உடல் நலம் நன்றாக இருக்க
எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன?
- மகேஷ்வர்மா
உடல் நலம் நன்றாக இருப்பதற்கு எந்தெந்த கிரகங்கள் நன்றாக இருக்க வேண்டும்?
ஒரு மனிதனின் ஜாதகத்தில் சூரியன் உச்சமாக இருந்தால் அல்லது அந்த சூரியனுக்கு குருவின் பார்வை இருந்தால், அந்த மனிதர் தலைவலியால் சிரமப்பட மாட்டார். அவருக்கு பித்த நோய் இருக்காது. மார்பில் நோய் இருக்காது. இதயத்தில் பிரச்சினை இருக்காது. அவர் எந்தவித பயமும் இல்லாமல் தன் வேலையை முடிப்பார். சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும். தலையில் அடிபடாது.
ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், சிந்தனை தெளிவாக இருக்கும். முதுகுத் தண்டில் நோய் வராத எலும்பில் நோய் வராது. பித்தம் இருக்காது.
சந்திரன் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால், அல்லது சுய வீட்டில் இருந்தால், சந்திரனை குரு பார்த்தால், அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். ஆழமாக சிந்திப்பார். இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வராது. இரத்த அழுத்தம் வராது. மன நோய் வராது. ஜுரம் வராது. ஜலதோஷம் பிடிக்காது. வயிறு சம்பந்தப்பட்ட நோய் வராது. மூளை பாதிப்பு இருக்காது.
சந்திரன் நன்றாக இருந்தால், அந்த மனிதருக்கு மனநோய் இருக்காது.
செவ்வாய் சுய வீட்டில் இருந்தால் அல்லது உச்சமாக இருந்தால், அல்லது செவ்வாய்க்கு குருவின் பார்வை இருந்தால், அவருக்கு பித்த நோய் இருக்காது. உடலில் சொறி, படை இருக்காது. கட்டிகள் வராது முகத்தில் நோய் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்காது. மூல நோய் இருக்காது. குடல் நோய், டைஃபாய்ட் ஜுரம் வராது. பால்வினை நோய் வராது.
செவ்வாய் நன்றாக இருந்தால், அந்த ஜாதகர் தன் வேலைகளை நன்றாகச் செய்து முடிப்பார். நல்ல உடலமைப்பைக் கொண்டவராக அவர் இருப்பார். நோய்கள் நெருங்காது.
புதன் சுய வீட்டில் இருந்தால் அல்லது உச்சமாக இருந்தால் அல்லது குருவின் பார்வை புதனுக்கு இருந்தால், அந்த ஜாதகர் நல்ல படிப்பாளியாக இருப்பார். ஆழமாக சிந்திப்பார். பித்தம், தோல் நோய் வராது. கழுத்தில் நோய் வராது. வயிற்றில் நோய் வராது. மஞ்சள் காமாலை வராது. சர்க்கரை நோய் வராது. குஷ்ட நோய் வராது. சொறி, சிரங்கு வராது. நோயின் பாதிப்பு இல்லாமல் அவர் வாழ்வார்.
குரு லக்னத்திலோ அல்லது சுய வீட்டிலோ அல்லது உச்சமாவோ இருந்தால், முதுகுத் தண்டில் நோய் இருக்காது. மூட்டில் நோய் வராது. கபம் வராது. கால் வீங்காது. ஈரலில் பிரச்னைகள் இருக்காது. காதில் நோய் வராது. தன் வேலைகளை அந்த ஜாதகர் நன்கு முடிப்பார். தைரியசாலியாக இருப்பார்.
சுக்கிரன் சுய வீட்டில் அல்லது உச்சமாக அல்லது குருவின் பார்வையில் இருந்தால், சீறுநீரில் பிரச்சினை இருக்காது. விந்தில் பிரச்சினை இருக்காது. பால்வினை நோய் வராது. மலச்சிக்கல் வராது.
சுக்கிரன் நன்றாக இருந்தால், பிறரை ஈர்க்கக் கூடிய வகையில் அவர் தன் செயல்களைச் செய்து முடிப்பார்.
ஜாதகத்தில் சனி, சுய வீட்டிலோ அல்லது உச்சமாகவோ அல்லது மூல திரிகோணத்திலோ இருந்தால், அவருக்கு விபத்து நடக்காது. வாய்வு தொல்லை இருக்காது. பக்கவாதம் வராது. தலையில் முடி நன்றாக இருக்கும். இதய நோய் வராது. காலில் நோய் வராது. மூட்டில் நோய் இருக்காது. ஜீரண பிரச்சினை இருக்காது.
ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால், அந்த ஜாதகர் நன்கு உழைத்து பெயர், புகழுடன் இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு 3,6,11 இல் இருந்தால். அந்த ராகு நல்லவற்றைச் செய்யும். ராகு நல்ல நிலையில் இருந்தால், இரத்தம் குறையாது. மனநோய் வராது. பூச்சிக்கடி வராது. கை–கால் வீங்காது. இதய நோய் வராது. உடலில் வேதனை இருக்காது. பசுவால் தாக்கப்பட மாட்டார்கள் ஜதாகர் தைரியசாலியாக இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் கேது 3,6,11 இல் இருந்தால், அது நன்மைகளைச் செய்யும். கேது நன்றாக இருந்தால், மனம் நன்றாக இருக்கும். ஜாதகர் படிப்பாளியாக இருப்பார். வயிற்றில் நோய் இருக்காது. கல்லீரலில் நோய் வராது. ஜதெகர் எதையும் தைரியமாக முடிப்பார்.
பரிகாரங்கள்