பட்டாணி - பனீர் கட்லெட்
(Peas - Paneer Cutlet)
தேவையான பொருட்கள் :
• பச்சைப் பட்டாணி : 1/4 கிலோ
• உருளைக்கிழங்கு : 2
• பனீர் : 200 கிராம்
• சோம்பு (பெருஞ்சீரகம்) : 1/2 தேக்கரண்டி
• இஞ்சி : 1 அங்குலம்
• பச்சை மிளகாய் : 2
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 1 மேஜைக்கரண்டி
• கடலை மாவு : 2 மேஜைக்கரண்டி
• மஞ்சள்தூள் : 3 சிட்டிகை
• உப்பு : தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் : 300 மி.லி.
செய்முறை :
பட்டாணியை வேகவைத்து, மசித்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து பிசைந்து கொள்ளவும்.
பனீரை துறுவிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைமாவை வறுத்துக் கொள்ளவும்.
வேகவைத்து மசித்துள்ள உருளைக்கிழங்கு, பட்டாணியுடன் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
இத்துடன் துறுவிய பனீர், நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, வறுத்த கடலை மாவு, மஞ்சள்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை கட்லெட் வடிவங்களாக செய்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட் வடிவங்களை ஒரு முறைக்கு மூன்று கட்லெட் னிதம் போட்டு சிவக்கப் பொரித்து (Deep fry) எடுத்து உபயோகிக்கவும்.
தக்காளி சாசுடன் (Tomato Sauce) பரிமாறலாம்.