Category: புதினம் Written by சுரா
ஒரு கோடைகாலத்தின் இரவு நேரத்தில், நகரத்தின் எல்லையில் தனியாக இருந்த ஒரு தெருவில் நான் ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டேன். ஒரு பெரிய சேற்றுக் குவியலுக்கு நடுவில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். சிறு குழந்தைகளைப்போல அவள் தன்னுடைய கால்களால் சேற்றையும் நீரையும் மிதித்துத் தெறிக்கச் செய்து கொண்டிருந்தாள். சேற்று நீரைத் தெறிக்கச் செய்ததுடன், மூக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் போன்ற குரலில் ஏதோ ஒரு மோசமான பாடலை அவள் பாடிக் கொண்டும் இருந்தாள்.
Category: புதினம் Written by சுரா
சுராவின் முன்னுரை
ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான டி.எச். லாரன்ஸ் (D.H. Lawrence) எழுதிய ‘The Prussian officer’ என்ற புதினத்தை ‘ராணுவ அதிகாரி’ (Raanuva Adhikari) என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
மிகவும் வறுமை வாய்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டவர். இவர் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட.
Category: புதினம் Written by சுரா
சாம்பல் நிறத்தில் இருந்த புகையை வெளியே விட்டவாறு, ஒரு பாம்பைப்போல வளைந்து வளைந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்தப் புகைவண்டியை, மஞ்சள் நிறத்தைக் கொண்ட கோதுமை வயல்கள் நிறைந்த அந்தச் சமவெளிப் பகுதி விழுங்கியது. புகைவண்டி துப்பிய புகை அந்த வெப்பம் நிறைந்த வெளியில் கலந்தது. அதேபோன்று அந்த பரந்து விரிந்து கிடந்த சமவெளியில் நிறைந்திருந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு புகைவண்டியின் கர்ண கொடூரமான சத்தமும் அந்தக் காற்றில் கரைந்து போனது. சமவெளிக்கு மத்தியில் அமைதியைக் கெடுப்பதைப் போல ஒரு சிறிய புகைவண்டி நிலையம் கண்களில் தெரிந்தது.
Category: புதினம் Written by சுரா
ஒரே நேரத்தில் போராளியாகவும் எழுத்தாளராகவும் இருந்து ஆச்சரியப்பட வைக்கும் மனிதர் ந்குகி வா தியான்கோ. இவர் 1938-ஆம் ஆண்டில் கென்யாவில் உள்ள லிமுரு என்ற இடத்தில் பிறந்தவர். அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா போர் முறைகளைக் கையாண்டிருக்கும் தியான்கோ, பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், சிறையில் இருக்கும்போதும் தொடர்ந்து எழுதி, சிறையில் தள்ளியவர்களைத் திகைக்க வைத்திருக்கிறார்.
கிகுயு மொழியின் ஆழத்தையும் அழகையும் தன்னுடைய எழுத்துகளில் கொண்டு வந்த தியான்கோவை கென்யாவின் மார்க்வெஸ் என்று கூறலாம்.