந்தாள். அந்த விஷயம் எனக்குத் தெரியும்.’’

தன்னுடைய மனதில் அதுவரை இருந்த பகையும் வெறுப்பும் எந்தவொரு காரணமும் இல்லாமலே விலகிச் செல்வதைப் போல உணர்ந்த அந்தப் பையன் ஹலீதிற்கு அருகில் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு கேட்டான்:

‘‘அம்மா உயிருடன் இருப்பாங்க இல்லையா?’’

‘‘ம்... மகனே நாம் அவளைக் கண்டுபிடிப்போம். அவளைக் கண்டுபிடித்து என்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போன பிறகுதான் எனக்கு இனிமேல் ஓய்வே இருக்கும். காரணம்- உயிரைவிட அதிகமாக அவள்மீது அன்பு வைத்திருக்கிறேன். அவளுக்குக்கூட இது தெரியாது. நான் என்னுடைய ரகசியத்தை உன்னிடம் கூறுகிறேன். நான் அவளைக் காதலிக்கிறேன். வள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. உனக்கு இதெல்லாம் புரியாது. நீ எவ்வளவு சிறிய ஒரு பையன்...!’’

பதினெட்டு வயது கடந்தும், அழுகையையும் சிரிப்பையும் தேவையான இடத்தில் கட்டுப்படுத்த படித்திராத அந்தப் பையன் ஹலீதின் கையை திடீரென்ற எடுத்து அன்புடன் அழுத்தினான். இந்த உலகத்தில், பாவம் என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் குறைந்த ஒரு பொருளாக இருக்கிறது என்ற உண்மை அப்போது அவனுக்குப் புரிந்தது.

ப்ளாட்ஃபார்மில் இருந்த மஞ்சள் நிற விளக்குகளைச் சுற்றி மண்ணின் வாசனையைக் கொண்ட மழைப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.