Category: புதினம் Written by சுரா
நான் ஐம்பத்தெட்டாவது வயதில் வேலையை உதறி எறிந்துவிட்டு, ஒரு நடுத்தரமான நகரத்தில் போய்த் தங்கியபோது என்னுடைய பழைய நண்பர்கள் எனக்கு கவலை நிறைந்த கடிதங்களை எழுதினார்கள். நான் எந்த வழியில் நேரத்தை நகர்த்துவேன் என்று கேட்டார்கள். முடிந்தவரையில் சீக்கிரம் ஒரு டென்னிஸ் க்ளப்பில்சேர்ந்து, பல வருடங்களுக்கு முன்னால் விளையாடத் தெரிந்திருந்த அந்த விளையாட்டில் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஈடுபடும்படி அவர்களில் சிலர் எனக்கு அறிவுரை கூறியிருந்தார்கள். நகரத்தில் இருந்த பிரிட்டிஷ்கவுன் சில் நூலகத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும்...
Category: புதினம் Written by சுரா
நேரம் இருட்டும் வரை நான் மற்ற இளம் பெண்களைப் போல உற்சாகத்துடன் காணப் பட்டேன். என்னிடம் இருக்கும் அழகோ, பண வசதியோ, கல்வித் தகுதியோ இல்லாமலிருந்த இளம் பெண்களைப் பற்றி கிண்டல் பண்ணிச் சிரிப்பது, அவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது போன்ற பொழுது போக்கு விஷயங்களில் நான் ஆர்வத்தைச் செலுத்தினேன். பிரகாசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண் நான் என்று எனக்கு அருகில் இருக்கும் அழகான மாளிகை களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூறுவார்கள்.
Category: புதினம் Written by சுரா
சுராவின் முன்னுரை
ரஷ்ய மொழியில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஃப்யோடர் தாஸ்தாயெவ்ஸ்கி (Fyodor Dostoevsky) 1848ஆம் ஆண்டில் எழுதிய ‘White Nights’ என்ற புதினத்தை ‘வெளுத்த இரவுகள்’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
நாஸ்தென்கா என்ற அழகு தேவதையை இரண்டு இளைஞர்கள் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் மிகுந்த நட்புணர்வுடன் பழகுகிறாள் நாஸ்தென்கா. ஆனால், வாழ்க்கை என்று வரும்போது, அவர்களில் ஒருவனைத்தான் அவள் காதலனாக ஏற்றுக் கொள்ள முடியும்.
Category: புதினம் Written by சுரா
சுராவின் முன்னுரை
நான் மிகவும் மதிக்கும் எஸ்.கெ. பொற்றெக் காட் (S.K.Pottekkatt) எழுதிய ‘ஒரு காதல் கதை’(Oru kadhal kadhai) என்ற புதினத்தை தமிழ் இலக்கிய அன்பர்களுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். ‘ஒரு தேசத்தின் கதை’(Oru Desathin Kadhai) என்ற புதினத்திற்காக தேசிய சாகித்ய அகாடமி (National Sahitya Academy Award) பரிசைப் பெற்றவர் எஸ்.கெ. பொற்றெக்காட். 1980-ல் அவருக்கு ‘ஞானபீடம்’ (Gnanapeedam) வழங்கப்பட்டது.