Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Mitr My Friend
(இந்திய ஆங்கில திரைப்படம்)
நடிகை ரேவதி இயக்கிய ஆங்கில திரைப்படம். ‘Telephoto Entertainments Limited’ சார்பாக படத்தைத் தயாரித்தவர் சுரேஷ் மேனன்.
2002 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடைபெற்றது. சில காட்சிகள் மட்டுமே இந்தியாவில். 95 சதவிகிதம் படப்பிடிப்பு அமெரிக்காவில்தான்.
படத்தின் கதாநாயகி- ஷோபனா.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
15 Park Avenue
(இந்திய ஆங்கில திரைப்படம்)
அபர்ணா சென் இயக்கிய ஒரு மாறுபட்ட கதைக் கருவைக் கொண்ட குறிப்பிடத்தக்க திரைப்படம்.
2005ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் அந்த ஆண்டின் ‘இந்தியாவில் உருவான சிறந்த ஆங்கிலப் படம்’ என்பதற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது.
Schizophrenia என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. கதையை அபர்ணா சென்னே எழுதியிருக்கிறார்.
மிட்டாலி என்ற மீத்தி Schizophreniaவால் பாதிக்கப்பட்டவள்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Aftershock
(சீன திரைப்படம்)
சில திரைப் படங்களை, பார்த்த சில நிமிடங்களிலேயே மறந்து விடுவோம். சில திரைப்படங்கள் சில நாட்கள் நம் மனங்களில் தங்கி நிற்கும். சில சிறந்த திரைப் படங்கள் மட்டுமே எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனங்களை விட்டு சிறிதும் நீங்காமல், அப்படியே சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தகைய ஒரு படமே இது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
A River Runs Through It
(ஹாலிவுட் திரைப்படம்)
அமெரிக்கப் படம் என்றாலே படம் முழுக்க துப்பாக்கிகளால் குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பார்கள், கார்கள் ஒன்றோடொன்று மோதி வானத்தில் பறந்து கொண்டிருக்கும், ஏராளமான மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் நெருப்பு பிடித்து எரிந்து கொண்டிருக்கும் என்றுதான் நம்மில் பெரும்பாலோரின் மனங்களில் தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட ஒன்றல்ல.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கோலங்ஙள்
(மலையாள திரைப்படம்)
மலையாள பட உலகிற்கு பல அருமையான படங்களை இயக்கி, பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ். அவர் இயக்கிய ஒரு மிகச் சிறந்த படமிது. இந்தப் படத்தின் கதையை எழுதியவரும் அவரேதான்.
1981ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் பி.ஜே.ஆன்டனி எழுதிய ‘ஒரு கிராமத்தின்டெ ஆத்மாவு’ என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.