
ஒரு சந்தோஷமான
வாழ்க்கை என்பது
மனதின்
அமைதித்தன்மையைப்
பொறுத்தது.
***
எவன் ஒருவன்
பொறுமைசாலியாக
இருக்கிறானோ, அவன்
தான் நினைத்ததை
கட்டாயம் அடைவான்.
***
கிரீடங்களை விட
கனிந்த இதயங்கள்
மேலானவை.
***
நீ உன்னுடைய
நண்பனுக்கு பணம் தந்து
உதவ முடியாமற் போகும்பட்சம்,
ஒரு ஆறுதல்
வார்த்தையைக் கூறி
அவனுக்கு உதவலாம்.
***
உனக்கு
நிழல் தரும்
மரத்திற்கு
மரியாதை கொடு.
***
கற்றுக் கொள்வதற்கு
விருப்பமில்லாமல்
இருப்பதை விட,
அறியாமை
கொண்டவனாக இருப்பது
வெட்கப் படக் கூடிய
செயல் அல்ல.
***
நம்மிடம் இருக்கும்
சந்தோஷத்தைப்
பிறருடன் பங்கிட்டுக்
கொள்ளும்போது,
அந்த சந்தோஷமே
இரண்டு மடங்குகளாக
பெருகுகிறது.
***
நாமும் வாழ்ந்து,
பிறரையும் வாழ
வைப்பதுதான்
பொதுவான சட்டத்தின்
அடிப்படை.
***
அறிவு என்பது
சிறகைப் போன்றது.
அந்த சிறகைக் கொண்டு
நாம் சொர்க்கத்திற்கே
பறந்து செல்லலாம்.
***
ஒருவன் என்றைக்கு
சிரிக்காமலே
இருக்கிறானோ,
அந்த நாள் தொலைந்து
போன நாளே.
***
எவன் ஏழைகளுக்கு
கடன் தருகிறானோ,
அவனுக்கு
கடவுளிடமிருந்து
வட்டி கிடைக்கும்.
***
வாழ்வின் ரகசியம் என்பது -
நீ என்ன நினைக்கிறாயோ,
அதை செய்யாமல்
இருப்பது அல்ல.
எதை செய்யப் போகிறாயோ,
அதை விரும்புவதுதான்.
***
அதிர்ஷ்டத்தின்
விளையாட்டுதான்
ஒரு மனிதனின்
வாழ்க்கை.
***
மனித வாழ்க்கை மீது
ஆண் கொள்ளும் விருப்பம்
ஒரு பகுதியாக இருக்கலாம்.
ஆனால், முழு இருத்தலுமே
பெண்ணுக்கு
அதில்தான் இருக்கிறது.
***
பழக்க, வழக்கங்களும்
சம்பிரதாயங்களும்
வேறுபடலாம்.
ஆனால், மனிதனின்
இயற்கை குணம் ஒன்றுதான்.
***
கடவுள்
எவற்றையெல்லாம்
ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ,
அதை மனிதன்
பிரிக்காமல் இருக்க வேண்டும்.
***
ஒரு மனிதன்
ஒரு பெண்ணை காதலிக்க,
ஒரு பெண் ஒரு ஆணைக் காதலிக்க -
அப்போது சொர்க்கத்திலிருந்து
தேவதைகள் புறப்பட்டு வந்து
அவர்கள் இருக்கும் வீட்டில் அமர்ந்து,
அவர்களின் சந்தோஷத்திற்காக பாடுவார்கள்.
***
பிறரின் வீழ்ச்சியிலிருந்து,
நீ தவிர்க்க வேண்டிய
பாவங்கள் என்ன என்பதைக்
கற்றுக் கொள்.
***
இது காலி பர்ஸ்தான்.
ஏனென்றால்,
இது முழுக்க
மற்ற மனிதர்களின்
பணம்தான் இருக்கிறது.
***
கடவுள்
எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது.
அதனால்தான் அவர்
அன்னைமார்களைப் படைத்தார்.
***
யார் தங்களின் கருத்துக்களை
எந்த சமயத்திலும்
திருத்திக் கொள்ளாமல்
இருக்கிறார்களோ,
அவர்கள் உண்மையின் மீது
கொள்ளும் விருப்பத்தை விட,
தங்களின் மீது
வைத்திருக்கும் விருப்பம்
அதிகமானது.
***
நம்முடைய மிகப் பெரிய சந்தோஷம் -
வாய்ப்பு நம்மை எப்படிப்பட்ட
வாழ்க்கையை வாழ
செய்திருக்கிறது என்பதில் இல்லை.
அதற்கு மாறாக, நல்ல
மனச்சாட்சியின் விளைவு,
நல்ல உடல் நலம், தொழில்,
ஈடுபடும் எல்லா
முயற்சிகளிலும் இருக்கக் கூடிய
முழுமையான சுதந்திரம்...
இவற்றில்தான் இருக்கிறது.
***
மனித இனத்திற்கு
பயனுள்ளவனாக இரு.
அதன்மூலம்
மனித உயிர்களின் மீது
அன்பு செலுத்துவதைப் பற்றி
தெரிந்து கொள்வாய்.
***
செயல்படாமல் இருப்பது
சிறிய ஆசைகளைக்
குறைத்து,
பெரிய ஆசைகளை
அதிகரிக்கச் செய்யும்.
***
சிந்திக்க தெரியாதவர்களுக்கு
கேளிக்கைதான்
சந்தோஷத்தை
அளிக்கக் கூடிய விஷயம்.
***
பகுத்தறிவு வாதிகளுக்கும்
மூடத்தனங்களுக்குமிடையே
சாத்தான்
உலகைப் பிரித்து
வைத்திருக்கிறது.
***
ஒவ்வொரு பேரத்தையும்
தெளிவாகவும் வெளிப்படையாகவும்
செய்யுங்கள்.
அப்படியென்றால்தான்,
பின்னர் யாரும் குறை கூறாமல் இருப்பார்கள்.
***
ஒரு மனிதனின்
செழிப்பான வாழ்வின்
இறுதியில்தான்,
நாம்
அவன் சந்தோஷமாக
இருப்பதாக கூறுவோம்.
***
நாம் எவற்றையெல்லாம்
வெறுக்கிறோமோ,
அதற்குக் கீழே நம்மை
பலமான வெறுப்பு நசுங்கிக்
கிடக்கும்படி செய்து விடும்.
***
இயற்கை, நேரம், பொறுமை -
இவை மூன்றுதான்
மிகச் சிறந்த மருத்துவர்கள்.
***
எல்லா விஷயங்களிலும்
அழகு என்ற ஒன்று இருக்கிறது.
ஆனால், எல்லோருமே
அதை பார்ப்பதில்லை.
***
ஒரு கழுகு
ஒரு புறாவை
அழிப்பது, புகழுக்குரிய
விஷயமல்ல.
***
எவன் தன்னைத்தானே
மிகவும் பெரிதாக
நினைத்துக் கொண்டிருக்கிறானோ,
அவன் தாழ்த்தப்படக் கூடியவன்.
எவன் தன்னைத் தானே
அடக்கமாக நினைத்துக்
கொண்டிருக்கிறானோ,
அவன் உயர்த்தப்படக் கூடியவன்.
***
ஒரு காயத்தை
உண்டாக்குவதை விட,
அதை பெற்றுக் கொள்வது
நல்லது.
***
பீப்பாயை வைத்து
ஒயினைப் பற்றி
நீ முடிவு செய்து
விட முடியாது.
***
ஒருவன் கற்க வேண்டிய
விஷயங்களை ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, எந்த மனிதனும்
புத்திசாலி இல்லை.
***
ஒரு பவுண்ட்
சட்டத்திற்கு நிகரானது
ஒரு பென்னி எடையைக்
கொண்ட அன்பு.
***
யார் சுதந்திரத்தை
விரும்புகிறார்களோ,
அவர்களுக்குத்தான்
கடவுள் சுதந்திரத்தை
அளிக்கிறார்.
***
ஒரு நீண்ட வாழ்க்கை
சிறந்ததாக இல்லாமல்
இருக்கலாம். ஆனால்,
ஒரு சிறந்த வாழ்க்கை
நீண்டு நிற்கக் கூடியது.
***
வெறுப்பு இருக்கும் இடத்தில்
ஒரு எருமையைக்
கொன்று வைக்கப்படும்
விருந்தை விட,
அன்பு இருக்கும் இடத்தில்
காய்கறிளை வைத்து
நடத்தப்படும் விருந்து
உயர்வானது.
***
மனித இதயத்திலேயே
புனிதமான விஷயம்
உண்மையாக இருப்பதுதான்.
***
ஒரு மனிதன் எப்படி நடந்து
கொள்ள வேண்டுமோ,
அப்படி நடப்பவன்தான்
மனிதன்.
***
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன.
***
ஒரு வீட்டின்
தலைவர்தான்
தன்னுடைய வீட்டிற்கு
மரியாதையைக்
கொண்டு வர வேண்டும்.
வீடு, அதன்
உரிமையாளருக்கு அல்ல.
***
மனம்தான்
புனிதமானதாக
இருக்க வேண்டும்.
குருதி அல்ல.
***
ஒரு கஞ்சனிடம்
எது இல்லாமல் இருக்கிறதோ,
அதைவிட
எது அவனிடம் இருக்கிறதோ -
அதுவே அவனுக்கு
உதவப் போவது இல்லை.
***
தாங்கள் பார்த்திராத
ஒன்றின் மீது யார்
இன்னும் நம்பிக்கையுடன்
இருக்கிறார்களோ,
அவர்கள்
ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.
***
தன்னுடைய
குழந்தை அழும்போது,
ஒரு தாய் நடனத்திற்கான
இசையைக் கேட்க மாட்டாள்.
***
மிகவும் கொடூரம்
நிறைந்த அரக்கனின்
மனதில் அமைதியை
உண்டாக்கக் கூடிய
வசீகர தன்மைகள்
இசைக்கு இருக்கிறது.
***
எவன் ஆட்சி
செய்யப் படுவானோ,
அவனைத் தவிர
வேறு யாரும்
ஆட்சி செய்ய முடியாது.
***
கடவுள் தன்னுடைய
சொர்க்கத்தில் இருக்கிறார்.
உலகில்
உள்ள அனைத்தும்
ஒழுங்காக இருக்கின்றன.
***
குழந்தையின் எதிர்கால விதி
எப்போதும்
ஒரு தாயின் செயலில்தான்
இருக்கிறது.
***
சுதந்திரமாக
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
கடலை விட,
சர்வாதிகாரத் தன்மையில்
நிலவும்
அமைதியைத்தான்
பிடிவாதக்கார மனிதர்கள்
விரும்புவார்கள்.
***
வாழ்க்கைக்கு நாம்
ஒரு புதிய விதியை
உண்டாக்குவோம்.
எந்த அளவிற்கு தேவையோ,
அதைவிட சற்று
அதிகமான அன்புடன்
எப்போதும் இருப்பதே அது.
***
எந்தச் சந்தையிலும்,
நூறு முனகல்களுக்கு
நிகரானது ஒரு சிரிப்பு.
***
சந்தோஷத்திற்கான
எல்லா வாய்ப்புகளையும்
இயற்கை உருவாக்கித் தருகின்றது.
ஆனால், அதை எப்படி
பயன்படுத்திக் கொள்வது
என்ற விஷயம்
அவர்களுக்கு தெரிய வேண்டும்.
***
ஒரு மனிதன்
எந்த அளவிற்கு
காயமுற்றானோ,
அந்த அளவிற்கு எளிதில்
அவன் குணமடைந்து விட
முடியாது.
***
எங்கு உங்களின்
பொக்கிஷம் இருக்கிறதோ,
அங்குதான் உங்களின்
இதயம் இருக்கும்.
***
எங்கோ தூரத்தில்
மாமிசத்தை வறுப்பதை விட,
வீட்டில் ரொட்டியை
காய வைப்பது மேலானது.
***
காலை உணவிற்கு
முந்தைய ஒரு மணி நேரம்,
எஞ்சிய நாளின்
இரண்டு மடங்கிற்கு நிகரானது.
***
அறிவே இல்லாத
ஒரு மனிதன்
இறந்து போன
மனிதனுக்கு ஒப்பானவன்.
***
இப்போதைய இனிய
சந்தோஷங்களை
கவலைகள்
நினைத்துப் பார்க்கும்.
***
உன்னுடைய
கஞ்சியை ஆற
வைப்பதற்கு
உன் மூச்சை வைத்திரு.
***
யார்
அறிவிற்காக தாகத்துடன்
இருக்கிறார்களோ,
அவர்களுக்கு அது கிடைக்கும்.
***
ஒரு மனிதன்
இதயத்தில் என்ன
எழுதப் பட்டிருக்கிறதோ,
அதைக் கொண்ட அவனுக்கான
சட்டம் பற்றிய நூல்
எங்கே இருக்கிறது?
***
ஏமாற்றுக்காரர்கள்
பிறரின் மீது ஆதிக்கம்
செலுத்துவதில் ஆரம்பித்து,
தங்களைத் தாங்களே
ஏமாற்றிக் கொள்வதில்
முடிக்கிறார்கள்.
***
நம் வாழ்வின்
வலையே
நல்லது, கெட்டது
எல்லாம் கலந்த
நூல்களால் ஆனதுதான்.
***
அன்பில்
பயம் என்பதே இல்லை.
ஆனால்,
உண்மையான அன்பு
பயத்தை
விரட்டியடித்து விடும்.
***
பெரும்பாலானவர்களின்
கருத்துதான், எது சரி
என்பதற்கான இறுதி முடிவு அல்ல.
***
ஒரு மனிதன்
தன்னைத் தானே
எந்த அளவிற்கு எடை போட்டு
வைத்திருக்கிறானோ,
அதற்கேற்றபடிதான்
அவன் மதிப்பிடப் படுகிறான்.
***
ஒவ்வொரு மனிதனும்
ஒரு முதலாளியும்,
ஒரு வேலைக்காரனும்....
இரண்டுமேதான்.
***
ஒரு கவலையில் இருக்கும் மனிதன்
எவ்வளவு நாட்கள் வாழ்கிறானோ,
அவ்வளவு நாட்கள்
ஒரு சந்தோஷத்தில் திளைக்கும்
மனிதனும் வாழ்கிறான்.
***
அவசரத்தால்தான்
தவறுகள் உண்டாகின்றன.
எதையும் நிதானமாக
செய்வதன் மூலம்
எந்த சமயத்திலும்
அது உண்டாவதில்லை.
***
பணம் தன்னுடைய
வேலைக்காரனாக
இல்லையென்றால்.
அது உன்னுடைய
முதலாளியாக இருக்கும்.
***
காதால் கேட்கும் பாடல்கள்
இனியனவாக இருக்கலாம்.
ஆனால்,
இன்னும் கேட்காமல் இருப்பவை,
கேட்ட பாடல்களை விட
மிகவும் இனிமையானவை.
***
பிறரை வேதனைப்பட
செய்யாதீர்கள்.
அதே போல
மற்றவர்களிடமிருந்து
வேதனைகளை
வாங்கவும் செய்யாதீர்கள்.
***
என்ன காரணத்திற்காக என்று
உனக்கு தெரியாமல் இருக்கும் பட்சம்,
நீ ஒரு மனிதனைப் பற்றி கேவலமாக
எந்த சமயத்திலும் பேசாதே.
அது ஒரு காரணத்திற்காகத்தான் என்று
உனக்கு தெரியும் பட்சம்,
உனக்குள் நீயே கேட்டுக் கொள்:
'நான் ஏன் இதை கூற வேண்டும்?'
***
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில்
மிருகத்தனமாக நடந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஒரு கெட்ட மனிதனுக்கும், ஒரு நல்ல மனிதனுக்குமிடையே
உள்ள வித்தியாசமே - அதை தேர்ந்தெடுப்பதற்கான
காரணத்தில்தான் இருக்கிறது.
***
இந்த வாழ்வின் பெரும்பாலான
நிழல்கள் நம்முடைய சொந்த சூரியோதயத்தில்
நிற்பதால் உண்டாகுபவைதான்.
***
ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட
ஒரு அழகான பெண்ணின் முனகள்
சத்தம் நீண்ட தூரம் கேட்கும்.
***
மேல் நாட்டு தத்துவ ஞானிகள் கூறுவார்கள்:
'நான் எதை கொடுத்தேனோ, அதை வைத்திருந்தேன்.
நான் எதை செலவழித்தேனோ, அதை வைத்திருந்தேன்.
எதை வைத்திருந்தேனோ, அதை இழந்து விட்டேன்.’
***
ஒரு சூரியனை நோக்கி சுடுபவன்,
ஒரு மரத்தை நோக்கி சுடுபவனை விட
உயரமாக சுடுவான்.
***
எது அழகாக இருக்கிறதோ,
அது நல்லது. அதே போல
எது நல்லதாக இருக்கிறதோ,
அது மிக விரைவில்
அழகானதாக ஆகி விடும்.
***
எந்தவொரு மனிதனும்
அவன் தன் மனதில்
நினைத்துக் கொண்டிருக்கும்
அளவிற்கு எந்த சமயத்திலும்
மிகவும் சந்தோஷமான மனிதனாகவோ,
மிகவும் கவலைகள் நிறைந்த
மனிதனாகவோ இருக்க முடியாது.
***
ஒரு பரந்த மனம் எப்போதும்
போவதற்கு தயாராக இருக்கும்.
அதற்கு எந்தவொரு
ஆயத்தமும் தேவையில்லை.
***
நல்ல நிலையில் இருக்கும்
நாய்க்கு உதவுவதைவிட,
நொண்டியாக இருக்கும் நாய்க்கு
எப்போதும் உதவுங்கள்.
***
மரியாதைக்குரிய இடத்தில்
இருக்கும் மனிதர்களுக்கு
ஒரு சொல் என்பது
ஒரு விலங்கைப் போன்றது.
***
அன்பு இல்லாத இடத்தில்
உண்மையான புனிதத்தன்மைக்கு
இடமே இல்லை.
***
உண்மைக்கு மிகவும் அருகில்
வரக்கூடிய ஒரு நகைச்சுவை,
ஒரு அடையாளத்தை பின்னால்
விட்டு விட்டே செல்கிறது.
***
நாம் எல்லோருமே
பாவச் செயல்கள்
செய்திருப்பவர்கள்தாம்.
தீர்ப்பு கூறுவதில்
அவசரப் படாதீர்கள்.
***
எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்
என்பதை யார் தெரிந்து
வைத்திருக்கிறார்களோ,
அவர்கள் தேவையான அளவிற்கு
தெரிந்து வைத்திருப்பவர்களே.
***
ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ,
அதே மாதிரியே இறப்பான்.
ஒரு மரம் எப்படி கீழே விழுகிறதோ,
அப்படித்தான் அது கிடக்கும்.
***
உங்களுடைய கடிதங்களையே
திரும்பத் திரும்ப படித்துக்
கொண்டிருக்காதீர்கள்.
***
மலை முஹம்மதுவைத் தேடி
வரவில்லையென்றால்,
முஹம்மது கட்டாயம் மலையைத்
தேடிச் செல்ல வேண்டும்.
***
ஒரு தியாகியை
உருவாக்குவது மரணமல்ல –
அதற்கான காரணம்தான்.
***
குணமாவதில்
பெரும் பங்கு வகிப்பது
குணமாக வேண்டும்
என்ற விருப்பம்தான்.
***
கடவுள்களின் அரவை இயந்திரங்கள்
மெதுவாகத்தான் அரைக்கும்.
ஆனால், அவை மிகவும்
சிறப்பாக அரைக்கும்.
***
எந்த மனிதனும் ஒரு தவறை
செய்யத்தான் செய்வான்.
ஆனால், ஒரு முட்டாளைத் தவிர
வேறு யாரும் அதிலேயே வாழ்ந்து
கொண்டிருக்க மாட்டார்கள்.
***
உன்னால் ஒரு மலையை அளக்க
முடியவில்லையென்றால்,
ஒரு சமவெளியை உன்னால்
பார்க்கவே முடியாது.
***
இயற்கை ஒன்றையும்
அறிவு இன்னொன்றையும்
எந்த சமயத்திலும் கூறுவதில்லை.
***
மனிதர்களின் செயல்களில்
ஒரு அலை இருக்கிறது.
அந்த அலை, வெள்ளத்தின் மூலம்
அதிர்ஷ்டத்தை நோக்கி செல்லும்.
***
கடவுள் அன்பின் வடிவத்தில் இருக்கிறார்.
ஒரு கணவன் மற்றும் மனைவியின் அன்பு
நம்மை உண்மைத் தன்மை
நிறைந்த இதயத்திற்கு அருகிலும்,
அறிவு கடவுளிடமும் வேறு
எந்த அனுபவத்தையும் விட,
கொண்டு செல்கிறது.
***
எங்கு எழுத்துக்கள் சுதந்திரமாக
இருக்கின்றனவோ,
ஒவ்வொரு மனிதனும்
எங்கு படிக்க முடிகிறதோ,
அங்கு எல்லாமே நல்ல நிலையில்
இருப்பதாகத்தான் அர்த்தம்.
***
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்,
நல்ல உடல் நலம் இருக்க வேண்டும்...
மோசமான ஞாபக சக்தி இருக்க வேண்டும்.
***
ஒரு செயல் சிறப்பான முறையில்
நடைபெற வேண்டுமென்றால்,
ஒரு நூறு கெட்ட செயல்கள்
மறக்கப்பட வேண்டும்.
***
இளம் தோள்களில் வயதான
தலைகளைப் பொருத்துவது
மிகவும் சிரமமான விஷயம்.
***
தன்னுடைய நல்ல எதிர்காலத்தைத்
தெரிந்து வைத்திருப்பவன்,
சந்தோஷமானவனாக இருப்பான்.
***
எவன் சந்தோஷங்கள் நிறைந்த
இதயத்தைக் கொண்டிருக்கிறானோ,
அவன் தொடர்ந்து விருந்து உண்பதற்கு
நிகரானவனாக இருப்பான்.
***
ஒரு பணம் நிறைந்த பர்ஸை விட
ஒரு சந்தோஷம் நிறைந்த
இதயம் மேலானது.
***
விருந்தாளிகளை சந்தோஷப்படுத்துவதை
மறந்து விடாதீர்கள். அதன் மூலம்
தங்களுக்கே தெரியாமல் சிலர்,
தேவதைகளை சந்தோஷப்படுத்தி
இருக்கலாம்.
***
ஒரு கடனை விட,
அன்பு அதிகமாக
பிணைக்கக் கூடியது.
***
ஒரு நல்ல சிரிப்பு ஒரு வீட்டின்
சூரியோதயமாக இருக்கிறது.
***
கேள்விகளைக் கேட்பதன் மூலம்
ஒரு மனிதன் நிறைய
கற்றுக் கொள்ள முடியும்.
***
கூர்ந்து கவனிப்பதற்கான
அருளை எங்களுக்குத் தா.
***
நீ அன்பு செலுத்தப்பட
வேண்டுமென்றால்,
நீ அன்பு நிறைந்தவனாகவும்,
அன்பு செலுத்துபவனாகவும் இரு.
***
மேலான நிலையில் இருக்கும்
மனிதன் தேடுவது
அவனுக்குள் இருக்கிறது.
சாதாரண மனிதன் தேடுவது
மற்றவர்களிடம் இருக்கிறது.
***
நிமிடங்கள் விஷயத்தில்
மிகவும் கவனமாக இருங்கள்.
மணிகள் தங்களைத் தாங்களே
பார்த்துக் கொள்ளும்.
***
எவன் மற்றவர்களுக்கு
தீங்கு செய்ய நினைக்கின்றானோ,
அவன் தனக்குத் தானே
அழிவைத் தேடிக் கொள்கிறான்.
***
நினைவுச் சின்னங்கள்
மிக உயர்ந்தவைதாம்.
நம் வாழ்க்கைகள் தகுதி
உடையவையாக இருக்கும் பட்சம்,
நம் நினைவுகளில் அவை இருக்கும்.
***
விருந்து வைத்திருக்கும்
வீட்டிற்குச் செல்வதை விட,
துக்க வீட்டிற்குச் செல்வது சிறந்தது.
***
நம் நண்பர்கள் இல்லாமல்
நாம் உயிர் வாழ்ந்து விட முடியும்.
ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்கள்
இல்லாமல் நாம் வாழ முடியாது.
***
அமைதிக்குப் பதிலாக போரைத் தேர்ந்தெடுக்கும்
அளவிற்கு யாரும் முட்டாள் அல்ல.
அமைதித் தன்மையின்போது,
மகன்கள் தந்தைகளைப் புதைக்கிறார்கள்.
ஆனால், போரில் தந்தைகள்,
மகன்களைப் புதைக்கிறார்கள்.
***
எந்த மனிதன் தான் தீர்மானிப்பதற்கு
முன்பு எதுவுமே தெளிவாக
இருக்க வேண்டும் என்று
கட்டாயம் நினைக்கின்றானோ,
அவன் எந்தச் சமயத்திலும்
தீர்மானிக்கவே மாட்டான்.
வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வருத்தங்களையும் கட்டாயம்
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
***
அதிகமான அளவில்
அதிகமான சந்தோஷத்தை
அளிக்கக் கூடிய செயல் எதுவோ,
அந்த செயல் மிக சிறந்த ஒன்றே.
***
ஒரு குருவியின் இளமையை விட
கழுகின் முதுமை உயர்ந்தது.
***
பொது அறிவு, வெளிப்படையான
செயலாற்றும் போக்கு –
இவைதான் மனிதர்களை வியப்படைய
வைக்கும் விஷயங்கள்.
***
ஒரு மென்மையான பதில்
கோபத்தை விரட்டியடிக்கிறது.
அதே நேரத்தில் - கடுமையான வார்த்தைகள்
கோபத்தை உண்டாக்கும்.
***
எதிர்ப்பார்ப்புடன் திறந்து,
ஆதாயத்துடன் எந்தப்
புத்தகத்தை மூடுகிறோமோ,
அதுதான் ஒரு நல்ல புத்தகம்.
***
பகிர்ந்து கொள்வதற்காக
இருப்பதே மகிழ்ச்சி.
***
நீ என்ன விரும்புகிறாயோ,
அது உனக்குக் கிடைக்க
வில்லையென்றால்,
எது உனக்கு கிடைத்திருக்கிறதோ,
அதை நீ விரும்ப வேண்டும்.
***
முட்டாளின் இதயம் அவனுடைய
வாயில் இருக்கிறது.
ஆனால், புத்திசாலியின் வாய்
அவனுடைய இதயத்தில் இருக்கிறது.
***
ப்ளம் மரம் எந்த அளவிற்கு
உயரமாக இருக்கின்றதோ,
அந்த அளவிற்கு ப்ளம்,
நன்கு பழுத்திருக்கும்.
***
புலர்காலைப் பொழுதிற்கு
சற்று முன்னால்
இருப்பதுதான் இருட்டு.
***
அந்நியான செயல்கள் செய்வதன் மூலம்
உண்டாகும் துன்பத்தை விட, அதை செய்வது-
மிகவும் கேவலமான விஷயமாகும்.
***
கடுமையாக உழைக்கும்
ஒரு மனிதனின் தூக்கம்
இனிமையானது.
***
பிள்ளைகள் தங்களின் பெற்றோரை
எப்போது சரி செய்கிறார்களோ,
அப்போது சட்டம் சந்தோஷப்படுகிறது.
***
பெரும்பாலான கடுமையான
பொய்கள் அமைதியான
சூழ்நிலையில்தான் கூறப்படுகின்றன.
***
கடவுளின் பக்கம் எது இருக்கிறதோ,
அதுதான் பெரும் பலம் கொண்டது.
***
செயல்களைக் கொண்ட
மனிதனாக இல்லாமல்
வார்த்தைகளைக் கொண்ட
மனிதனாக இருப்பவன்,
களைகளால் நிறைந்திருக்கும்
ஒரு தோட்டத்திற்கு ஒப்பானவன்.
***
தனக்கு எஜமானனாக
எவன் இருக்கிறானோ,
அவன் வெகு சீக்கிரமே
மற்றவர்களுக்கு எஜமானனாக
ஆகி விடுவான்.
***
காயம் பட்டவர்களுக்கு
மட்டுமே எப்போதும் கெட்ட நேரம்
வந்து சேரும் என்று கூறுவதற்கில்லை.
***
எல்லா பொருட்களும்
மண்ணிலிருந்துதான் பிறக்கின்றன.
அனைத்துப் பொருட்களையும்
திரும்பவும் மண்ணே
எடுத்துக் கொள்கிறது.
***
கடவுளே கூட
இரண்டு மலைகளை
அவற்றிற்கு நடுவில்
ஒரு பள்ளம் இல்லாமல்
உருவாக்க முடியாது.
***
எங்கு இசை இருக்கிறதோ,
அங்கு தவறான
செயல்கள் நடைபெறாது.
***
அதிகமான வயது அல்ல –
கூர்மையான பார்வைதான்
அறிவைக் கொண்டு வரும்.
***
பிறரிடம் பார்க்கும்
நல்ல விஷயங்களை
நீ விரும்ப ஆரம்பித்தால்,
அவற்றை உன்னிடம்
நீ உண்டாக்கிக் கொள்வாய்.
***
உன்னிடம் சில கவிதைத்
தன்மைகளை உண்டாக்காமல்,
உன்னால் எந்த இடத்திலும்
கவிதையைப் பார்க்க முடியாது.
***
மிகப் பெரிய மரம்
பலமான காற்றை
தன்னை நோக்கி
வரச் செய்கிறது.
***
மனிதர்களிடம் நம்பிக்கை வை.
அவர்கள் உனக்கு
உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.
அவர்களை உயர்வாக நடத்து.
அவர்கள் உயர்வானவர்களாக
நடந்து கொள்வார்கள்.
***
இடைவெளி அன்பை கூர்மைப்படுத்துகிறது.
இருத்தல் அதிக உறுதியனாதாக ஆக்குகிறது.
***
தெய்வீக முரண்பாடுகளின்
ஆச்சரியச் சின்னமே பெண்.
***
எறும்பை விட
சிறப்பாக நீதி போதனை செய்ய
யாராலும் முடியாது.
அது எதுவுமே கூறுவதில்லை.
***
சோம்பேறித்தனமான மனிதனுக்கு
மிகவும் குறைந்த அளவிலேயே
ஓய்வு கிடைக்கும்.
***
இரவு வேளைகளில்
தொடர்ந்து கண்ணீர்
வந்து கொண்டிருக்கலாம்.
ஆனால், காலையில்
சந்தோஷம் வந்து விடும்.
***
ஏராளமான பேர்
தங்களின் ஞாபக சக்தியைப் பற்றி
குறைப்பட்டுக் கொள்வார்கள்.
ஆனால், மிகச் சிலரே
தங்களின் தீர்மானமெடுக்கும்
சக்தியைப்ப் பற்றி குறைப்படுவார்கள்.
***
நல்லது என்பது
ஒரே ஒரு விஷயம்தான்.
அது- அறிவு.
கெட்டது என்பது
ஒரே ஒரு விஷயம்தான்.
அது - அறியாமை.
***
தவறே செய்யாமல்
எந்த மனிதன் இருக்கிறானோ,
அவனுக்கு சட்டம் என்பதே
தேவையில்லை.
***
ஏமாற்றுவதை விட,
ஏமாற்றப்படுவது
எவ்வளவோ மேலானது.
***
பின்னோக்கி பார்த்துத்தான்
வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், அது முன்னோக்கி
வாழப்பட வேண்டும்.
***
திறமை வாய்ந்த சோம்பேறிகளின்
எண்ணிக்கையை
இயந்திரங்கள் பெரிய அளவில்
அதிகரித்திருக்கிறது.
***
தைரியம் ஒரு மனிதனை
சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்
அழைத்துக் கொண்டு செல்கிறது.
***
உருண்டு கொண்டிருக்கும்
ஒரு கல் தன்னுடன்
எதையுமே சேகரித்துக்
கொண்டு செல்லாது.
***
உன் பர்ஸ் முழுக்க
ணத்தை வைத்திருப்பதை விட,
ஏராளமான நூல்களை
படிக்க முயற்சி செய்.
***
தேவை என்ற ஒன்று சிறிதளவு
தைரியத்தையாவது தரும்.
***
புதியன என்று எதுவுமே இல்லை.
எல்லாமே மறக்கப்பட்டவைதான்.
***
சொர்க்கம் மழை பெய்ய வேண்டும்
என்று விரும்பினாலோ,
உன் அன்னை இன்னொரு திருமணம்
செய்து கொள்ள வேண்டும்
என்று ஆசைப் பட்டாளோ,
அதைத் தடுக்க எதனாலும் முடியாது.
***
அனைத்து மானிட அறிவையும்
இரண்டே சொற்களில்
அடக்கி விடலாம் :
காத்திருத்தல்,
நம்பிக்கையுடன் இருத்தல்.
***
பொன் ஆட்சி செய்யாத காலம்
எதுவோ, அதுதான்
பொற்கால ஆட்சி.
***
செய்யக் கூடாது என்று
நினைக்கும் செயலை,
செய்யாமல் இரு.
உண்மை அல்லஎன்று நினைப்பதை,
கூறாமல் இரு.
***
புனிதத் தன்மை இல்லாத இடத்தில்,
சந்தோஷம் இருக்காது.
***
எந்த மனிதன் தன்னுடைய
நேர்மைத் தன்மையை இழக்கிறானோ,
அவன் இழப்பதற்கு எதுவுமே இல்லை.
***
இதயம்
நெருப்பிற்குள் இருக்கும்போது,
வாய்க்குள்ளிருந்து கொஞ்சம்
நெருப்புப் பொறிகள்
வெளியே வரத்தான் செய்யும்.
***
வாழ்வு என்ற ஒன்று
எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ,
அவ்வளவு நாட்கள்
நம்பிக்கை என்ற ஒன்றும்
இருக்கும்.
***
ஒரு ஆரோக்கியமான உடல்,
ஆன்மா தங்கக் கூடிய
விருந்தினரின் மாளிகையாக இருக்கிறது.
நோய் பாதித்த உடல்,
சிறைச் சாலையாக இருக்கிறது.
***
ஒவ்வொரு இதயத்திற்கும்
அதற்கென்று இருக்கக் கூடிய
வேதனை இருக்கத்தான்
செய்கிறது.
***
மிகவும் உயரமாக
இருக்கும் மரத்திற்குத்தான்
மிகப் பெரிய வீழ்ச்சி இருக்கும்.
***
எல்லா திருமண கேக்குகளிலும்,
நம்பிக்கைதான்
இனிப்பு நிறைந்த கனியாக இருக்கிறது.
***
ஒரு சோம்பேறி மனிதன்
சாத்தானின் விளையாட்டு
நண்பனாக இருக்கிறான்.
***
அறிவாளி மனிதர்கள்
திட்டங்களுடன் இருப்பார்கள்.
நம்மில் பெரும்பாலோர்
அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்போம்.
***
ஒரு நண்பனை இழப்பதை விட,
ஒரு நகைச்சுவையை இழக்கலாம்.
***
கருணை என்ற
சூரியயோதயத்தில்தான்,
நல்ல குணங்கள் வளர்கின்றன்.
***
வராமல் இருப்பதை விட,
தாமதமாக வந்தது நல்லதுதான்.
ஆனால், எந்தச் சமயத்திலும்
தாமதமாக வராமல் இருப்பது நல்லது.
***
உழக் கூடிய கோவேறு கழுதையைப்
பற்றி தெரிந்து கொள்.
நெய்யக் கூடிய புழுவைப் பற்றி
தெரிந்து கொள்.
***
அரை உண்மையாக இருப்பது
பெரும்பாலும்
ஒரு பெரிய பொய்யாகத்தான்
இருக்கும்.
***
ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையுமே கடவுளின்
விரலால் எழுதப்பட்ட
குழந்தைகள் கதைதான்.
***
நெஞ்சில் அன்பு
வைத்திருப்பவன் எவனோ,
அவன் தன் இரண்டு பக்கங்களிலும்
சிறகுகளை வைத்திருக்கிறான்.
***
ஆண் வேலை செய்யலாம்,
சிந்திக்கலாம்.
ஆனால், பெண்ணால்தான்
உணர முடியும்.
***
நல்ல பெண்கள்
நிறைந்த சமுதாயம்,
நல்ல பழக்க வழக்கங்களுக்கான
அடிப்படையாக இருக்கிறது.
***
செயல்படும்போது கசப்பாக இருப்பது,
நினைத்துப் பார்க்கும்போது
இனிப்பானதாக இருக்கலாம்.
***
மனங்கள் இல்லாத சரீரங்களை
கடை வீதியில் இருக்கும்
சிலைகளுடன் ஒப்பிடலாம்.
***
பணத்தின் மீது
கொண்டிருக்கும் ஈடுபாடுதான்
எல்லா பாவங்களுக்கும்
மூல காரணமாக இருக்கிறது.
***
நான் ஏன் ஒரு சிலையை வைத்திருக்கிறேன்
என்று கேட்கும் மனிதர்களை விட,
நான் ஏன் ஒரு சிலையை வைக்காமல் இருக்கிறேன்
என்று கேட்கும் மனிதர்களைத்தான் சந்திக்கிறேன்.
***
அவர்களின் தாய் எப்படி உருவாக்குகிறார்களோ,
அப்படி உருவாகுபவர்கள்தான் மனிதர்கள்.
***
நீ உன் மீது எந்த அளவிற்கு
அன்பு வைத்திருக்கிறாயோ,
அந்த அளவிற்கு உன் பக்கத்து
வீட்டுக்காரர்களிடமும் அன்பு செலுத்து.
***
வாழ்வு மிகவும் சிறியது.
நம்முடன் இருண்ட பயணத்தில்
பயணம் செய்து வருபவர்களின்
இதயங்களில் சந்தோஷங்களை
உண்டாக்க நமக்கு பெரும்பாலும்
நேரமே கிடைப்பதில்லை.
வேகமாக அன்பு செலுத்த ஆரம்பியுங்கள்!
சீக்கிரம் பரிவுடன் இருங்கள்!
***
நமக்கு தெரிந்த எல்லா உலகங்களிலும்
எது மிகவும் சிறந்ததாக இருக்கின்றதோ,
அதைத்தான் எல்லோருமே விரும்புகிறார்கள்.
***
நம்மைப் பற்றி நல்ல வகையில்
மனிதர்களைப் பேசச் செய்வதற்கான
ஒரே வழி - நல்ல செயல்களைச்
செய்வதுதான்.
***
முதலில் உதவி என்று
வந்து நிற்கும்நிலைமை
பின்னர் ஆட்சி செய்வது என்று
மாறி விடும்.
***
ஒரு மனிதன் எந்த அளவிற்கு
நல்ல குணங்களுடன் இருக்கிறானோ,
அந்த அளவிற்கு மிகவும் குறைவாகவே
அவன் பிற மனிதர்களை
மோசமானவர்கள் என்று சந்தேகப் படுவான்.
***
ஒவ்வொரு அரசனும் அடிமைகளின்
வம்சத்திலிருந்துதான் உருவாகிறான்.
அதேபோல ஒவ்வொரு அடிமையும்
தங்களின் முன்னோர்களிடம்
அரசர்களைக் கொண்டிருக்கிறான்.
***
ஒரு மிகச் சிறந்த ஒவியன்
ஒரு மிகச் சிறந்த ஓவியத்தை
மிகவும் சிறிய க்யான்வாஸில்
வரைந்து விடுவான்.
***
நீ நண்பனாக ஆக்கப்படும்போது,
அதைப் பற்றி ஞாபகத்தில் வைத்திரு.
நீ நண்பர்களைச் சேர்க்கும்போது,
அதை மறந்து விடு.
***
மிகவும் சிறியதற்கும்
மிகவும் பெரியதற்கும்
இடையில் இருக்கும்
ஸ்டேஷனுக்குப் பெயர்தான் -
சந்தோஷம்!
***
ஒரு தடவை
பேசுவதற்கு முன்னால்
இரண்டு தடவைகள் கேள்.
***
ஒரு வீடு இல்லாத
ஒரு மனிதன்
ஒரு கூடு இல்லாத
பறவையைப் போன்றவன்.
***
ஒரு செயல் நம்பிக்கையுடன்
செய்யப்படவில்லையென்றால்,
இதயம் நொறுங்கி விடும்.
***
சந்தோஷமற்று இருப்பவர்களிடம்,
நேரம் எவ்வளவு மெதுவாக
நகர்ந்து கொண்டிருக்கிறது!
***
தன்னால் அவன்
காயம்பட்டுக் கொள்ளலாமே தவிர,
அவனால் காயம்பட்டவர்கள்
யாரும் இல்லை.
***
எந்த இதயம்
பெருந்தன்மை கொண்டதாகவும்
அன்பு மயமானதாகவும் இருக்கிறதோ,
அது பெரும்பாலும் கடவுளை ஒத்தது.
***
தாவி குதிப்பதற்கு முன்னால்,
கூர்ந்து பார்.
***
ஏதாவது பயனுள்ள
ஒன்றைச் செய்வதற்காக
கிடைக்கும் நேரத்திற்குப்
பெயர்தான் ஓய்வு.
***
இன்று என்னை
நன்றாக வாழ விடுங்கள்.
நாளை என்ன என்று
யாருக்குமே தெரியாது.
***
மனிதனின்
மிகப் பெரிய எதிரியே
மனிதன்தான்.
***
பிறருக்கு எதிராக இருக்கும்
நம் மனங்களைத் துடைத்து,
பிரகாசமாக வைத்துக் கொள்வது
நல்லது.
***
தனக்கு நினைவுச் சின்னம் என்ற
ஒன்று தேவையே இல்லை
என்று யார் நினைக்கிறார்களோ,
அவர்கள்தான் அதற்குத் தகுதியானவர்கள்.
***
அதிர்ஷ்டமற்ற தன்மையைத்
தாங்கிக் கொள்ளும் சக்தி
யாருக்கு இல்லாமலிருக்கிறதோ,
அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை
ஏற்றுக் கொள்வதற்கும்
தகுதி இல்லாதவர்களே.
***
எல்லா மனிதர்களிடமும்
மிகவும் சுதந்திரத் தன்மையுடன்
இருக்கக் கூடிய மனம் எதுவோ,
அதுதான் புனிதத் தன்மை
கொண்ட மனம்.
***
குழந்தைகள்
இருப்பதால் மட்டுமே,
நல்ல அன்னைமார்கள்
உண்டாகி விட முடியாது.
***
ஒரு நோய்வாய்ப்பட்ட
மனிதனுக்கு பொறுமைதான்
மிகச் சிறந்த மருந்து.
***
எவன் தன்னுடைய நாட்டை
மிகச் சிறந்த நாடாக
ஆக்க வேண்டும்
என்று முயற்சிக்கின்றானோ,
அவன்தான் தன் நாட்டின் மீது
அதிகமான அன்பு வைத்திருப்பவன்.
***
தன்னுடைய கருத்தை
எந்தச் சமயத்திலும்
மாற்றிக் கொள்ளாமல் இருப்பவன்,
தேங்கிக் கிடக்கும் நீருக்கு ஒப்பானவன்.
மனதின் தவளைகள்
அதில் பெருகிக் கொண்டிருக்கும்.
***
எந்தவொரு மனிதன்
வீட்டில் விருந்தாளிகளை
வரவேற்காமல் இருக்கிறானோ,
அவன் வெளியே
மிகவும் குறைந்த அளவிலேயே
உபசரிக்கப்பவர்களைச் சந்திப்பான்.
***
ஒரு ஆசிரியர்
எல்லையைத் தாண்டி
பாதிப்பை உண்டாக்கிக்
கொண்டிருப்பார்.
தன்னுடைய ஆதிக்கம்
எங்கு நிற்கும் என்று
அவர் எந்தச் சமயத்திலும்
கூற மாட்டார்.
***
ஒரு பாதுகாப்பான
இடத்தில் இருந்து கொண்டு
ஒரு மனிதன்
மிகவும் எளிதாக அறிவுரை
கூற முடியும்.
***
என் தாத்தா யார்
என்று எனக்குத் தெரியாது.
ஆனால், அவருடைய பேரனாக
வரப் போவது யார்
என்பதைத் தெரிந்து கொள்வதில்
நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
***
ஒவ்வொரு வருடமும்
அறுவடை என்ற ஒன்று வந்தாலும்,
அது ஒவ்வொரு நாளும் வராது.
***
தானியம் எப்போது
முழு விளைச்சலுக்கு
வந்து விட்டதோ,
அப்போது அறுப்பதற்கான
நேரம் வந்து விட்டது.
***
உண்மையான அப்பாவித்தனம்
எதைப் பற்றியும் வெட்கப் படாது.
***
தங்களுடைய விஷயங்களை விட
மற்றவர்களின் விஷயங்களில்
மனிதர்கள் மிகச் சிறப்பாக
தீர்ப்பு கூறுகிறார்கள்.
***
சிந்தனையே இல்லாமல் கற்பது,
உழைப்பை வீண் செய்வதைப் போன்றது.
கற்காமலே சிந்தித்துக் கொண்டிருப்பது
மிகவும் ஆபத்தானது.
***
கடவுள் சொர்க்கத்திலிருந்து
சூரியனை நீக்கி விட்டாலும்,
அப்போதும் நாம் கட்டாயம்
பொறுமையுடன் இருக்க வேண்டும்.
***
மனிதர்கள் உறங்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இறக்கும்போது,
கண் விழிக்கிறார்கள்.
***
மூடப்பட்டிருக்கும் ஒரு நூல்,
ஒரு மரக் கட்டையைப் போன்றது.
***
புரிந்து கொள்ளாமலே
படிப்பதில் என்ன
பிரயோஜனம் இருக்கிறது?
***
நீ கடவுளுக்கும்
சாத்தானுக்கும்
சேவை செய்ய முடியாது.
***
திருமண வாழ்க்கையை
ஆழமானதாக ஆக்குவதே
அன்புதான்.
***
காலை வேளையில் மலைக்கு.
மாலைப் பொழுதில் நீர் ஊற்றுக்கு.
***
ஒரு அன்னையை
வாழ்வுடன் பிணைக்கச்
செய்து கொண்டிருப்பவர்களே
பிள்ளைகள்தான்.
***
ஒரு பெயரில் என்ன இருக்கிறது?
ஒரு ரோஜாவை
என்ன பெயர் கூறி அழைத்தாலும்,
அது இனிய நறுமணத்தைக்
கொண்டதாகவே இருக்கும்.
***
யார் அன்பு செலுத்துகிறார்களோ,
அவர்கள் சொர்க்கத்திலிருந்து
ஒரு எட்டு வைக்கும்
தூரத்தில் இருக்கிறார்கள்.
***
நீங்கள் நேராக
நின்று கொண்டிருக்கும் பட்சம்,
உங்களுடைய நிழல்
குறைபாடுகளுடன் இருந்தால்,
நீங்கள் அதற்காக கவலைப்படாதீர்கள்.
***
எல்லோரும்
எந்த மனிதனை
இரண்டாவது இடத்திற்குப்
போகும்படி செய்கிறார்களோ,
அவன் சந்தேகமே இல்லாமல்
முதல் இடத்திற்கு
செல்லக் கூடிய தகுதி உடையவனாக
இருக்கிறான்.
***
பொன், நெருப்பால்
முயற்சி செய்யப்படுகிறது.
தைரியமான
மனிதர்கள் சண்டையால்
தீர்மானிக்கப்படுகிறார்கள்.
***
நீங்கள் ஏழையாக இருந்தால்,
உங்களின் நல்ல குணங்களைக்
கொண்டு நீங்கள் யார் என்பதை
காட்டுங்கள்.
பணக்காரனாக இருந்தால்,
உங்களுடைய நல்ல செயல்களின்
மூலம் யார் என்பதை காட்டுங்கள்.
***
ஒரு மென்மையான பதில்,
கோபத்தை இருக்கும்
இடமே தெரியாமல் விரட்டி விடும்.
***
உயரமான கட்டிடங்களில்
இருக்கும் மேல் மாடி
பெரும்பாலும் காலியாகத்தான்
இருக்கும்.
***
என்னுடைய
கவுரவத்திற்கு
காவலனாக
இருப்பவன் நானே.
***
உங்களுடைய வீட்டை
என்றைக்கு நீங்கள் சுத்தம்
செய்யாமல் இருக்கிறீர்களோ,
அன்று எதிர்பாராத விருந்தாளிகள்
வருவார்கள்.
***
உண்மையான பிரச்னைகளை
சீர் செய்து விட முடியும்.
கற்பனையான
பிரச்னைகளைத் தான் வெற்றி
கொள்ள முடியாது.
***
இரண்டு நண்பர்களுக்கு இடையே
நீதிபதியாக இருப்பவன்,
அவர்களில் ஒருவனை
இழந்து விடுவான்.
***
இளமையில் அறிவாக இருப்பது,
வயதான காலத்தில்
அனுபவமாக ஆகிறது.
***
நல்ல குணங்கள் இல்லாத அழகு,
வாசனை இல்லாத மலரைப் போன்றது.
***
மிகப் பெரிய
ஆடம்பரங்களைத் தேடுவதை விட,
ஒரு நல்ல பெயரைத்
தேடுவது உயர்ந்தது.
***
சட்டம் என்பது
வலிமையானவர்களைக்
காப்பாற்றுவதற்கே
இருக்கிறது.
***
வாழ்வு என்பது
ஒரு புனிதமான ஜூவாலை.
நாம் நமக்குள் இருக்கும்
ஒரு கண்ணுக்குத் தெரியாத
சூரியனைக் கொண்டு
வாழ்கிறோம்.
***
நீதிபதிகள் சட்டத்திற்குக்
கீழ்ப்படிய வேண்டும்.
அதே நேரத்தில்
அதை செயல்படுத்தவும்
வேண்டும்.
***
இயற்கை சுற்றுகிறது.
அதனால், மனிதகுலம்
முன்னேறுகிறது.
***
பிரச்சாரம் செய்யாதே.
ஏனென்றால், நீ ஏதாவது
கூறியாக வேண்டும்.
ஆனால், கூறுவதற்கு
சில விஷயங்கள் இருக்கின்றன.
***
ஒரு முட்டாள் பணத்தை
உண்டாக்கலாம்.
ஆனால், அதை எப்படி
செலவு செய்வது என்பதற்கு
ஒரு புத்திசாலி மனிதன்
வேண்டும்.
***
உன்னுடைய நம்பிக்கையை
பணத்தின் மீது வைக்காதே.
ஆனால், உன்னுடைய பணத்தை
நம்பிக்கையின் மீது வை.
***
எவன் குழந்தையை
கையால் தூக்குகிறானோ,
அவன் தாயை இதயத்தால்
எடுக்கிறான்.
***
சாதாரணமாக தோன்றும்
மனிதர்களைத்தான் கடவுள் விரும்புகிறார்.
அவர்களை அதிகமாக
அவர் படைத்திருப்பதற்கு
அதுதான் காரணம்.
***
உணர்ச்சிவசப்படுவதிலிருந்து
உன்னை நீ காத்துக் கொள்.
கடவுள் உன்னை பாவத்திலிருந்து
விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
***
உலகில் ஏராளமான
விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
ஏனென்றால், பாராட்டுவதை விட,
விமர்சனம் செய்வது என்பது
மிகவும் எளிதானது.
***
உண்மையான வாக்குறுதி சிறியதாக இருக்கும்.
ஆனால், செயல்படுவது பெரிதாக இருக்கும்.
பொய்யான வாக்குறுதி மிகப் பெரியதாக இருக்கும்.
செயல்படுவதோ சிறிய அளவில் கூட இருக்காது.
***
எங்களை சந்தோஷமானவர்களாகவும்,
நல்லவர்களாகவும் ஆக்கு!
***
நல்ல உடல் நலம்,
நல்ல அறிவு -
இவை இரண்டுமே
மிகப் பெரிய கொடுப்பினைகள்.
***
சுயநலம் கொண்ட இதயம்
வேதனைப்படுகிறது என்றால்,
அதற்கு அது தகுதியானதே.
***
ஒரு புனிதமான செயல்
ஒரு கெட்ட ஆன்மாவை
மறைத்து வைக்காது.
***
சந்தோஷத்தைப் பின்பற்றி
கவலையை பயணிக்கச் செய்வது
சொர்க்கத்தின் கட்டளை.
***
உலக சந்தோஷங்களில்
யார் குளிக்கிறார்களோ,
அவர்கள் கண்ணீர்
நிறைந்த உலகத்தில் நீந்தித்தான்
ஆக வேண்டும்.
***
எந்த இடத்தில் சட்டம் தண்டனை
அளிக்காமல் இருக்கிறதோ,
அந்த இடத்தில்
அது செயல்பட முடியாது.
***
யார் வாழ ஆரம்பிக்கிறானோ,
அவன் மரணமடையவும்
ஆரம்பிக்கிறான்.
***
நேர்மையான முறையில் வாழ்.
நேர்மையான முறையில்
இறப்பாய்.
***
மனிதர்கள் குள்ளநரித்தனத்துடன்
இருப்பதைப் பார்ப்பதில்
ஆச்சரியப்படுவதற்கு
எதுவுமே இல்லை.
அதே நேரத்தில் - அவர்கள் எப்படியெல்லாம்
அவமானப்பட்டு நிற்கிறார்கள்
என்பதைப் பார்க்காமல்
இருக்கிறோமே என்பது
பெரும்பாலும் ஆச்சரியப்படக்
கூடிய விஷயமே.
***
நூல்களை படிப்பதை விட,
மனிதர்களைப் படிப்பது
மிகவும் அவசியம்.
***
காயத்தை அனுப்பி வைத்த
கடவுள் மருந்தையும்
அனுப்பி வைப்பார்.
***
நிறைய பேசி, மனதில் இருக்கும்
எல்லா சந்தேகங்களையும்
இல்லாமற் செய்வதை விட,
அமைதியாக இருந்து கொண்டு
ஒரு முட்டாளைப் போல
நினைத்துக் கொண்டிருப்பது
எவ்வளவோ மேலானது.
***
பணத்தின் மீது கொண்ட ஆசையும்,
கற்க வேண்டும் என்பதின் மீது கொண்ட விருப்பமும்
எந்தச் சமயத்திலும் சந்திக்கவே சந்திக்காது.
***
சிறிய குழந்தைகளின் உதடுகளிலும்,
இதயத்திலும் அன்னை என்பதுதான்
கடவுளின் பெயர்.
***
அன்பு என்பது சிறிய சொல்லாக இருக்கலாம்.
ஆனால், அதில் அனைத்தும் இருக்கின்றன.
***
அமைதி இல்லாத மனதிற்கு
இசை மருந்தாக இருக்கிறது.
***
ஒவ்வொரு மனிதனும்
கேட்கும் விஷயத்தில்
மிகவும் வேகமாக இருக்க வேண்டும்.
பேசும் விஷயத்தில்
மிகவும் மெதுவானவனாக
இருக்க வேண்டும்.
***
தாவரங்கள் சூறாவளியை
எதிர்த்து தைரியத்துடன் நிற்கும்போது,
ஓக் மரங்கள் கீழே விழலாம்.
***
உன்னை விட
புத்திசாலித்தனமான
அறிவுரையை உனக்கு யாரும்
தர முடியாது.
***
ஏராளமான சொத்துக்களை
தன்னிடம் வைத்துக் கொண்டு
அதை அனுபவிக்காமல்
இருக்கும் மனிதன்,
பொன்னை ஏற்றிக் கொண்டு
செல்லும் கழுதை,
செடிகளைச் சாப்பிடுவதைப்
போன்றவன்.
***
ஒரு மனிதன் இறக்கும் வரையில்,
அவன் முழுமையாக பிறக்கவில்லை
என்றுதான் அர்த்தம்.
***
அமைதியான மனம்தான்
நோயைத் தீர்ப்பதற்கான மருந்து.
***
இறந்து போன துறவிகளை பாராட்டுவது,
உயிருடன் இருக்கும் துறவிகளை தூற்றுவது -
இதுதான் உலகத்தின் வழக்கமாக இருக்கிறது.
***
எல்லா விஷயங்களுடனும்
அனுசரித்துச் செல்வது -
இதுதான் வாழ்க்கையின்
பொன்னான சட்டம்.
***
கடவுள், சாதாரண மனிதர்களுக்கு சிரிப்பை,
கண்ணீர் இல்லாமல் அளிப்பதில்லை.
***
உன்னுடைய கடிதங்களையே
எப்போதும் திரும்பத் திரும்ப
டித்துக் கொண்டிருக்காதே.
***
யார் எப்போதும் வாழ
ஆரம்பித்துக் கொண்டே
இருக்கிறார்களோ,
அவர்கள் மோசமாகத்தான்
வாழ்வார்கள்.
***
எல்லா மாமிசங்களும்
புல்லைப் போன்றவையே.
அங்கிருக்கும் நல்லவை,
வயலில் இருக்கும் மலர்களுக்கு
நிகரானவை.
***
மனிதன் பெண்ணுக்குள்ளிருந்து
சில நாட்களிலேயே பிறந்திருக்கலாம்.
ஆனால், அவன் கொடுத்த
தொல்லைகள் அதிகம்.
***
உருண்டு கொண்டே இருக்கும்
கல் எப்படி எந்த பாசிகளையும் சேகரிக்காதோ,
அதே போல ஊசலாடும்
இதயம் பாசத்தைச் சேகரிக்காது.
***
இடையில் இருக்கும் ஒரு வேலி,
நட்பை பசுமையாக வைத்திருக்கும்.
***
பணிப்பெண்கள் கட்டாயம்
மென்மையானவர்களாகவும்,
பணிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கேட்கும் விஷயத்தில் வேகமானவர்களாகவும்,
பேசும் விஷயத்தில் மெதுவானவர்களாகவும்
அவர்கள் இருக்க வேண்டும்.
***
அனுசரித்துச் செல்வதில்தான்
உண்மையான சந்தோஷம் இருக்கிறது.
***
முதல் காதலில் இருக்கும்
மாயத் தன்மையே நம்முடைய
அறியாமைதான்.
அது எந்தச் சமயத்திலும்
முடிவடைந்து விடும்.
***
தங்களுடைய தலைகளை
பழைய இயற்கையின்
டியில் வைத்து தூங்குவதற்கு
நிகராக எந்தவொரு மனிதனும்
அவ்வளவு அமைதியாக
தூங்க முடியாது.
***
எந்த இடத்திற்கு
தான் சென்று கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாமல்
ஒரு மனிதன் இருக்கும்போது,
எந்த காற்றுமே
சரியான காற்றாக இருக்காது.
***
எப்போதும் சாப்பிட்டால்
பலசாலியாக ஆகலாம்
என்பதை எதிர் பார்.
அதேபோல
எப்போதும் படிப்பதன் மூலம்
அறிவாளியாக ஆகலாம்
என்பதையும் எதிர் பார்.
***
தன்னுடைய இதயத்தில்
ஒரு புழுவை
வைத்திருக்கக் கூடிய ஆப்பிள்,
மிகவும் அழகானதாகவே இருந்தாலும்,
அதைப் பற்றி சிறப்பித்துக்
கூறுவதற்கு என்ன இருக்கிறது?
***
ஒரு பெண்ணின்
காதலை நோக்கிச் செல்லும்
அனைத்துப் பாதைகளிலும்
பரிதாபத்திற்குரியது
நேராக செல்லும் பாதைதான்.
***
திருமணம் என்பது
ஒரு லாட்டரியைப் போன்றது.
அதில் ஆண்கள் தங்களின்
சுதந்திரத்தை இழக்கிறார்கள்.
பெண்கள் தங்களின்
சந்தோஷத்தை இழக்கிறார்கள்.
***
ஒரு மனிதன் தன் தந்தையையும்,
தாயையும் விட்டு நீங்களாம்.
தொடர்ந்து அவன் தன் மனைவியிடம்
அடைக்கலம் ஆகிறான்.
***
கடவுளின் பெருமையை
சொர்க்கங்கள் கூறுகின்றன.
எல்லா செயல்களும்
வனின் கை வேலைகளே.
***
உறையில் ஒரு அம்பு இருப்பதை விட,
இரண்டு அம்புகள் இருப்பது நல்லதுதான்.
மூன்று அம்புகள் இருப்பது அதை விட நல்லது.
***
உடல் நலம், சந்தோஷம் -
இரண்டும் ஒன்றையொன்று
சார்ந்திருக்கிறது.
***
ஒரு சோம்பேறி மனிதன்
மூச்சை விடலாம்.
ஆனால், அவன் வாழவில்லை.
***
சந்தோஷம் என்பது
கொண்டாட்டத்திற்கு நிகரானது.
இரண்டு மோசமான நாட்களுக்கு
நடுவில் வரும் ஒரு நல்ல நாள்.
***
மிகவும் மென்மையான சட்டங்கள்
எந்தச் சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை.
மிகவும் கடுமையான சட்டங்கள்
எந்த காலத்திலும்
நிறைவேற்றப்படுவதில்லை.
***
அவன் மிகவும் கடுமையான
இதயத்தைக் கொண்டவன்.
அது 'மே' மாதத்தில் காதலிக்காது.
***
வானம் நீல நிறத்தில் இல்லை
என்பதை ஞாபகத்தில்
வைத்துக் கொள்.
ஏனென்றால்,
கண் பார்வை இல்லாதவர்கள்
அதை பார்க்க முடியாது.
***
அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம்
ஒரு மனிதனின் நேரத்தை
முற்றிலும் எடுத்துக் கொள்கிறது.
எந்தவித வேலையையும் விட,
அது அவனை அவனுடைய
முதலாளிக்கு முன்னால் கேவலமாக
நிற்க வைக்கிறது.
***
வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான்.
அது புறப்பட்ட இடத்திற்கே பயணிக்கிறது.
***
உண்மையிலேயே
வெளிச்சம் என்பது
மிகவும் இனிமையானது.
கண்களால்
சூரியனைப் பார்ப்பது
என்பது எவ்வளவு அருமையான
ஒரு விஷயம்!
***
நாம் கவலையில் இருக்கும்போது,
முன்பு சந்தோஷமாக
இருந்த நாட்களை
அசைபோட்டுப் பார்ப்பதை விட
துயரங்கள் தரக் கூடிய
விஷயம் வேறொன்றில்லை.
***
எந்தச் சமயத்திலும்
நாம் சந்தித்திராத
மோசமான சம்பவங்கள்தான்
தாங்கிக் கொள்வதற்கு
மிகவும் கஷ்டமானவையாக
இருக்கும்.
***
அன்பான சொற்கள்
நாக்கைக் களைப்படையச்
செய்யாது.
***
கிரேக்க கடவுள்களைப் போல,
கலைஞர்கள் ஒருவரோடொருவர்
வெறுமனே வெளிப்படுத்திக்
கொள்கிறார்கள்.
***
நாம் யாரை காயப்படுத்தினோமோ,
அவர்களை வெறுக்கிறோம்.
***
நீங்கள் கேட்கப்படுவதற்கு முன்னால்,
அறிவுரை கூறவோ உப்பைப் போடவோ
செய்யாதீர்கள்.
***
தன்னுடைய மோகங்களை
கவனிப்பதன் மூலம்
அவன் கண்காணிப்பாளராக இருக்கிறான்.
அவற்றிற்கு சேவை செய்வதன் மூலம்,
அவன் பணியாளனாக இருக்கிறான்.
***
ஒரு நாள் முழுமையான
உயிர்ப்புடன் இருப்பதற்காக,
ஒரு நாள் முழுமையான
ஓய்வில் இரு.
***
மக்கள் எந்த அளவிற்குத்
தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்களோ,
அதைவிட அவர்கள் மீது
அன்பு செலுத்துவதற்குப்
பெயர்தான் கருணை.
***
நிறைய பணம் சம்பாதிப்பதை விட,
ஒரு நல்ல பெயரைப் பெறுவது மேலானது.
***
எந்த தடைகளும் இல்லாமல்,
அறிவாளிகளின் இதயம் எல்லாவற்றையும்
பிரதிபலிக்க வேண்டும்.
***
நட்சத்திரங்களையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
ஒரு மனிதன்,
சாலையில் உள்ள ஒவ்வொரு
பள்ளத்தின் கருணையையும்
நம்பியிருக்கிறான்.
***
சிறிது காலம் தரிசாகக்
கிடப்பது கூட நல்லதுதான்.
***
ஒரு காலத்தில்
நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள்,
அடுத்த காலத்தில் வணங்கப்படும்
துறவிகளாக ஆவார்கள்.
***
அமைதியானவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் பூமியை ஆட்சி
செய்வார்கள்.
***
அமைதியான மனதுடன் இருப்பதே
தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.
நான் எப்போதும் வாழ்வது இல்லை.
ஏனென்றால், என்னுடைய நாட்கள்
தற்பெருமையிலேயே அழிந்து விடுகின்றன.
***
மனிதன் ஒரு மிக உயர்ந்த மிருகம்.
சாம்பல்களில் அவன் அழகாக இருக்கிறான்.
கல்லறையில் மிடுக்கானவனாக இருக்கிறான்.
***
திருமணத்தின் கனியாக
பெரும்பாலும் காதல் இருக்கிறது.
ஆனால், அதற்கு அதுவே காரணம் அல்ல.
***
என்னுடைய
பக்கத்து வீட்டுக்காரரின்
தோட்டத்தில்
ஒரு மைல் தூரம்
நடக்காதவரையில்,
நான் அவரை
விமர்சிக்காமல்
இருக்க வேண்டும்.
***
தான் அன்பு செலுத்தப்படுவதை விட,
எவன் எல்லோரிடமும்
எதிர்பார்ப்புடன் இருக்கிறானோ,
அவன் தன் மீது அதிகமான
அன்பை வைத்திருக்கிறான்.
***
அமைதியைப் பரப்பும்
நல்ல செய்தியைக்
கொண்டு வரும்
அவனுடைய கால் பாதங்கள்
மலைகளின் மீது நடக்கும்போது
எவ்வளவு அழகாக இருக்கின்றன!
***
ஒரு பவுண்ட்
துக்கத்திற்கு நிகரானது
ஒரு அவுன்ஸ் சந்தோஷம்.
***
பாத்திரம் கல்லில் மோதினாலும்,
கல் பாத்திரத்தில் மோதினாலும் -
பாதிப்பு என்னவோ பாத்திரத்திற்குத்தான்.
***
தன்னுடைய சக மனிதர்களுக்கு
நல்ல செயல்களைச் செய்யாமல்,
மனிதர்கள் கடவுளை அணுகி
எதையும் பெற முடியாது.
***
எந்த அர்த்தமும் இல்லாத இடத்தில்,
கெட்ட பெயரை வாங்காதே.
***
நீண்ட காலம் வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள்
வாழ்ந்ததென்னவோ -
ஒரு சிறிய கணம்தான்.
***
சாதாரண மனிதர்கள்
பொருட்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
முட்டாள்கள்
மனிதர்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
உயர்ந்த மனிதர்கள்
எண்ணங்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
***
நான்
ஏழைகளுக்கு
உணவு தரும்போது
அவர்கள் என்னை
ஒரு துறவி என்று கூறுகிறார்கள்.
ஏழைகளுக்கு
ஏன் உணவு இல்லை
என்று நான் கேட்கும்போது
அவர்கள் என்னை
ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறுகிறார்கள்.
***
நாம் எல்லோருமே
வாழ்க்கையில்
பல விஷயங்களையும்
தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனால் -
அவற்றுடன் வாழ்வதுதான்
மிகவும் சிரமமான ஒன்று.
ஆனால்,
அந்த காரியத்தில்
உங்களுக்கு உதவுவதற்கு
யாருமே இருக்க மாட்டார்கள்.
***
எந்தவொரு மனிதன்
யாரையுமே நம்பாமல்
இருக்கிறானோ,
அவனை யாருமே
நம்பமாட்டார்கள்.
***
வாழ்க்கை என்பது
ஒயினைப் போன்றது.
அதை கொஞ்சமாக சுவைத்தால்
அதனால்
எந்தக் கேடும் இல்லை.
ஆனால்,
புட்டியைக் காலி பண்ண வேண்டும்
என்று நினைத்தால்
ஒரு தலைவலியை நாமே
வரவழைக்கிறோம்
என்று அர்த்தம்.
***
தன்னுடைய
மனச்சாட்சியை
முழுமையாக இழந்து விட்டு
ஒரு மனிதன்
முழு உலகத்தையும்
ஆதாயமாக பெற்றாலும்
அதனால் என்ன பயன்?
***
இந்த தருணத்தை
நீ
தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம்.
ஆனால்,
இந்தத் தருணம்
உன்னைத்
தேர்ந்தெடுத்து விட்டது.
***
பகல் என்பது
தூங்குவதற்காக இருப்பது.
இரவு என்பது
விழித்திருப்பதற்காகவும்
பிறரை விழிக்கச் செய்வதற்காகவும்
இருப்பது.
***
மற்ற நாடுகளைப் பற்றி
ஒவ்வொருவரும்
எந்த அளவிற்கு
தவறான கருத்துக்களைக்
கொண்டிருக்கிறார்கள்
என்பதை
நேரடியாக கண்டு கொள்வதற்காக
இருப்பதுதான்
பயணம்.
***
கடந்த காலத்துடன்
எவையெல்லாம் இருந்தனவோ,
அவையெல்லாம்
போய் விட்டன.
மிகச் சிறந்த விஷயங்கள்
இனிமேல்தான்
வர வேண்டும்.
***
நான்
நடிப்பதை விரும்புகிறேன்.
அது
வாழ்க்கையை விட
அதிகமான
உண்மைத் தன்மையுடன்
இருக்கிறது.
***
பயணம்
ஒரு மனிதனை
மிகவும் அடக்கமானவனாக
ஆக்குகிறது.
அவன்
இந்த அகன்ற உலகத்தில்
எவ்வளவு சிறிய இடத்தை
வகித்துக் கொண்டிருக்கிறான்
என்பதை
அது புரிய வைக்கிறது.
***
அழகாக இருப்பவர்கள்
எப்போதும்
நல்லவர்களாக இருப்பார்கள்
என்று கூறுவதற்கில்லை.
ஆனால்-
நல்லவர்கள்
எப்போதும்
அழகானவர்களாகவே இருப்பார்கள்.
***
வாழ்க்கை என்பது
ஒரு சொர்க்கம்.
நீ
அதில் தேவதை.
***
நான் எந்தச் சமயத்திலும்
வயதானவனாக
இருக்க மாட்டேன்.
என்னைப் பொறுத்த வரையில்
வயதானது என்பது
என்னை விட
பதினைந்து வருடங்கள் அதிகமானது.
***
ஒரு மனிதனிடம்
குறிப்பிடத்தக்க அம்சம்
என்பது
அவன் எதை அடைந்திருக்கிறானோ
அதுவல்ல.
எதை அடைய வேண்டும்
என்று நினைக்கிறானோ
அதுதான்.
***
உன் வாழ்க்கையில்
உயர்வு, தாழ்வு
எதுவுமே
இல்லையென்றால்
நீ
இறந்து விட்டாய்
என்று அர்த்தம்.
***
புட்டியில் அடைக்கப்பட்டிருக்கும்
கவிதை-
அதற்குப் பெயர்தான்
ஒயின்.
***
ஒருவரின்
கொள்கைகளின்படி
வாழ்வதை விட
அவற்றுக்காக
சண்டை போட்டுக்
கொண்டிருப்பது
எளிதானது.
***
ஒரு மனிதன் தன்னைத் தானே
சுருட்டிக் கொண்டு இருக்கும்போது,
அவன் ஒரு அழகான பொட்டலத்தைப்
போல ஆகி விடுகிறான்.
***
ஒரு நல்ல பெயர்
தன் பிரகாசத்தை
இருளில் காட்டிக்
கொண்டிருக்கும்.
***
பணிவு என்பது
வெற்றியின் தாயாக இருக்கிறது,
பாதுகாப்பின் மனைவியாக இருக்கிறது.