சசினாஸ்
- Details
- Wednesday, 23 May 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7007

குபேர புத்திரனாக வளர்ந்து, வறுமை சூழ்ந்த ஒரு இளைஞனாக வாழ்க்கைப் பாதையில் நான் இறங்கி நடந்தேன். தாங்க முடியாத கொடுமையான தனிமையில், மனம் முழுக்க கவலைகள் ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்த என்னுடைய இருபத்து இரண்டாவது வயது. பள்ளி இறுதி வகுப்பு முடித்து அதில் தேர்ச்சி பெற்ற சான்றிதழைக் கையில் வைத்துக் கொண்டு வேலை தேடி ஒவ்வொரு அலுவலகத்தின் படியாக ஏறி இறங்கி விரக்தியடைந்து நான் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தேன்.