Category: சிறுகதைகள் Written by சுரா
எனக்கு மிகவும் பிடித்தது ‘நிஸாகந்தி’யின் வாசனைதான்.‘நைட்குயின்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்தச் செடியின் சிறிய மலர்களிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து வரும் வாசனைக்கு ஈடு இணையாக வேறு எந்த வாசனையும் இல்லை என்பதே உண்மை.
Category: சிறுகதைகள் Written by சுரா
"நான் இங்கே இருக்குறப்போ இந்த மாதிரி தான்தோன்றித்தனமான காரியங்கள் நடக்குறதுக்கு நிச்சயமா சம்மதிக்க மாட்டேன். இதென்ன கூத்தா இருக்கு. அந்தப் புலையப் பொண்ணு கூட இனிமேல் பழகக்கூடாதுன்னு நீங்கதான் மகள் கிட்ட கண்டிச்சு சொல்லணும். தாய் இல்லாத பொண்ணுன்னு அவ என்ன பண்ணினாலும், கண்டபடி பிடிவாதம் பிடிச்சாலும் அதைக் கண்டிக்காம அவ போக்குலேயே விட்டுக்கிட்டு இருக்குறது நீங்கதான்.
Category: சிறுகதைகள் Written by சுரா
வத்சராஜன் என்ற சிறுவனைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதிற்குள் அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவேன். 'வத்சராஜா' உன்னை எப்போதும் கடவுள் காப்பாற்றட்டும்!'
இந்த பிரார்த்தனை என் மனதின் அடித்தளத்திலிருந்து வருவது. இது வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
Category: சிறுகதைகள் Written by சுரா
நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது.
Last Updated on Tuesday, 12 February 2013 13:16
Hits: 8603